உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, June 03, 2009
 
# 284 அலைமோதும் நிலைபோதும்
ராக் அன்ட் ரோல் பாடல் வடிவில் எழுதிய இன்னொரு பாடல் இது:

அலைமோதும்
நிலைபோதும்
விடை சொன்னால் நோகாதே
நிலைமாற்றம் ஒன்றேதான்
வாடிக்கை வினையிங்கே

சூராவளிக் காற்றில் நீந்தும் பாய்மரம்தானே காதல்
ஆலமரம் சாய்த்த புயலில் காலூன்றும் புல் காதல்

விளக்கை ஊதி அனைத்திடலாம்
இதயம் அடுப்பாய் எரிகிறதே
நாளை மண்ணில் கால் வைத்தால்
நேற்றின் நிழலே படிகிறதே

சூராவளிக் காற்றில் நீந்தும் பாய்மரம்தானே காதல்
ஆலமரம் சாய்த்த புயலில் காலூன்றும் புல் காதல்

நான் பார்க்கும் கண்ணாடி
என்றைக்கும் பின்னோடி
என் தோற்றம் தெரியவில்லை
உன் மறைவு தெரிகிறது

சூராவளிக் காற்றில் நீந்தும் பாய்மரம்தானே காதல்
ஆலமரம் சாய்த்த புயலில் காலூன்றும் புல் காதல்

அலைமோதும்
நிலைபோதும்
விடை சொன்னால் நோகாதே
நிலைமாற்றம் ஒன்றேதான்
வாடிக்கை வினையிங்கே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, May 20, 2009
 
# 283 உதய காலத்தை நோக்கி
காலச் சக்கரமே
கொஞ்சம் நில்லு
என்னை இறக்கிவிட்டு
உன் வழி செல்லு

நாளை நாளையென்று
நெட்டித்தள்ளிப் போவது உன் இயல்பு
உன் பயணிகள் இறுதி அடைந்துதான்
உன்னை விலகுவர்
நீயோ இறுதியற்றவன்
இன்னொரு நாளையைத்தேடி
இன்றையும் நேற்றைப்போல்
அலட்சியமாக சுருட்டிவிடுவாய்

எனக்குத் தேவையில்லை
இந்த குறிக்கோலற்ற
அசுரப் பயணம்

நான் வந்த வழியே
விரும்பிய இடங்களில்
மீண்டும் தங்கப்போகிறேன்

இன்றில் கொஞ்சம் இளைப்பாரி
நேற்றில் கொஞ்சம் நீந்தி
விரிசலில்லாத சொந்தங்களை...
நேசம் மறவாத நட்பை...
விலைபேசாத அன்பை...
உதய காலத்தை நோக்கி
ஊர்ந்து செல்லப்போகிறேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, May 14, 2009
 
# 282 கையடக்கக் காதலி
என் கையடக்கக் காதலி
பொருப்பாக தலைகுனிந்து
என் மனதிற்கேற்றபடி
தலையசைத்து சிந்துகிறாள்
உயிர் மையை

அவள் உதிரம்
உமிழ் நீர்
இரண்டும் ஒரே நிரம்
என் சிந்தனையின் நிறங்களெல்லாம்
அதில் நிழலாய் வெளிப்படும்

எங்கள் கலாபக் கலவை
வாசிக்கும் விழி மகுடிக்கு
வெள்ளைத்தாளிலோ
மின் ஏட்டிலோ
படம் எடுத்தாடும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 281 படைப்பு
ஒரு கலைஞனின் படைப்பை
பிரசவம் என்று கூறக்
கேட்டிருக்கிறேன்

ஆனால் மனித பிரசவத்தில்
வெளியீட்டில்தான் வேதனையின்
உச்சம்.

கலைப்பிரசவத்திலோ சிந்தனை
உருவெடுக்கும் வேளியீடுதான்
பூரிப்பின் உச்சம்.

பிறர் மதிப்பீட்டில்தான்
தன் படைப்பின் பெருமை
ஒரு தாய்க்கு பெருமிதம் அளிக்கிறது.

தன் படைப்பை வெளியிட்டபின்
அதன் வரவேற்ப்பு
கலைஞனுக்கு ஒரு
நினைவு நாளைப்போல்;
படைத்து முடித்ததும்
அடுத்த படைப்பின் பிரசவத்தில்
ஆழ்ந்துவிடுகிறான்.

ஒரு குழந்தையின் வளர்ப்பில்தான்
தாயின் வெற்றி இருக்கிறது.

கலைஞனின் வெற்றியோ
அவன் சிந்தனையின் கரு
படைப்பாக வெளியேறும் பொழுதே
முழுமையடைந்து விடுகிறது

ஆரவாரம், அங்கலாய்ப்பு
ஆதரவு, எதிர்ப்பு
இதையெல்லாம் தனக்குள்ளே
தாண்டவமாடித் தன் படைப்பிலேயே
புரிந்துகொள்கிறான்
கலைஞன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, April 20, 2009
 
# 280 காதலும் பூமியும்
காதலும் பூமியும் இயல்பானவை
ஆனால் ஒன்றுக்கொன்று முறனானவை

காதலில் பச்சை சேர்த்தால் வீழ வைக்கும்
பூமியில் பச்சை சேர்த்தால் வாழ வைக்கும்

காதலிலே கால்தடமும் புனிதம்
பூமியிலே கரியின் கால்தடம் சேதம்

காதலை மறைக்க சுவர் எழுப்பினால் கொண்டாட்டம்
பூமியை மறைத்து சுவர் எழுப்பினால் திண்டாட்டம்

காதல் நமக்குள்ளே தோன்றி மறைகிறது
பூமியில் நாம் தோன்றி அதற்குள்ளே மறைகிறோம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, April 08, 2009
 
# 279 ஆரம்பத்தின் எதிரொலி
ஆரம்பத்தின் எதிரொலியை
இறுதியில் கேட்ட மூடன் நான்

சோலை இருந்த நினைவில்
அங்கு செல்லத் தொடங்கினேன்
கண்கள் முட்டி நின்றன
தொழிற்சாலை இரும்பில்

சில நேரம்
உள்ளின் அவலம்
வெளியில் விளக்கப்படுகிறது

கோவில் விளக்கில்
கண்கள் உறசினோம் அன்று
அகம் முகம் அப்புறம் அலசினோம்
வேண்டிக்கொள்ள வேண்டியதில்லை
வரம் கிடைக்க
என நினைத்த காலமது

நாளடைவில் நாம் வளர்ந்தோம்
காலம் குனிய வைத்தது

என் தகுதியறியாமல்
நீ உன்னை வழங்கினாய்
உன் தகுதியறிந்த நான்
என்னை மறுத்துவிட்டேன்

பிறகு தெரிந்தது
நீ பற்ற நினைத்த குட்டிச்சுவர்
புதைகுழியை தவிர்க்க என்று

நீ விழுந்த புதைகுழியும்
புஷ்பகுளமாகுமென்று நம்பினேன்

இன்று புரிகிறது
கல்லறை மலர்கள்
கால் நனைப்பதில்லையென்று
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, April 03, 2009
 
# 278 ஜெய் கோ-ii
'ஜெய் கோ' என்ற இந்திப் பாடலை நண்பர் ஒருவர், ஒரு மதிக்கத்தக்க சமூக சேவை குழுவிற்கு பயன் படுத்தலாமா என்று நினைக்க, அதற்கு எழுதியதிது. #277-க்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் இதன் நோக்கம் சற்றே வேறு.

ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ
தேவை நீக்க சேவை செய்வோம் பாரதத்திலே
எங்க கைகள் சேர்ந்துவிட்டா எல்லையே இல்லே

ஜெய் கோ ஜெய் கோ

தேவை நீக்க சேவை செய்வோம் பாரதத்திலே
எங்க கைகள் சேர்ந்துவிட்டா எல்லையே இல்லே
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ


ஆத்திரத்தில் சாத்திரத்தை சாடிவிட்டு சாயாதே
ஊக்கமெல்லாம் உன்னிடத்தில் யாரிடமும் தேடாதே
நாளையென்ற நாளையொட்டி வேலைசெய்ய தோயாதே
பூட்டிவைத்த வித்தையெல்லாம் காட்டிவிடு ஓயாதே
தேவை நீக்க சேவை செய்வோம் பாரதத்திலே
எங்க கைகள் சேர்ந்துவிட்டா எல்லையே இல்லே
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ


தூக்கிடு கை தூக்கிடு நம்மைச் சேர்ந்தவன் வெற்றிக்கு போரிடு
எட்டிடு நீயும் எட்டிடு உந்தன்
சொந்தச் சிகரம் ஒன்றை எட்டிடு
ஊர் உதவும் கரங்கள் கொண்டு ஏழ்மைக்கோட்டை அழித்துப் போடு

ஊர் உதவும் கரங்கள் கொண்டு ஏழ்மைக்கோட்டை அழித்துப் போடு
தேவை நீக்க சேவை செய்வோம் பாரதத்திலே
எங்க கைகள் சேர்ந்துவிட்டா எல்லையே இல்லே

ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ

வெட்டிடு வேர் வெட்டிடு வீழ்த்தும்
எண்ணங்களை வெட்டிடு
கட்டிடு நீ கட்டிடு குப்பத்தை
கோபுரமாய் கட்டிடு

சேற்று மண்ணை பாதையென
ஆக்கிவிட்டுக் கொண்டாடு

ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 277 ஜெய் கோ
'ஜெய் கோ' என்ற இந்திப் பாடலை நண்பர் ஒருவர் தமிழில் பாட விரும்பியதின் விளைவு இது.

ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ
ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ

ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ


ஆத்திரத்தில் சாத்திரத்தை சாடிவிட்டு சாயாதே
ஊக்கமெல்லாம் உன்னிடத்தில் யாரிடமும் தேடாதே
நாளையென்ற நாளையொட்டி வேலைசெய்ய தோயாதே
பூட்டிவைத்த வித்தையெல்லாம் காட்டிவிடு ஓயாதே
ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ


தட்டிடு கை தட்டிடு நம்மைச் சேர்ந்தவன் வெற்றிக்கு வாழ்த்திடு
எட்டிடு நீயும் எட்டிடு உந்தன்
சொந்தச் சிகரம் ஒன்றை எட்டிடு
சூடு தந்த சோகத் தீயும் பாடம் நண்பா கேட்டுக்கோடா

சூடு தந்த சோகத் தீயும் பாடம் நண்பா கேட்டுக்கோடா
ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ

வெட்டிடு வேர் வெட்டிடு வீழ்த்தும்
எண்ணங்களை வெட்டிடு
கற்றிடு நீ கற்றிடு ஆய
கலைகளெல்லாம் கற்றிடு

சேற்று மண்ணும் பாதையென்று
தேர் இழுத்துக் கொண்டாடு

ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, March 25, 2009
 
# 276 தூள்
dhooL.com-இன் 1000-மாவது பாடலை முன்னிட்டு எழுதியது.

தூள் எனக்கு
ஆயிரம் கிளைகள் விரித்தாடும்
ஆலமரத்தடி

என் இசைத்தேனை அதிகரித்து
அடைகாத்து வரும்
தேன்கூடு

கை விரல்கள் தொழில் புரிய
காதுகள் மட்டும் திருடித் திங்கும்
திருட்டுக் கனி

என் இசைக் கோவில் அவதாரங்களின்
கொலு வரிசை
என் நினைவுக்கற்களின்
பின்னணி முலாம்

என் ரசனையின் நாட்குறிப்பு
என் பித்தின் புலனாய்வு
என் பக்தியின் பரிகாசம்
என் அறியாமையின் அறிவிப்பு
என் பயணத்தின் மனப்பாடம்
என் திரவியத் திரைகடல்
என் நட்பின் துறைமுகம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, March 20, 2009
 
# 275 தாய்வீடு
274-க்கு எழுதிய மெட்டிற்கே வேறு விதத்தில் இயற்கை பராமரிப்பு, பச்சை புரட்சியென்று எழுதியது:

பூரிக்கும் உள்ளம் இது இயற்கை நாடும்
பார்வைக்கு யாவும் பரவசமாகும்
வித வித உடைகள் மாற்றுவாள்
வெப்பம், பனி, மழை காட்டுவாள்

இதயங்கள் போலே உதயம்
ஒவ்வொன்றும் ஒரு குனமே
ஒரு நிறமாய் நின்ற இலைகள்
பல வகையாய் மாறிவருமே

பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது

பாலைமண் விதையெலாம்
ஒருநாள் மழையில் பூக்கலாம்,
பிறந்ததும் நடக்கிற
பிஞ்சுக் குதிரை பார்க்கலாம்,
எரிமலையும் செதுக்கிப் போகும் சிற்பமே
இதையெல்லாம் மறக்கலாமா மனிதனே?
உயிர்மூச்சையும் தரும் தாவரம் வாழ வைப்போமா?

பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது

ஓடைக்கே ஆடைபோல்
இலைகள் படர்ந்த அம்சமே
காணத்தான் முடியுமா
கட்டிட நகரம் கூடிவந்தால்?
எதிர்கால தாகத்திற்கு ஒட்டகம்
நிகழ்காலம் சேமிப்பதுபோல் நாமுமே
தாய்பூமியை பல தலைமுறை வாழ வைப்போமே!

பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, March 16, 2009
 
# 274 கோரிக்கை
நண்பன் சிரீகாந்தின் இசைக்கு இயற்றிய பாடலிது. ஒரு இளம் பெண் இலையுதிர்காலத்தை நீடிக்கச்சொல்லி இயற்கை அண்ணையிடம் கோரிக்கையிடுவதாய் கற்பனை.

பூரிக்கும் உள்ளம் இது இலையுதிர்காலம்
வாடைக்கு முன்னே புதுப்பிக்கும் காலம்
வித வித உடைகள் மாற்றுவாள்
பழையதை உலுக்கியும் நீக்குவாள்

ஒளி கொஞ்சம் மங்கியதாலே
பல வண்ணம் தென்படுமே
ஒரு நிறமாய் நின்ற இலைகள்
பல தினுசாய் மாறிவருமே

முத்து மனதம்மா
சற்று பொரு அம்மா
வாடை காற்றைத் தாமதித்து
வண்ணம் காட்டம்மா

வாடிக்கை என்பதால்
மீண்டும் அதையே செய்வதா?
கோரிக்கை செய்திடும்
குமரியின் பேச்சைக் கேட்பதால்
முக்காடு போடும் முகங்கள் மலருமே
எங்கெங்கும் சிரித்த படியே மனிதரும்,
நடமாடிட, கலை கூடிட, நீயும் செய்வாயா?

முத்து மனதம்மா
சற்று பொரு அம்மா
வாடை காற்றைத் தாமதித்து
வண்ணம் காட்டம்மா

ஓடைக்கே ஆடைபோல்
இலைகள் படர்ந்த அம்சமே
காணத்தான் முடியுமா?
குளிரும் பனியும் கொண்டுவந்தால்
படகெல்லாம் ஓரம்கட்டி கிடக்குமே
உடலெல்லாம் விரைத்த படியே மனிதரும்,
சிரிக்காமலே, ரசிக்காமலே, இயந்திரம்போலே நகருவதா?

முத்து மனதம்மா
சற்று பொரு அம்மா
வாடை காற்றைத் தாமதித்து
வண்ணம் காட்டம்மா
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, February 05, 2009
 
# 273 வானவில்
மழையின் இன்ப அதிர்ச்சிக்கு
சோலை உயர்த்திய புருவம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, January 02, 2009
 
# 272 புத்தாண்டு
காலதேவதையின் பாதையில்
இன்னொரு கல்
எதிர்பார்ப்புகளுக்கும் ஏக்கங்களுக்கும்
புத்துயிர்
பழமைக்கு கொடும்பாவி
புதுமைக்கு தாலாட்டு

தோல்விக்கு மறதித் தைலம்
வெற்றிக்கு பண்டிகை நாள்

உறவுக்கு உறுதி சேர்க்கும்
அடிமண்
தனிமைக்கு தழும்பு சேர்க்கும்
தவம்

முதுமையின் மதியில்
இன்னுமோர் சிலந்திவலை
இளமையின் அனுபவத்தில்
இன்னுமோர் பரிசு

வாழ்வுடன் மறுபடியும்
ஒரு ஒப்பந்தம்
நினைவிற்கு இன்னொரு
சுரங்கம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Sunday, December 07, 2008
 
# 271 கவிதை வாழும் கண்ணில்
அன்பிற்கு சின்னமாய்
பூத்த பூக்களைக் கிள்ளுவான்
கழுத்தில் ரத்தம் சொட்டுமுன்னே
பொட்டலமாய்க் கட்டுவான்
அவளைக் கண்டு இலகுவதை
பகிரங்கமாய் சொல்லுவான்

எக்கால கட்டமும்
எட்டாது நிற்கும்
கவிஞன் மனது இதைக்
குற்றமென்றெ திட்டும்,
அன்பைக் காட்டுவதில் கூட
அரக்கத்தனம் தேவையா?

உருவங்கள் ஒன்று
வாழும் உலகங்கள் வேறு
கவிஞனின் நெஞ்சில்
தர்மங்கள் வேறு

பூமித்தாயின் சோகத்திற்கு
வானம் சிந்தும் ஆருதல்
பசையில்லா பார்வைக்கு
வெரும் மழையாய் சேர்ந்திடும்

கவிதையில்லா கண்ணுக்கு
அது பறிபோன பட்டம்
கவிதை வாழும் கண்ணில்
அது காற்றில் பூத்த தாமரை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, October 30, 2008
 
# 270 மணிக்குயில்
நண்பன் முரளியின் மெட்டிற்கு இயற்றிய பாடலிது.

கிளி கூறிய வார்த்தைகள் நம்பிடவா?
இது என் மனம் ஏற்றிய நாடகமா?
நிலைமாறா காதல் மார்கண்டேயனா?
இளம்காதலின் ஆயுளும் அறைநொடியா?
சிறு ஊடலில் சீர்கெடும் சங்கதியா?
சுமை தாங்காதென்றால் காதல் காதலா?

அனுபல்லவி:
===========

சேராத ஆசைச் சொல்லை வாங்கித் தென்றல் போகுதே
தாங்காத சோகம் கண்டு பூவும் நீரைக் கோர்க்குதே
ஆறாத காயத்தாலே நெஞ்சம் இறுகிடுதே

(கிளி...

சரணம் 1:
==========

மேலோட்டம் மேய்வதன் பேரோ
மெய்க்காதல் இல்லையடி
அனுசரணை உறவின் ஆதாரம்
அதிகாரம் அழிக்குமடி

மனதாற மாடத்தில் கூவும்
மணிக் குயிலைப் போல் நினைவு
மதி கூறும் போதனை யாவும்
உணர்ச்சியிடம் தோற்கிறது

விழியிலவள் தேவதை என்றும்
நெஞ்சிலோ வேகின்றாள்
கவிஞனின் காதல் மடலை
கல்லரையில் ஏன் எரித்தாள் ?

மோகவுரை போதும் என்று
முடிவுரை படிக்கின்றாள்

(கிளி...

சரணம் 2:
===========

காதல் நெஞ்சம் தாங்கும் எதையும் எனும்
சொல் பொய்யாகிறதே
சாதல் வரை சேர்தல் எனும் நினைப்பு
நடக்க மறுக்கிறதே

பாதகியைப் பார்க்காமல் இதயம்
உருகி நனைகிறதே
சீதையினைப் போலே என நினைத்து
தீயில் குளிக்கிறதே

விழியிலவள் தேவதை என்றும்
நெஞ்சிலோ வேகின்றாள்
கவிஞனின் காதல் மடலை
கல்லரையில் ஏன் எரித்தாள் ?

நிருமுத்த இதயமது
நிரயம் ஆனது ஏன் ?

(கிளி...

=======

காதலி என்றோ வேறிடம் சென்றாள்
காதலைத்தானே அவன் வென்றான்

காதலி என்றோ வேறிடம் சென்றாள்
காதலைத்தானே அவன் வென்றான்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, October 22, 2008
 
# 269 சாமக் கோயில்
மேடையிலிருந்து கூரைவரை
வீற்றிருக்கும் வெள்ளிக் கம்பம்

அதில் கொடி சுற்றி சுழன்றேறும் கிளையாக
கோதையவள் ஆடிடுவாள்
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னையே
துயிலுரித்து

வாலிபக் கோமான்களும் வயோதிகச் சீமான்களும்
சன்னதியைச் சுற்றி சம்மனிட்டு
அவள் அந்தரங்க அழகை அசைபோட்டு
அர்ச்சனைத் தட்டாகும் உள்ளாடைக்குள்
ஒன்று முதல் நூறுவரை வசதிப்படியோ
வசியத்தின்படியோ
ஒருபாதியாய் மடித்து
நாரில் பூவைக்கும் நளினத்துடன்
நயமாகச் சொருகிடுவார்

அங்குலம் அங்குலமாய் உடை
அங்கே உரித்துவர
கண்ணாடி சீசாக்களில் சாராயம் தீர்ந்துவர
ஊளையிடும் இசைக்கருவி
காமத்தை விசிறிவிட

நுழைவாயில் கட்டணம்
தரிசிக்கும் கட்டணம்
உண்ண உறிஞ்சிட கூடுதல் கட்டணமென்று
தேர்தல் தொகுதியென தோன்றுமளவுக்கு
பணமிங்கே புரலும்
வசூலிக்கும் விடுதிக்கும்
தரிசித்த பக்தருக்கும்
இங்கு தினந்தோரும் திருநாளே

காட்சிப்பொருளான கன்னிக்கோ
கல்லூரி செலவிற்கும்
குடும்பச் செலவிற்கும்
பாலமாக
இந்த மோப்ப நாய்களின்
மத்தியில் மாமிசத் துண்டாய்
தான் நடிப்பதாய் ஏளனம்
"இன்னும் சில நாட்களே"
என்று அவள் மனதில் முனுமுனுக்கும்
இருமாப்பு மந்திரம்

இச்சையை பட்டியலிட்டு
இருட்டுலகில் பதுக்கிவிட்டால்
துன்பமும் இன்பமும்
கொடுக்கல் வாங்கல்
என்று இருதரப்பாய்
பிறிந்துவிடும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 268 முதற்காதலே
நண்பர் மாருதி நம்பியின் இசை வடிவிற்கு இயற்றிய பாடலிது.

M:
முதற்காதலே என்றும் மறவாததே
உணர்த்தாததா உள்ளம் உணராததா

F:
அடுத்தடுத்து சொந்தம் பெருக்கெடுத்தும்
பருவத்தில் கண்ட காதல் முதலானதே

முதற்காதலே என்றும் மறவாததே
உணர்த்தாததா உள்ளம் உணராததா

M:
படிக்கும்போது பழகும்போது நடந்ததெலாம்
நினைவே கிளறிவிட

F:
அழைத்துப் போகும் இளமைக்காலம் நீந்திடலாம்

(முதற்காதலே...


F:
இரவுகலிலும் பிரகாசமாய் முகம் மாறுவார்
சுடரென சுடும் அவன் புகும் இவள் மனம்
உலகிவரது மைதானமாய் சுழன்றாடுவார்

M:
கடற்கரையிலும் கலாபமாய் முகம் தேடுவார்
தனிப் படுக்கையில் தவித்திட தவித்திட
இயக்கமெலாம் இவள் அவன் அவன் இவள்

F:
மயங்காது மோகம் உண்டா
கலங்காது காதல் உண்டா

M:
ஆடல் பாடல் ஊடல் கூடல் நடந்திட
காலம் சென்றும் காதல் வரும்

(முதற்காதலே...


M:
இடைவெளியினை மதித்திடா இளம் காளைதான்
உள்ளம் பறித்தவன் உரிமையில் துடித்தவன்
அவள் மதிப்பினை அடைந்துதான் எடுத்தாளுவான்

F:
அசைந்தெரிந்திடும் அகல் ஒளி இவள் பாங்குதான்
உணர்வலைகளை மறபெனும் சுவரிட்டு
இவள் தவிப்பதை மறைத்துத்தான் புகழ் காக்கிறாள்


M:
இளம் காதல் யாகம் தானே
நிகழ்கால மோகம் தேனே

F:
மீண்டும் மீண்டும் நீயும் நானும் இணைந்திட
காதல் நெஞ்சில் காலம் சிறை

(முதற்காதலே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, October 21, 2008
 
# 267 கடன் கூடு
செந்தூர வாகன விளக்கொளி
இருவிழியாய் ஜொலித்து நகரும்
என் முன்னே வெள்ளப்பெருக்காய்
கொந்தலித்த எரிமலையாய்...

கண் முன்னே நீளும் நீளும் சாலைகள்
நெஞ்செங்கும் யாகம்
வேகும் நினைவின் ஓலைகள்

விடுதி விட்டு வீடு செல்லும்
நடுவர்க நாயகர்கள்
வெளியூரில் படையெடுத்து
தரம் குறைந்த தொகுதியில்
தகுதி மறந்து மாளிகை கட்ட

விதி என்னும் சுடலைமாடன்
விறகுக் கிடங்கை விரிவாக்கினான்

ஒளிவு மறைவாய் உண்மை இருக்க
ஒப்பந்தங்கள் கை மாற
கடன் கொடுத்த கடன் காரர்கள்
அரசாங்கத்தில் அடைக்கலம்

பணங்காய் உருண்டு மண்ணில் விழ
குருவிக்கு தலை வலி
மருந்தாய் கிடைத்தது முக்காடு

அனாதைப் பினமாய் எத்தனை வீடுகள்
பொலிவிழந்து பூட்டி நிற்பதோ?

ஆண்மை இழந்த அரசாட்சி
அம்பலமானது அனைவருக்கும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, August 20, 2008
 
# 266 கைவிரல் காவியம்
கறுப்பு வெள்ளை பளிங்குப் படிகள்
ஒன்றையொன்று ஒட்டி நிற்க
விரல் படை அதில் தடம் பதித்து
ஓடி விளையாடிட
காவியம் படைக்கும் இசை
கண்ணெதிரே பிறந்து
காதுகளில் தவழ்ந்து
நினைவுலகில் வளர்கிறது

இந்த நினைவுக்குழந்தையை
நினைத்த நேரம் அள்ளிக் கொஞ்ச
முடிந்தபோதும்
மேலும் பல இசைக் குழந்தைகளை
இனம் கண்டு நினைவுக்கூடத்தில்
சேர்ப்பதே என் ஓயாத வேட்கை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, August 14, 2008
 
# 265 எல்லை
நெஞ்சத்தில் அன்றாடம்
நீங்காது மன்றாடும்
சொல்லாத ஆசையெல்லாம்
எங்கே நிறைவேறும்?

இன்பத்திற்கெல்லைகள்
என்றெல்லாம் சொல்லாதே
எண்ணத்தின் வறட்சிதானே
எல்லை என்னாளும்

பழகாத ஒவ்வொன்றும்
தவறென்று சொல்கின்றாய்
புரியாத ஒவ்வொன்றும்
பிடிக்காது என்கின்றாய்

சமுதாயம் மக்களுக்காக
என்பதை ஏனோ மறக்கின்றாய்
இன்றைய பழக்கங்கள்
நாளைய வழக்கங்கள்

புறக்கனித்த ஆசையெல்லாம்
புலப்படுத்தும் புலவன் நான்
புறமுதுகு காட்டுவது
போரில் மட்டும் குற்றமில்லை

தானாக தோன்றியதின் இயல்பை
மறுக்கின்ற பிடிவாதம்
மெய்யான தேடலின் இயல்பை
ஏற்பதில் கிடையாதா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, August 04, 2008
 
# 264 மலையின் முகடுகள்
நண்பர் ரெகுராம் தங்கிராலாவின் மெட்டிற்கு எழுதிய பாடலிது.

மலையின் முகடுகள் வளைந்து நெளிந்திளைப்பாறுதே
மலையின் முகடுகள் வளைந்து நெளிந்திளைப்பாறுதே

வசந்த வானை வேலிபோட்டு காக்குதோ?
நனைந்த மேகம் காயும் கொடியாய் ஆகுதோ?

இயற்கையே உன்னை கேட்கத்தானே சிகரம் நோக்கி
ஏறுகின்றேன்

(மலையின்...

----------------

சரணம் 1

கூர்மையான தூரிகைபோல் நீளும் மரமே,
உமது நுனிகள் தேய்த்துத்தானோ வானும் நீலம்
ஆனது?

ஏழ்மையான தேசமெல்லாம் சூடில் வதங்க
மேலைநாடோ தேவை மீறி குளிர்வதென்ன ஞாயமோ?

வானிலே காணும் சம நிலையே
காக்கையும் குருவி கிளியுடனே

பூமி இறங்கி, மனிதர் போலே
இனங்கள் இனத்துடன் பிரிந்து வாழும்


(மலையின்...

---------------------

சரணம் 2:

இயற்கையே உந்தன் இயக்கமே புரிந்திடாது
பலனைத் தேடி அணுகும்போது புலப்படாது

உனக்கென வேதமே உள்ளதோ?
மெய்ப்பொருள் எவ்விடம் காண்பதோ?

விலகினால் தொடருவேன்
தொடர்வதால் விலகுவாய்

தேடலில்லாமல் அதுவும் வாழ்கை ஆகுமா, விடை சொல்?

(மலையின்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, July 03, 2008
 
# 263 உறக்கத்திடம் கடன்
ஜோதா அக்பர் என்ற இந்தி படத்துப் பாடலை, நண்பன் முரளி என் தமிழில் கேட்க விரும்பியதன் விளைவு இது...

உறக்கத்திடம் கடன் வாங்கி வந்தேன்
உன்னிடம் செலவிடும் நேரமதை
உறக்கத்திடம் கடன் வாங்கி வந்தேன்
உன்னிடம் செலவிடும் நேரமதை
பயணத்தில்கூட கண் அயர்ந்தாலும் உன் முகமே
மலையின் இடுப்பை ரயில் அணைக்கயிலும் உன் நினைவே

மேகப்படியில் ஏறியுமே சொர்கம் தொலைவில்தானே
உன் மோகப்பிடியில் சொர்கம் அறிந்தேனே...ஓ ஹோ...

(உறக்கத்திடம்...)

வானுக்கொரு ஏணியென புகை கசியும் வாகனமே
ராமன் கதையில் அனுமான் போலொரு தூதுவனே
நாளுக்கொரு மேணியென நாகரிகம் மாறியுமே
காதலர் பிறிந்து சந்தித்தால்தான் காதலே

பாசத்திலில்லா பரவசமே
நேசத்தில்கூட கிடைக்கலையே
மோகம் அன்பின் மொத்த உருவாய் வாய்த்தது ஏன்?

மேகப்படியில் ஏறியுமே சொர்கம் தொலைவில்தானே
உன் மோகப்பிடியில் சொர்கம் அறிந்தேனே...ஓ ஹோ...

(உறக்கத்திடம்...)

இன்பத்தையும் தோலுறித்து அனுஅனுவாய் படிக்கின்றார்
நம் இச்சைகள்கூட விஞ்ஞானத்தின் வரைபடமாம்
காதலுமே கடவுள் செயல், படைத்தவனின் இணைப்பு செயல்
சொர்கத்திலே நம் பட்டியலாம், நிச்சயமாம்

விஞ்ஞானிகளை துரத்திவிடு
அஞ்ஞானிகளை அனுப்பிவிடு
என் காதலின் ரகசியம் புரியாமல்தான் இருக்கட்டுமே

மேகப்படியில் ஏறியுமே சொர்கம் தொலைவில்தானே
உன் மோகப்பிடியில் சொர்கம் அறிந்தேனே...ஓ ஹோ...

(உறக்கத்திடம்...)
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, June 23, 2008
 
# 262 மை பூசாதே
மை பூசாதே அன்பே
விழி மேகமென்று தன்னை நினைத்து
முகம் நனைக்கக் கூடும்

உதட்டில் சாயம் போடாதே அன்பே
செவ்விதழ் ஏட்டில்
நம் காதல் சரிதத்தின்
கதைச் சுருக்கமே ஒளிந்திருக்கிறது

புன்னகைக்காதே அன்பே
பிறர் நம் மெளன உரையை
மொழி பெயர்க்கக்கூடும்

நகம் வளர்க்காதே அன்பே
நம் ஏகாந்தச் சடங்கின் அடிச்சுவடுகள்
அம்பலமாகிவிடும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, May 19, 2008
 
# 261 குருடன் வழி
ஆற்றும் வித்தை தெரியாமல்
காலத்திடம் ஒப்படைத்தேன்
காயத்தை
காயம் ஆறவில்லை
நேரம்தான் அழிந்தது

தூங்க மறந்த விழிகளின் பின்
மறைந்திடாத நினைவுகள்
மூடிவைத்த ஏக்கங்களோ
மடை உடைத்த நீர் அலைகள்

ஆக்க சக்தி என்பதெல்லாம்
ஊக்கமுள்ளோர் கைகளில்
மனமுடைத்த காரிகையிடம்தான்
என் மார்க்கமும் உள்ளது

பெளர்ணமி நிலவில் குடி வைத்தாலும்
குருடன் வழி
இருட்டில்தான்

ஆனால் கைத்தடியாய் இருந்த
நம்பிக்கையும் காணாமல் போக
சொர்கவாசலே அழைத்தாலும்
என் சுவடுகளின் கதியே
என் விதி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, May 09, 2008
 
# 260 பால் மனங்கள்
அப்படி வாய்த்தால் எப்படியிருக்கும்
என்ற சிந்தனை பெண்ணின் மனம்
இதுதான் நிலைமை தற்சமயம்
என்று வாழ்ந்திடும் ஆணின் மனம்

வாய்த்ததற்கும் வேண்டியதற்கும்
உள்ள இடைவெளியை அலசும்
இவள் ஏக்கப் பெருமூச்சை
தன் இயலாமையின் பிரதிபலிப்பாய்
அவன் உணர...

வெவ்வேறு கோணத்திலிருந்து
வாக்குவாதம் வளரும்
கங்கு வளர்க்கும் எரிமலையாய்
இருவரின் காயமும் ஆழமாகும்

உறவின் வரலாற்றில்
இணைந்தவரின் ஒற்றுமைகள் இழைவதென்னவோ
கொஞ்சம்தான்
வாழ்வின் ஒவ்வொரு படியிலும்
எதிர்நோக்கும் கட்டாயத்தில் எடுக்கப்படும் முடிவுகள்
ஆணின் வழியோ பெண்ணின் வழியோ
எதுவானாலும் சிரமம்தான்

எடுத்த முடிவின் வெற்றியைவிட
புறக்கணித்த முடிவின் கசப்பு
நீண்ட நாள் நிலைக்கும்
எடுத்த முடிவின் தோல்வியோ
விரிசலை இன்னும் பெரிதாக்கும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, May 08, 2008
 
# 259 தேர் பாகன்
ஊரெங்கும் நீ உலா வர
நான் உன் லீலைகளின் சாட்சியாகிறேன்

வணங்கும் உயரத்தில் நீ இல்லை என்று
என் நிலையில் பிறர் கூறலாம்
ஆனால் பழிக்கும் உயரத்தில் நான் இல்லை

துணைவனில்லாத குறையில்தான்
துணைக்கு இருப்பவனிடம் மனம் திறந்தாயோ?

சமுதாயம் நமக்கு மறுத்த சமத்துவம்
நீ அயர்ச்சியில் என்னிடம் பகிர்ந்த
உண்மையின் பலவீனத்தில்
பிறந்தது

பல வேடங்கள் சூடும் உன்னிடம்
வாழ்க்கை, தன் வேடம் கலைத்த சோகம் கொடியது

விரக்தியில் நீ சிரிக்கையில்
கைகுலுக்கல் உறவுகளின்
காயத்தைப் புரிந்தேன்

உன் வாழ்க்கையின் விசை
வேகத்திலேயே இருப்பதை
பிறர் அதிசயிக்க
உன் அழகிற்குக் காலக் கட்டணம்
உயர்ந்து வருவதை உணர்ந்தேன்

உனக்குக் காற்றுள்ளபோதே
உன்னை தூற்றிய உலகம்
உன் திரை இறங்கிய பின்னர்
என்ன கூறுமோ?

இருந்தும் தேவதையை ஓட்டிச்செல்லும்
தேர் பாகனே
ஆசை கொள்வதா?
தயங்குகிறேன்...
இது வேலிக்கும் பயிருக்கும்
உள்ள உறவா?
குழம்புகிறேன்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Sunday, May 04, 2008
 
# 258 பட்டுப்பூச்சியே
மொட்டுச் செடிகளையும்
உன் முணகலால்
மலர வைக்கும்
பட்டுப்பூச்சியே

பரவசப் பெருமூச்சுடன் பிறர்
உன்னைப் பார்த்திருக்க

பறந்து பறந்து
உன் பஞ்சவர்ணத்தை
வசிய விசிறியாய்
நீ விரித்து மூட

அழகு உன் அந்தஸ்தென
அற்பனுக்கும் தெளிவாகிறது

ஆனால் ஒய்யாரமாய் உயரப் பறந்து
விண்ணளந்த காற்றாடியும்
திசை மறந்து தவித்தோ
நூலினை அறுத்தோ
மரத்தில் சிக்கிய பின்னே
பார்ப்பவர் கண்களில்
தென்படப்போவது
பரிதாபமோ ஏளனமோ
மட்டும்தான்

பட்டுப்பூச்சியே
நீ புழுவாக இருந்தபோதே
உன்னை பழகியவன் நான்

என்னிடத்தில் ஏன் இந்த
ஆடம்பரம்?

காதல் என்ற காற்றாடி
உறவுக் கயிற்றால் உயர்ந்து
விதியெனும் காற்றில்
வளைந்தாடுகிறது

காற்றிழுத்த பக்கமெல்லாம்
கை பிடித்து ஆடிவிட்டு
பெருமையெல்லாம் தனதென
பட்டம் நினைப்பதென்ன விபரீதம்?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, April 21, 2008
 
# 257 நிராகரித்த அழகு
பற்ற வைத்ததும் தெறிக்கும்
மத்தாப்புத் துளிகள்போல்
காற்றின் அவசர சிலிர்ப்பிற்கு அம்பாகக்
குவிந்து சிதறிய இருபது வெண்புறாக்கள்
அந்தப் பாழடைந்த மண்டபத்திற்கு
சிறிதும் பழக்கமில்லாத
செழிப்பை வரைந்தன

மனிதர் மறந்த மண்டபத்தை
செடிகளும் பறவைகளும் செல்லமாக்கிக் கொண்டாடுவது
உற்சாகமளித்தது

பயனற்றதென்று மனிதர் நிராகரித்த
எத்தனையோ பொருட்களில்
படிந்திருக்கும் அழகே
உன்னை வணங்கிட
ஓர் இதயம் இங்கே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, March 26, 2008
 
# 256 சுயவிலாசக் கடிதம்
என் பாட்டை மிகையாக போற்றியவருண்டு
வகையாக வசைபாடித் தூற்றியவருண்டு
புரிந்தும் புரியாமல் புன்னகைத்தோருண்டு
கடமைக்குக் கைதட்டியோ
நட்புக்கு நகைத்தோ
எத்தனையோ விதத்தில் விமர்சித்தோருண்டு

வழியனுப்ப வந்தோரை நம்பித்தானா
யாத்திரை நடக்கின்றது?
வழக்கத்தை, ஒழுக்கத்தை நம்பித்தானா
புரட்சி இருக்கின்றது?

என் ஆற்றல் நான் அறிவேன் ஆணவமில்லை
என் மனக்கண்ணாடி பொய் சொன்னதில்லை

முயற்சி என் முள்கிரீடம்
பயிற்சி என் பள்ளியறை

கலைத் துரோணர் குருகுலத்தில்
இடம் கிடைக்குமென்று
இந்த எழுதுகோல் ஏகலைவன்
எதிர்பார்த்ததில்லை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, March 19, 2008
 
# 255 கட்டணம்
அணிவித்த ஆசைப்பார்வையை
அழைக்காத விருந்தாளிபோல்
புறக்கணித்திருந்தால் கூட
புரிந்திருப்பேனே நான்

ஆனாலும் உந்தன் விழிகள்
அசைந்தும் அசையாத வண்ணம்
கசிந்தும் கசியாத ஈரம்
உள்ளொன்று சொல்கிறது
புறமொன்று செய்கிறது

அனுமதி கேட்டுத்தானோ ஆசைகூட உதிக்கும் உனக்கு?
அறிவேன் உன் பேதை மனதை
அனுதாபம் ஏற்றுக்கொள்

என் வாசல் திறந்தே இருக்கும்
சிறைவைக்க ஒன்றுமில்லை
என் கோலம் ஊரறியும்
எதிர்க்கின்ற ஆளில்லை

உள்ளத்தில் உதிரும் உண்மை
அதரத்தில் அரங்கேற உனக்கு
எத்தனை திங்கள் ஆகும்
தெரிந்திருந்தால் சொல்லிவிடு

சொல்லாமல் போனால் என்ன
சலிக்கவா போகிறேன்?
காலம்தான் கட்டணம் என்றால்
காதலுக்கது மலிவென்பேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, February 22, 2008
 
# 254 தொடர்கதை
என் கடந்த காலக் கனவுகளின்
நிரந்தர நாயகியே
இறந்த காலம் என்ற சொல்லை
இன்று முழுதாய் உணருகிறேன்

எத்தனை பொழுதுகள் உன்னுடன் சாய்ந்தன
உணர்ந்திருப்பாயோ பிறிந்தவண்ணம்?
எத்தனை நிலவுகள் விடியலில் மூழ்கின
நம்மிருவரை பார்த்தவண்ணம்!

உறவின் பழைய பக்கங்களை
விடாமல் படித்து வருகிறேன்
விரிசலின் முதல் குறி
அங்கேதானே இருக்கிறது!
உறவு என்றால் தொடர்கதையென்று
இத்தனைக் காலம் நினைத்துவிட்டேன்
இதயம் கொண்ட உறவிற்கும் இறுதிப்பக்கம் இருக்கிறதா?

இழந்தவனுக்கும் இறந்தவனுக்கும்
ஓரெழுத்தே வேற்றுமை
இறந்தவன் பாடு முடிகிறது
இழந்தவன் பாடு தொடர்கிறது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Saturday, February 16, 2008
 
# 253 புகலிடம்
சிறு துளியாய் தொடங்குகிறோம்
பல நதியாய் தொடருகிறோம்
மேட்டில் சிலபேர் ஏறிவிட
மீதி பள்ளம் சேருகிறோம்
ஏற்ற தாழ்வாய் மாறுகிறோம்

தொடக்கத்தில் கலங்கமில்லை
வளர்ச்சியிலோ வேற்றுமைகள்
இடைப்பொழுதில் எத்தனையோ
ஏற்படுமே இடைவெளிகள்
கணக்கிட்டுப் பார்க்கையில்தான்
புரிகிறது ஒற்றுமைகள்

செல்வத்தில் செழித்தவரும்
கையேந்திப் பிழைத்தவரும்
புகழ் மாலை குவித்தவரும்
பெயரின்றி நிலைத்தவரும்
எண்ணிப் பார்த்தால் இறுதியில்
அடைய விரும்புவது ஓரிடம்
அது இன்னொரு நெஞ்சில் என்றென்றும்
நீங்காத புகலிடம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, December 18, 2007
 
# 252 மனமாற்றம்
பாலாடை போல் சின்ன மேலாடை கொண்டுமே
பளிச்சிடும் தந்தமென உன் உடல் வந்துமே
என் நெஞ்சைக் கொள்ளையிட
இது தேவை இல்லையே

பெண்ணே நீ பூவேதான் என்றாலும் சாய்வேனா?
உன் பார்வை காந்தத்திற்கு இரும்பாக ஆவேனா?
தரம் சேர்க்க செய்த கலை நிறம் மாறிப் போகுமே
என் நெஞ்சைக் கொள்ளையிட
இது தேவை இல்லையே

உடல் உருவம் எல்லாம் பிறப்போடு வந்ததே
உடை அணிகலன்கள் ஊர் சொல்லித் தந்ததே
உனைச் சேர்ந்த எத்தனையோ
உடன் மறுத்து வந்தவனை
உயிர் வரைக்கும் நீ என்று
உரைக்க வைத்து வென்றதெது?

உற்சாகத் தேக்கம் உள்ளத்தில் உலைபோல
மத்தாப்பு கிளைகளாய் மின்சாரம் அலைபோல
உடலுக்குள் உருவாகி உயிர்வரை ஊனமாக்கும்
உண்மையை மறைக்காத
புன்னகை வென்றதே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, October 03, 2007
 
# 251 பின்குறிப்பு
சிறகிழந்த தேவதைபோல்
தேடுகிறாள் அவள் சொர்கத்தை
வழி மறந்த வாலிபனோ
பயணத்தை சாடுகிறான்

விதி எறிந்த பகடைக்காய்
அவர் சேர்ந்த வேடிக்கை
வழிப்போக்கர் தங்கும் விடுதி
இணைத்தது அவர் பாதை

விழி கனலாய் கொதி கொதிக்க
பரவசத்தால் புல்லறிக்க

ஒரு முறைதான் அனுமதி அனுமதி
முழு மனதாய் அனுபவி அனுபவி

இழப்பைத்தான் பகிர்ந்து கொண்டார்
இன்னல்களை ஒப்பிட்டு
தற்காலிக தாக்கத்தில்
தணித்ததெல்லாம் தனிமைதான்

இரவல் உறவு இரவே தொடங்கி
விடியுமுன் முழுதாய் முடியும்

ஒரு முறைதான் அனுமதி அனுமதி
முழு மனதாய் அனுபவி அனுபவி

பின்புத்தி அலசுமுன்
இருவரும் எதிர் பாதை
உறவுகளின் ஏட்டிலே
இது வெறும் பின்குறிப்பு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Saturday, August 25, 2007
 
# 250 பொல்லாத மனசு
சில நாட்களாகவே ஒரு ஆர்ப்பாட்டமான தெம்மாங்கு எழுதிட மனம் உருத்தி வந்தது. ஆபாசம், ஆங்கிலம் இரண்டும் இல்லாமல் கொண்டாடும்படியாக, எளிமையாக, முனுமுனுக்கும்படியாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே பல உத்தரவுகள் கொடுத்து வந்தேன். கடைசியில் இதோ...

சொன்னா கேக்க மாட்டேங்குது
பொல்லாத மனசு
உன்ன தெனமும் கேட்டேங்குது
பாழாப்போன வயசு

நெஞ்சம் காய்ஞ்சு கெடக்குது
கண்ணோ வாரி எறைக்குது
கொட்டிக் கொட்டி தீக்கப்போயும்
ஆசை தீர மறுக்குது

கனவு இந்தக் காத்தைப்போல
கட்டிப்போட முடியலையே
ஆசை இந்த வயிரப்போல
பூட்டி வெக்க முடியலையே

சொன்னா கேக்க மாட்டேங்குது
பொல்லாத மனசு
உன்ன தெனமும் கேட்டேங்குது
பாழாப்போன வயசு

சேத்து வெச்ச பொருமையெல்லாம்
ரெக்கை கட்டிப் பறக்குது
போத்தி வெச்ச பருவமெல்லாம்
பூத்து பூத்துக் குலுங்குது

பாடக் கணக்கு போடும்போதும்
பார்வை மோட்டப் பெருக்குது
ஏத்தி எறக்கிப் உன்னப்பாத்தா
மூச்சு முட்டித் தவிக்குது

சொன்னா கேக்க மாட்டேங்குது
பொல்லாத மனசு
உன்ன தெனமும் கேட்டேங்குது
பாழாப்போன வயசு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 249 மைத்துணன்
யார் அந்த மங்கை என்று
கேட்கின்ற நண்பனே
உன் தங்கை என்ற உண்மை
தெரிந்துகொண்டால் தாங்குமா?

கட்டுப்பாட்டுக் கொள்கையில்
வளர்த்துவிட்டாய் தங்கையை
உன்னைப்போல்தான் அவளும்
என் நட்பிற்கு உயிரென்று
குரல் இழந்தாயே
அன்றே இழந்தாளாம் அவள்
என்னிடம் தன் மனதை

நட்பில் மறந்த குற்றங்கள்
சொந்தம் என்றால் உதிக்குதா?
நட்புக்குள்ள அருகதை
சொந்தமென்றால் வழுக்குதா?
சொல்லடா நண்பா நான் சோடை போனதெங்கே?

அவள் மனத்தில் இடம் என்றால்
உன் மனதை நீங்கவா?
ஒரு சொந்தம் இழந்துதான்
மறு சொந்தம் பெறுவதா?
நம் நட்பின் புனிதத்தில் என் காதல் கெடுதலா?

அன்பு என்னும் கடலிலே
முத்தெடுக்க போட்டியா?
நம்பிக்கைத் தோழன் இனி மைத்துணன் நம்பி
ஒருவனே என்றாலும் இரு உறவு இனி

உன் வாழ்த்து இல்லையென்றும்
மணந்திடத்தான் போகிறேன்
காதலின் மகிமையினால் மட்டுமல்ல
நட்பின் வலிமையையும் நம்பித்தான்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, July 23, 2007
 
# 248 வார்த்தைகள் ஏனடா?
இந்தப் பாடல், நண்பன் முரளியும் நானும் இணைந்து எழுதியது. விரைவில் முரளியின் இசையில் இப்பாடல் வெளிவர இருக்கிறது, அதுவரையில் வார்த்தைகள்தான்...

பெண்:
வார்த்தைகள் ஏனடா?
வன்முறைதானடா
மெளனமே காதலின்
மந்திரம்தானடா

ஆண்:
மெளனமே காத்திட
ஓர்வழி சொல்கிறேன்
உன்னிதழ் கொண்டு வா
ஒற்றியே வைக்கிறேன்

பெண்:
சங்கமிக்கும் நதிக்கடலாய்
கொந்தலிக்கும் எரிமலையாய்

ஆண்:
காதலின் ஜோதி தொட்டால்
காயமல்ல

பெண்:
வார்த்தைகள்...

ஆண்:
சொந்தம்
பல ஆயிரம் தொல்லைகள் தந்தும்
சிறு இன்பங்கள் கோடி
உறவுச் சிறையில்
உதிர்த்து உதிர்த்து போகாதோ?

பெண்:
முந்தும் என் ஆவல் காட்டிட அஞ்சும்
என் நெஞ்சில் நாணம்
அசைவும் இசைவும்
வேறு வேறு ஆகாதோ?

ஆண்:
உருக உருகவே மெழுகும் ஒளிவிடும்
உறவும் விளக்கு வா வா

பெண்:
ஒளிந்த உணர்வுகள் பொழிந்த மழையிலே
உண்மை வெப்பம் விலகும்

ஆண்:
காலை
பரமசுக வேளை
மென் துயிலிலே
உன் அருகிலே
படருவேன் மலையை மூடும் பனியாய்

பெண்:
காலையில் சூரியன்
கன்னமும் கிள்ளுவான்
வேலைகள் உண்டடா
விட்டிடு என்னையே?

ஆண்:
போர்வைக்குள் போர்க்களம்
வேர்வையின் ஊர்வலம்
பார்வையில் கார்வை
சீக்கிரம் சீர் வை

பெண்:
நாற்சுவரும் ஏனோ?
நான்கு குணங்கள் மறைத்திட அனுமதியோ?

ஆண்:
ஆழ் கடலைப் போலே
பெண்ணின் மனமும், அடங்குமோ நான்கினிலே?

பெண்:
உனது கேடயம் எந்தன் தேகமா?
பரிசு போலத்தானா?

ஆண்:
வழியைத் தேடினேன்
உறவுப் பாதையில்
இதயக் கோப்பை உனதே

பெண்:
காதல்
கலை பயில தாகம்
தலை சுழலவே
வலியும் சுகமே
பொன்னென ஆகும் கொல்லன் கலையில்

ஆண்:
சாகசம் ஊமையா
சம்மதம் சைகையா
சேர்த்ததே காதலின்
மந்திரப் பொய்கையா

பெண்:
ஈருடல் சேர்ந்திட
ஓர்வழி சொல்கிறேன்
உன்னிழல் எல்லையில்
என்னிழல் சேர்க்கிறேன்

ஆண்:
நஞ்சினிக்க வைக்கிறதே
மோனத்திலே பொய்க்குமுறல்

பெண்:
மோகமும் நோகவைக்கும்
தீஞ்சுவையோ

ஆண்:
சாகசம் ஊமையா...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, June 27, 2007
 
# 247 உண்மை நீதி
சதியால் பிறிந்த காதலர்களுக்கு மறுபிறவியில் நீதி கிடைப்பதாகக் கதை. இந்தக் கதைக்கு ஒரு பாடல் எழுதச்சொல்லி ஒரு விண்ணப்பம் எனக்கு கிடைக்க, இந்தப் பாடல் உங்களுக்கு கிடைக்கிறது...


மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
காதல் ஜோதி
பிறவிகளால் சிறைபடாது
உண்மை நீதி

கனப்பொழுதில் மானிடரை
காலம் பறித்திடலாம்
கள்ளர் போடும் நாடகத்தில்
உண்மை கொஞ்சம் மறைந்திடலாம்

சங்கமித்த உறவிலே சந்தேகம் பாதகம்
சந்தர்ப்பவாதிகளின் ஆயுதம்
சத்தியத்தின் பார்வையிலே
சூழ்ச்சித் திரை விலக்கி...

மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
காதல் ஜோதி
பிறவிகளால் சிறைபடாது
உண்மை நீதி

ராமர்களை அடையாத போதிலும்
தீக்குளித்த சீதைகள் எத்தனையோ
சோதித்தால் சோடைதானோ சொர்கமும்?
மெய்க்காதல் பொய்க்காது எப்போதும்...

மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
காதல் ஜோதி
பிறவிகளால் சிறைபடாது உண்மை நீதி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, May 30, 2007
 
# 246 அழிவுப் பந்தயம்
முடிவிலா வெறுமையின்
ஓலம்
என் ஒற்றைத் தோழனாம்
நிழலின் கறுப்பில்
மோதி மடிய...

காய்ந்த நிலத்தில்
நெருப்பின் பசியைப் போல்
காளை நெஞ்சில் அவள்
நினைவு சிலிர்க்க...

அழிவின் பாதையில் என்றுமே
ஈர்ப்பு அதிகம்!

நான் அழிக்க விரும்புவதோ
என் தனிமையை;
என் நினைவு அழிக்க விரும்புவதோ
என் சிந்தனையை

இந்த அழிவுப் பந்தயம்
ஒரு முரட்டு சிகிச்சை போன்றது
வெற்றியோ தோல்வியோ
ரத்த தானம் எனதுதான்

இழப்பின் துயரத்தில்
குத்திக் கிளறிக் காயப்பட்டு
பழைய தீர்மாணங்கள்,
கோட்பாடுகளை தரைமட்டமாக்கி

தூய எதிர்பார்ப்புகளுடன்
தவழ்ந்து வருகிறது
என் புதிய மனம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, May 21, 2007
 
# 245 சுவை
காலச் சுழலின் பிடியில்
கழுத்துவரை மூழ்கி
எம்பிக் குதிக்க முடிந்தவரை
உயிர் ஒட்டுமென்ற விதியில்
எனக்குள் இருக்கும் அனுக்களின்
அசைவுகளெல்லாம் குறைந்துவர...
முடிவின் தீவிரம் அதிகரிக்க...
அழிவேனே தவிர நான்
அடிபணியேன் என்ற மனத்துடன்
வாய்விட்டுச் சிரிக்க...

முடிவின் கசப்பு
இங்கு முக்கியமல்ல

நாவில் தேன் சிந்தியது
முயற்சியின் சுவை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, April 27, 2007
 
# 244 அந்தி வரட்டும்
எச்சரிக்கையின்றி பொங்கியெழுந்து
அதரத்தில் வெடித்துச் சிதறும்
உன் சிரிப்பு
ஓயாமல் ஒலிக்குதடா
உள்மனதில்

மொழியிலா தென்றலாய்
முனகி வரும் உன் பேச்சு
பணிபுரியும் கவனத்தை
திருப்புதடா திரும்பவும்

தொழில் ஒரு சடங்காகி
சோடைபோனதென்றோ
சொந்தம் ஒரு ஒப்பந்தம்
புரியும் பார் விரைவில்
நிறைவேற்றும் கடனுக்கேற்ப
நிழல் கிடைக்கும் அங்கே

இவ்வுலகின் தன்மைகளை
நீ புரிந்து ஆளுமுன்
விண்ணப்பம் தேவைகளை
நீ அடுக்கிப்போகுமுன்
கொடுக்கல் வாங்கல் வாழ்க்கையில்
நீயும் வழக்காடுமுன்

உன் விலையிலா பாசத்தில்
ஒளிவான் உன் தந்தை

உன்னைச் சேர்ந்து
என்னை மறக்க
அந்தி வரட்டும்
அது வரையில் கடமையை
செய்ய விடு கண்ணா
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 243 ஊசிப்பார்வை
ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே

இருள் வானின் போர்வையிலே
அடைபட்ட இதயத்தை
வைரப் புன்னகையுடனே
சிறு மின்னல் சிறை மீட்க

ரணமான இடமெல்லாம்
ரம்மியமாய் புதுப்பிக்க

ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே

மனமே தாளாக
அதில் இவள் சிதறும் மையாக
பின் வார்த்தை கோர்த்த பா ஆக
மென்மேலும் வளர்கிறாள்
வடிவம் பெருகிறாள்
ஊடுருவி

ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, April 11, 2007
 
# 242 சாபமே
ஒரு நண்பரின் வேண்டுகோலுக்கிணங்கி ரியானா என்ற ஆங்கிலப் பாடகியின் ஒரு பிரபலமான பாடலை தமிழில் (மொழி பெயர்க்காமல்) எழுதியதன் விளைவு இது.

சொந்தக் கதைதான்
சொல்லத் துடித்தேன்
வார்த்தை விட்டுப் போனதடி
நெஞ்சில் ஒருத்தி
உன்னை நிறைத்து
தன்னையே தேடும் விதி

தேவை அவன்தான்
நெஞ்சம் சொன்னது
வெட்ட வெட்ட வேர் கொண்டது
சென்ற திசையே
சூன்யமானது
தென்றல் இங்கு தீ வார்க்குது

சொல்லிவிடு நீதான் தங்கத் தேர்தான்
தவிக்கின்ற முல்லைக்கினி
முறித்து நீ போனால் நான் யாரோ இனி
உண்மை சொல்லி விடு

என்னை வென்ற கண்கள் நீதானா?
என்னைத் தொட்ட கைகள் நீதானா?
என்னைச் சுடும் வார்த்தை நிஜமா?
உண்மையென்றால் உன்னைப் பொய் என்பேன்
நன்றிக்கடன் கேட்டு கிடைக்காது
ஞாயங்களைத் தேடி முடியாது
காதல் ஞானியாக்கும் சாபமே

வாடைக் காற்றிலே
ஓடைப் பேச்சிலே
நெஞ்சமோ ஆறவில்லையே
நன்றி போகட்டும்
ஞாயம் போகட்டும்
காதல் இங்கு பொய்க்கவில்லையே
என்னில் இருந்த உணர்வுண்மையே

ஈரமணல் பூக்குமே
மீண்டும் விரைவே
ஓர் விபத்துக்குப் போய்
முழு வாழ்வின் இழப்பா?

சொல்லிவிடு நீதான் தங்கத் தேர்தான்
தவிக்கின்ற முல்லைக்கினி
முறித்து நீ போனால் நான் யாரோ இனி
உண்மை சொல்லி விடு

என்னை வென்ற கண்கள் நீதானா?
என்னைத் தொட்ட கைகள் நீதானா?
என்னைச் சுடும் வார்த்தை நிஜமா?
உண்மையென்றால் உன்னைப் பொய் என்பேன்
நன்றிக்கடன் கேட்டு கிடைக்காது
ஞாயங்களைத் தேடி முடியாது
காதல் ஞானியாக்கும் சாபமே

நான் வேறாக
நீ மறந்த பேராக
கதை முடியுதே
திருத்திவிடு

என்னை விட்டு நீங்கிப் போகாதே
போகாதே

என்னை வென்ற கண்கள் நீதானா?
என்னைத் தொட்ட கைகள் நீதானா?
என்னைச் சுடும் வார்த்தை நிஜமா?
உண்மையென்றால் உன்னைப் பொய் என்பேன்
நன்றிக்கடன் கேட்டு கிடைக்காது
ஞாயங்களைத் தேடி முடியாது
காதல் ஞானியாக்கும் சாபமே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Saturday, March 31, 2007
 
# 241 தத்தகாரம்
ஓடையோரக் குயிலுக்கெல்லாம்
மேடையேறத் தெரியாது
கேக்க நெனைச்ச நேரம் குயிலை
பாட வைக்க முடியாது
பாடும்போது கேக்க நெனைச்சா
ஓடைப்பக்கம் குடியேறு

தத்தகாரம் தேவையில்லை இது
தாந்தோன்றிக் குயில் பாட்டு
கத்துக்கொடுக்க நெனைச்சாக்கூட
கட்டுப்பாட்டை மதிக்காது

இதுபோல எத்தனையோ
இயற்கையில ஒளிஞ்சிருக்கு
தனக்குன்னு ஒரு இயக்கம்
படைப்பிலெல்லாம் இருந்திருக்கு
தன் போக்கில உலகத் திருப்பும்
மனுசனுக்கெது புரிஞ்சிருக்கு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, March 26, 2007
 
# 240 புதிய பாதை
பனி என்ன வானின்
மகரந்தப் பொடியோ?

முளைவிடாத மரங்களையும்
மூடி மறைத்து முத்துப் பந்தலாக்கி
விழுந்த பாதையெல்லாம்
வார்த்தை வருமுன்னே கவிதையாகிய
வெள்ளைக் காகிதமாக்கி
உன் கால் பதியப் பதிய
சிதறித் தூவி அடிக்கோடிட்டு
மேகமாகி
உன்னை இனம் காட்டியது
வண்ண நிலவாய்

உன் வருகையிலே
பூமி திரை விலக்கிட...
புதிய பாதை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, March 01, 2007
 
# 239 உரிமைச்சீரு
இந்தப் பாடல், நண்பர் மகேஷ் முடிகொன்டாவின் இசையமைப்பில் வெளிவரப் போகிறது.

பருகிப் பாரு
இயற்கைச் சாரு
உலகே உந்தன்
உரிமைச்சீரு

விருந்து தேடு
வருந்திடாது
நினைவுப் பூவு
உதிர்ந்திடாது

வாரம் பூரா உழைச்சுப் போடு
வாரக்கடசி விடுமுறை தேடு
பாடுகளெல்லாம் பாடித் தீர
முன்னேறுமே

வேதனைக்கென்றா வாழ்கைப் பாடு
தேடித் தேடி இன்பம் நாடு
பாதைகளெல்லாம் பதிந்த காலு
முன்னேறுமே

(பருகிப் பாரு...

ஏதுமே
தங்கப் போகிற
பெரும் துன்பங்கள் என்றில்லையே

மீதமே
இன்றி வாழ்ந்திட
என்றென்றும் இன்பங்கள் கையெட்டிலே

பாத்திரம் பார்த்து வேடம் போடு
வாலிபத்தோடு சூடும் சேரு
வாழ்கையிலெல்லாம் வாழ்ந்து பாரு
வருந்தாமலே

ஞானத் தீயில் விறகைப் போல
அனுபவமெல்லாம் புரட்டிப் பாரு
அறிவுரையெல்லாம் அலசித் தீரு
வருந்தாமலே

(பருகிப் பாரு...

நாட்களைக்
கொட்டிப் பிண்ணிடும்
நம் உடலென்னும் வயதோலையே

ஓசையில்
மொழிப் பூக்களை
பிண்ணிக் கோற்கின்ற பாமாலையே

சாத்திரம் பார்த்து செய்தும் கூட
சோதனைக் காலம் போனது ஏது?
ஆசைகளெல்லாம் அடையப் பாரு
வருந்தாமலே

ஏட்டில் தேடி எடுத்தது கொஞ்சம்
அடுத்தவன் சொல்லிக் கொடுத்தது கொஞ்சம்
உனக்கு நீயே தெரிஞ்சது கொஞ்சம்
இது ஞானமே

(பருகிப் பாரு...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 238 வண்ணாரப் பேட்டைக்கு
ஒரு சலவைத் தொழிலாளியின் மோகத்தை அவன் தொழிலை வைத்தே சித்தரிக்கும் எண்ணம்தான் இந்தப் பாடலை எனக்குத் தந்தது.

வண்ணாரப் பேட்டைக்கு வாடி
கண்டாங்கிச் சேலையைச் சூடி
வஞ்சி உந்தன் புடவைக்குள்ளே
கஞ்சி போட துடிக்குது ஆவி

அழுக்குப் போக அலசித் தாரேன்
கறையை நீக்கி கசக்கித் தாரேன்
எறங்கு பாலம் அடியிலேதான்
அடிச்சு அடிச்சு தொவைக்கப்போரேன்
காஞ்ச சீலை கொடியிலேத்தி
கழுதை மேச்சு திரும்பி வாரேன்

வண்ணாரப் பேட்டைக்கு...

காஞ்ச சீலை பரப்பி வெச்சு
பக்குவமா மடிச்சுத் தாரேன்
மடிப்பு ஏதும் சுருங்கிடாம
சூட்டுக்கரியால் இழுத்துத் தாரேன்
பத்திரமா சீலையை நீ
பொட்டிக்குள்ள பூட்டி வெய்யி
மச்சான் வீடு வந்ததுமே
புதுசேலையா போட்டுக்காமி

வண்ணாரப் பேட்டைக்கு...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, February 08, 2007
 
# 237 உரைந்துவிட்ட ரீங்காரம்
கோப்பையின் விளிம்பில் கிச்சிளித் துண்டாய்
மலையைக் கவ்விய மஞ்சள் மதி...

இரவை எதிர்த்து போராட
தேனீர் கடையில் இளைங்கர் அணி...

இவருக்கு மத்தியில்...
மழை விரட்டிய மகளீர் கூட்டம்
நிழற்குடை அடியில்

அதில் ஒருத்தி
மழையூறீய முத்துப் பந்தலாய்
முடி உலர்த்தி
அழகு திருத்தி நிற்க...

அருவி மடியில் பனிக்கட்டியாய்
நான் விழுந்தேன் எனக்குள் சிதறி

அந்த நொடி, அந்த சூழல்
அந்தத் தேதி, மாதம், காலம்
என்னில் உரைந்துவிட்ட ரீங்காரம்

என் வருங்கால நினைவே
உனைப் பதிவு செய்துவிட்டேன்
பத்திரமாய்

இந்தக் குளத்து நீரை நம்பி
பல தனித்த இரவுகள் தணியும் இனி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Sunday, January 28, 2007
 
# 236 தில் ரூபா
ஒரு இந்துஸ்தானி பாடலை ரசிக்கையில் அதில் ஒரு பரவசமான ஓசை மனதை தடவி விட்டது. அந்த இசைக் கருவியின் பெயர் தில் ரூபா என்று அறிந்ததும் இந்தப் பாடல் உதித்தது மனதில்...

கொள்ளை கொள்ளும் நெஞ்சை என் தில் ரூபா
உள்ளமெங்கும் உன்னால் ஈரம் தில் ரூபா

இந்துஸ்தானி இசையில் கேட்டேன் தில் ரூபா
இன்னும் தா நீ இன்பத்தேனை தில் ரூபா
வடக்கில் மட்டும் வசிப்பது ஏனோ தில் ரூபா?
கொஞ்சம் தமிழகத் தென்றலைத் தழுவிப் பாரேன் தில் ரூபா

கொள்ளை கொள்ளும் நெஞ்சை என் தில் ரூபா
உள்ளமெங்கும் உன்னால் ஈரம் தில் ரூபா

மேற்கில் பிறந்த கருவிகளெல்லாம் தில் ரூபா
தாய்மொழி சேர்ந்திட புகழடைந்ததே தில் ரூபா
திறமை இருந்தால் தெற்கில் வாழ்வு, தெரியுமல்லவா தில் ரூபா
என் தமிழைக் கொஞ்சம் தாலாட்டிடவா தில் ரூபா

கொள்ளை கொள்ளும் நெஞ்சை என் தில் ரூபா
உள்ளமெங்கும் உன்னால் ஈரம் தில் ரூபா

காதலி விரல்போல் உந்தன் கம்பிகள் தில் ரூபா
என் காதுகளைக் கட்டிப்போட்டது தில் ரூபா
இருபது தந்தியில் என்னை மீட்டும் தில் ரூபா
இறைவன் இருப்பிடம் இசையில் காட்டும் தில் ரூபா
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, January 18, 2007
 
# 235 காற்றடைப்பு
நிலவே உன் வாசலை
விஞ்ஞானத்திற்கு திறந்தாய்
உன் மடியில் தடம் பதித்த மனிதர்களை பொருத்தாய்
தடமோ கனமோ இல்லாத இந்தக் காற்றை மட்டும்
நுழைய மறுத்தால் ஞாயமா?

உன் மனதில் கொடி நாட்டுவதே
தொழில் சிலருக்கு
இதில் உலகளவில் போட்டியும் உண்டு
நான் நட விரும்புவதோ காதல் கொடி
உன்னை இருகத் தழுவ எனக்கு
கொடுத்துவைக்கவில்லை
முல்லைக்கொடியால் முடியுமென்று
நியமிக்கிறேன் அனுமதி

உன்னைச் சுற்றி மின்மினிகள்
வெள்ளிக் கன்னி உனக்கோ நகையில்லையே
பகலவனிடம் பேரம் பேசி
பொன்னில் ஒரு கிரீடம் செய்தால்
உனக்குப் போட விடுவாயா?

நீ இரவின் அமைதியில் பொழுதைக் கழிக்க
அலைகளை எழுப்பி ஆட வைத்தேன்
பறவைகள் தம் துணை தேட வைத்தேன்
சோலைகளின் பரவச மூச்சை
சுற்றி வளைத்து உன்னைச் சேர வைத்தேன்

உன்னை எட்ட எத்தனையோ மொழிகளில்
என் அன்பை இசைத்திருக்கிறேன்
நீ எனக்கு மட்டும் என்றும்
இசையவேயில்லை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, December 07, 2006
 
# 234 மொழி மழலை
அரிகரன் இயற்றி, வடிவமைத்துப், பாடி வெளியிட்ட "காஷ்" என்னும் வடக்கத்திய பாடல் தொகுப்பில் வரும் "அபு கே பரசு" என்னும் மென்மையான பாடலின் தாக்கத்தில், அந்த மெட்டிற்கு தமிழ் வடித்த முயற்சி இது.

கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்
சிறகுகள் முளைத்தேன்
கால்களைப் புதைத்தாய்

தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி

விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
நெருப்பிட்டு எரித்தும்...நினைவிருக்கும்

கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்
தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி...

உடனடி மறுப்பதன் காரணம் வேறென்ன?
வளருமுன் வேரிலே முறிப்பதிது
முழுமனதாக துறந்தது ஏனோ?
மோகத்தில் மூழ்கிடும் பயம் உனக்கு
கிழித்தவர் கோட்டில் நடப்பது கடமை
கிழித்தவர் கோட்டில் நடப்பது கடமை
சுதந்திர உணர்வை தவிர்ப்பவர் அடிமை

விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
நெருப்பிட்டு எரித்தும்...நினைவிருக்கும்

கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்

தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி...

கத்திரித்தாயோ காகிதத் தாளை
ஒத்திகைக்கேங்கும் கவி மடலை
பட்டபின் தெரியும் பரவச உணர்வு
காதலுக்கென்றும் மொழி மழலை
உதிர்த்துவிடும் தன் உணர்ச்சிகளை

யாருமே அறியா இரங்கல் நிகழ்ச்சி
யாருமே அறியா இரங்கல் நிகழ்ச்சி
விருந்தினன் வருந்தினன் ஒருவனடி
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
நெருப்பிட்டு எரித்தும்...நினைவிருக்கும்

கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்

தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, November 21, 2006
 
# 233 சுந்தரம்
"அம்ருதவர்ஷினி" என்ற கன்னடப் படத்தில் வரும் "ஈ சுந்தர" என்ற தேவா இசையில், எஸ்.பீ.பி.யும் சித்ராவும் பாடிய அற்புதமான பாடலை மய்யமாகக் கொண்டு இந்தப் பாடலை இயற்றினேன்.

உன் சுந்தர உருவத்திலும்
நில் என்கிற பருவத்திலும்
தள்ளாடவும் திண்டாடவுமே...
உன் நம்பக இதயம் அது
கேட்கின்றதோர் சிறு சுகமும்
உடனடி தந்திடவே...

எடுத்தேனோ பிறவி
பருந்தாகும் குருவி
உன்னிரு கைகளும் தொட்டு வருடும் நொடி

உன் சுந்தர...

கனா...கனா
நிலா...நிலா
துயில் எழுந்துமே தோன்றிடுதே
தராததா
பெறாததா
சொற்கள் சினுங்கிடும் எல்லையிலே

ஒளிவேன் உள்ளே இன்பக் கூடத்திலே
வெளி உலகதன் ஈர்ப்பு இன்றி
அறிவேன் சொன்னால் அறிவுறைகளில்லா அன்புப் பாடங்கள்
புகட்ட வந்தால்

வெளி உலகதன் அறியாமையில் நான் வெறும் இயந்திரம்
புவி மறந்திடும் அருகாமையில் நீ சொர்க மந்திரம்

உன் சுந்தர உருவத்திலும்
நில் என்கிற பருவத்திலும்
தள்ளாடவும் திண்டாடவுமே
உன் நம்பக இதயம் அது
கேட்கின்றதோர் சிறு சுகமும்
உடனடி தந்திடவே...

உதிக்காதோ புலமை
மழைபோலே உவமை
சந்தனக் காட்டிலே சுடர் சூடும் தென்றல்

உன் சுந்தரம்!
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, November 09, 2006
 
# 232 முறைவிடு
பள்ளிக்கூடம் மூடியாச்சு
தேர்வுகளைத் தாண்டியாச்சு
விடுமுறை விட்டாச்சு முறைவிடுடா

தேதித்தாளைத் தூக்கிப் போடு
கைக்கடிகாரம் கழட்டிப்போடு
இன்னும் கொஞ்ச நாளைக்கு
ஒரு கட்டும் இல்லை காளைக்கு

வயசாகி வாடுமுன்னே
வாலிபத்தை மேய்க்கனும்
ஆறுபடை ஏழுமலை ஏறிப்போயி வேண்டுமுன்னே
நண்பர்களே தோழர்களே வேறு மலை ஏறனும்

சாதி சனம் பாக்கபோகனும்
சம்பிருதாயம் தீக்கப்போகனும்
வீட்டுக்கொரு விசேசம் கேக்கப்போகனும்

பந்தக் கடன் தீக்குமுன்னே
சொந்தக் கடன் தீக்கனும்
சேமிச்ச இளமையெல்லாம்
செலவழிச்சு போக்கனும்

ஆறிப்போன ஆசையெல்லாம்
அடுப்பு வெச்சு மூட்டனும்
தொல்லைகளை மூட்டைகட்டி
எல்லைக்கோட்டை மீறனும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 231 பேராசை
பொன் அந்தி மாலை
உன் மஞ்சள் மேனியின் சொந்தமென்று
சொல்லத்தான் வந்தாயோ உன் மச்சு மாடிக்கு
பொழுதறிந்து

சுருங்கிடும் இரவு கண்மணியாக
விரிந்திடும் நிலவு பின்னணியாக
இவை இரண்டும் சேர்ந்து உன் விழியாக
இயற்கையே உன்னிடம் முரண்தானடி

எனக்கு மட்டும் இங்கு எதற்கு முறை
அகற்றிடு இடைவெளி முடிந்தவரை

துணி காயும் கொடி கூட தோரணமாகுமடி
உன்னருகே
துண்டோடு கூந்தலை அள்ளி முடிந்தாலும்
நீ அருள் வடிவே
மண்ணாசை பொன்னாசை பேராசை அல்ல
என் மீது நீ ஆசைப்
பட வேண்டும் எனுமாசை
பேராசை பேராசை இதைவிட வேறேது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, November 03, 2006
 
# 230 கவர்ந்தற்று
இல்லாத நினைவுகளை அசைபோடுகிறேன்
கானாத கனவுகளின் தடம் தேடுகிறேன்
கிட்டாத உறவுகளின் இதம் நாடுகிறேன்
கிடைக்கின்றதெல்லாம் கொண்டும் ஏன் வாடுகிறேன்?

எட்டாத கணியும் கையில் கசக்கின்ற காய்தானோ?
என் கையில் காயாய் இருந்தும்
பிறர் கண்ணில் கணிதானோ?

அடைந்திட்ட அத்தனையும் சுவை மாறிப்போவது ஏன்?
அடுத்தவன் அடைந்ததில் மட்டும் அருஞ்சுவை கூடுவதேன்?

இழந்தவன் தவிப்பதும் உண்மை
அடைந்தவன் சலிப்பதும் உண்மை
இருந்ததை துறந்தவன் மட்டும்
தவிப்பதோ சலிப்பதோ இல்லை

அடித்தள வெறுமையையே நான்
அடிப்படை ஆக்கிவிட்டால்
அடைந்திடும் அரவம் இல்லை
இழந்திடும் சிரமம் இல்லை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, October 18, 2006
 
# 229 வாழாதவர்
நகைக்கண் பார்வையில் ஆசை நழுவி விழ
நெஞ்சத்தின் இடுக்கில் ஏதோ புகைந்து எழ
நீ தந்தது நெருப்பா?
என் நெருப்பிற்கு திரியா?

புரியா தொடக்கத்தின் புதிராம் தொடர்கதையில்
ஆதரவுக் கொடிகாட்டி ஆமோதித்த அதிர்ச்சியில்
ஆவேசச் சுமையாய் எதிர்பார்ப்பு நெட்டித் தள்ள...
அழைக்காத அலை வந்து ஏந்திப் பிடிக்கையில்
ஆழத்தின் நினைப்பெங்கே உதிக்கப் போகிறது?

இந்த ஆரம்ப நீர்ச்சுழியின் இழுப்பைத்தானே
இழந்தபின்னும் மனம் அசைபோடுகிறது...
இந்த அலையில் மூழ்குவதும் ஒரு பிறப்பு
மிதப்பதும் ஒரு இறப்பு
இதைத் துறந்தவர் மட்டுமே வாழாதவர்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, October 11, 2006
 
# 228 இன்னொரு வாழ்வில்
இன்னொரு வாழ்வில் சந்தித்தால்
இந்த இன்பம் இன்னும் நீடிக்கும்
காலச்சுவடின் பதிவில்
உறவும் காவியமாகிவிடும்

இந்தப் பேருந்துப் பயணம்
அங்கு புஷ்ப விமானத்தில்
நம் உடல் நெறிக்கும் பயணிகள்
அங்கு விசிறி வீசும் சேவகர்

இந்த வாகனக் கரிப் புகை
அங்கு முல்லைப் பந்தலில் மூடுபனி
இங்கே ஏரி காய்ந்து குப்பைமேடு
அங்கு அத்தர் அருவி பாயும் குளம்

இங்கு நான் அருகதை இல்லாத ஆடவன்
அங்கு அகிலத்தோடு உன்னை ஆள்பவன்
இங்கு நீ பொருந்தாத சூழலிலும் விருந்து
அங்கு திகழ்ந்திடுவாய் அரசியாய் உயர்ந்து
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, September 20, 2006
 
# 227 நடைபாதை நட்சத்திரங்கள்
மேற்கத்திய படவுலகைச் சேர வந்து பின்பு ஏமாற்றத்தால் பாதை மாறிவிடும் பரத்தைகளை லாஸ் ஏஞ்சல்ஸ் வீதிகளில், முக்கியமாக ஒரு நான்கைந்து வீதிகளில் நட்சத்திரங்களின் பெயர் செதுக்கியிருக்கும் சாலையோரங்களில் நடைபோடுவதைக் கண்டது, என் மனதை விட்டு நீங்காத ஒரு வாழ்கை முரன். அதை பிரதிபலிக்கும் பாடல் இது:

கனவுலகக் கன்னியாகிவிட
கால் பதித்த நிலம்
கலை அழித்து விலை பொருத்தி
பரிகசிக்கும் தினம்

சாதனை நட்சத்திரங்கள் சரித்தரம் செதுக்கிய
சாலையோரக் கல்வெட்டு
இவர்களுக்கு தொகுதிக் குறி
வேடங்கள் தேடிவந்த கட்டழகு மங்கையர்
வேடர்களின் கூட்டில் இன்று கட்டுப்படும் வேங்கையர்

நூலருந்த பட்டம் போலே
தோற்றுவிட்டோர் கதை
தோற்றுவித்த தோட்டக்காரன்
தண்ணீர் ஊற்றா நிலை
விண்மீன்கள் பால்வீதியில் விற்க வருமே தமை

கற்ற வித்தை செல்லாமற்போய்
பட்டுமெத்தை சிறை
எட்டி நின்று காப்பவனே
அடிமையாக்கி மேய்ப்பான் சதை

ஆளுக்கொரு ஆசைக் கனவு
அடுப்பெரிக்க இரை
விண்மீன்களை வெட்டும் விதி
வெட்டறுவாள் பிறை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, September 06, 2006
 
# 226 புத்துயிர்
சேதப் புயலில் சிக்கித் தவித்து
மாமலரொன்று மிரண்டு விழ
ஓடை மடியேந்தி
இலைமேடை அமைத்துத் தர
ஊர்வலமாய் பவனி வரும்
உல்லாச நிலை போலே

குடிவிலகி கீழ் விழுந்தும்
குன்றாத மதிப்போடு
உனை ஏந்திப் பிடித்திட நான்
ஓடையாய் காத்திருப்பேன்
இலைமேடை போல் இங்கே
மணமேடை அமைத்திடலாம்
ஊர்வலமாய் வாழ்ந்திருக்க
உல்லாச உறவிருக்க
பழைமைத் தீயில் உன்னை
பழுதுபார்த்து என்ன பயன்?

புத்துயிர் என்பது மற்றொரு பிறப்பிலல்ல
பிறர் கண்ணில் உன்னை பார்க்காதிருப்பதில்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 225 வாடைக்குள்ளே சூடு
"ஆடி வெள்ளி தேடி உன்னை" என்ற கண்ணதாசனின் அற்புதமான அந்தாதி வடிவப் பாடலுக்கு எனது மொழியில் ஒரு எளிய முயற்சி

ஆண்:
வாடைக்குள்ளே சூடு வைக்கும் வாச மல்லிச் சாரம்
காலமெல்லாம் தேடுகின்றேன் காணவில்லை யாரும்...
காணவில்லை யாரும்...

பெண்:
யாரும் வந்து வாங்கிச் செல்லும் போதை அல்ல மோகம்
ஓர் மனதில் யாகம் வைத்தால் சேருமிந்த யோகம்...
சேருமிந்த யோகம்...

ஆண்:
யோகம் வெள்ள யாகம் என்ன தியாகம் செய்து நாட
நாளும் சித்தம் கேட்டுபாரேன் எந்தன் உயிர் கூட

பெண்:
கூட வரும் நெஞ்சினிலே காதல் ஜோதி வாழும்
வாழும் வரை செர்ந்திருந்தால் தேவையில்லை மீதம்
தேவையில்லை மீதம்

ஆண்:
மீதமின்றி அள்ளித்தர வேகம் கொண்ட காளை
காத்திருக்க வேண்டுமென்றால் பார்த்திருக்கும் நாளை

பெண்:
நாளை வரும் வேளையென்று நம்புகின்ற உள்ளம்
கண் சிவக்கும் சம்பவத்தை புன்சிரிப்பில் தள்ளும்
புன்சிரிப்பில் தள்ளும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Sunday, September 03, 2006
 
# 224 ஊமை எழுத்து
சமுதாய வீதியில் சேர்த்திடாத போதும்
சன்னமான ஒளியில் பிரகாசிக்கும் உறவிது
அங்கீகறிப்பிற்கென அசலுலகில் வீடு
முகவரி சாட்சியின்றி மறைவில் சின்ன வீடு

இதயமெங்கும் நிலவும் இன்பமிங்கு இரவல்
கதிருறங்கும் இரவில் இவருலகின் விடியல்
பிறியும்போது அணைந்திடும்
இணையும் போது மிளிர்ந்திடும்
படி தாண்டிய உடனே பிடிபோகும் உரிமை
அடிக்கோடிட வைக்கும் ஆசையிதன் மகிமை

ஊராரின் பார்வையில் சகலமும் புலப்படும்
நடவடிக்கையின்றியே நடைபெறும் நாடகம்
கொண்டவர் யாருக்கும் அனுமதிக்க மனமில்லை
அடைக்கலம் தேடுவோர் அனுசரிக்க வழியில்லை
அவசியத்தின் நிருவலே நிழலுலக சுயம்வரம்

வார்த்தைக்குள் எழுத்தென அச்சிலேறி அமர்ந்துமே
வாய்ச்சொல்லில் இடம்பெறா ஊமை எழுத்திது
இறந்தவன் உயிலில் இடம் கிடைக்கையிலே
சகதியை மறந்து சேர்ந்திடும் தகுதி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, August 24, 2006
 
# 223 காலங்கள்
சித்திரை வைகாசி கம்பலம் விரிக்க
இளவேனிற்காலம் இங்கு உதிக்கின்றது
புதிய கண்ணோட்டம் புதிய எதிர்பார்ப்பு
இன்னொரு வருடம் பிறக்கின்றது

ஆனி ஆடி என பெயருக்கு பொருந்தி
பள்ளிச் சிறுவர் ஆடி வர
விடுமுரை வழங்கும் முதுவேனிற்காலம்
இந்த இரண்டாம் பருவம் சிறுவருக்கு

ஆவணி புரட்டாசி நிலப் பசியடங்க
மேகத்தாய் பாலூட்டும் கார்காலம்
வயல்வெளி போற்றும் விவசாயிக்கு

ஐப்பசி கார்த்திகை உடலில் குளிர்ந்து
கண்களில் ஒளிவீசும் குதிர் காலம்
கூடி வாழும் குடும்பத்திற்கு

மார்கழி தை குளிரைக் கூட்டி
மாலைபொழுதை மெல்லினமாக்கும்
முன்பனிக் காலம் காதலருக்கு

மாசி பங்குனி ஆண்டு முடிக்க
வெள்ளிப் பனியாய் விடியும் பின்பனிக் காலம்
முடிவுரை நினைவிற்கும்
எதிர்கால முகவுரைக்கும் பாலமிது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 222 பாலையிலே சிக்கிய சக்கரவாகம்
என் மகனுக்குப் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களில் கலை அம்சமோ கதை அம்சமோ காணாததின் விளைவு இந்தப் பாடல். என்றாவது ஒரு நல்ல ஓவியனை சந்தித்தால் இதைப் பல மொழிகளில் புத்தகமாக்குவேன்.

ஒரு பாலையிலே சிக்கியது சக்கரவாகம்
அதன் பாதையிலே பார்க்கவில்லை பொழிந்திடும் மேகம்

ஒரு மூன்றுநாள் பயணத்தில் ஏரி கிடைக்குது
ஆனால் நூறடியும் அதன் சிறகு ஏற மறுக்குது
ஏழு நாள் வாழ்ந்திடத்தான் உயிர் இருக்குது
ஆனால் இருள்திரை விழுமுன்னே கதிர் ஒளிக்குது

ஆறு நாளில் ஏரிக்கு செல்ல ஒட்டகம் அழைக்குது
சென்றடைந்த ஏரி பாதி வற்றிக்கிடக்குது
ஏரி பாதி வற்றியதால் மீன்கள் இல்லையாம்
மீன்களில்லா மீனவர்க்கு பசியின் தொல்லையாம்

பசித்திருந்த மீனவர்க்கு பறவை விருந்துதான்
கல்லெறிக்கு பயந்து பறவை மரத்திலேறத்தான்...
வீசப்பட்ட கற்கள் தேன் கூட்டை உடைத்திட,
மீனவரைத் தேனி ஓடி ஓடி விரட்டிட,
தண்ணிதாகம் தீர்க்க வந்து தேனை அருந்துது
பறவை இடையூறின் முதுகிலே இன்பம் காணுது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, August 21, 2006
 
# 221 மதுக்குடமே
ஆண்:
மதுக்குடமே மரகதமே
மருதாணிக் கலையகமே
பரிகொடுக்க பரிதவிக்க
இன்பம் மட்டும் அதிகரிக்க
இதழோடு இதழுரசும் இன்பத்தின் போர்முரசு
இருள்நேரம் துப்பறியும் தடயங்களை விரல் விரித்து

குழு சேர்ந்திசைக்கும்:
சரி சரி ஒற்றுமை ராகம்
கம கமா மல்லிகை வாசம்
பத பதப்பானது மனது
நிச நிசமானது கனவு

ஆண்:
இடம் பார்த்து எடைபோடும்
ஊர் கண்ணில் செல்வாக்கு
எனை மட்டும் கணிக்கையில்
இலை மறைவில் என் போக்கு
உனைக் கையில் பிடித்த கையில்
நிழற்குருவி ஒளி மழையில்

(மதுக்குடமே...

பெண்:
விரி விரி உன் சிறகை
எனக்கது நிழற்குடை
பிறர்க்கெடைப் பொருளாக
வாழ்ந்ததெல்லாம் என் சாபம்
வெளிச்சத்தின் வீண் அரவம்
ஒற்றைக்கிளி விரும்பாது

குழு சேர்ந்திசைக்கும்:
சரி சரி ஒற்றுமை ராகம்
கம கமா மல்லிகை வாசம்
பத பதப்பானது மனது
நிச நிசமானது கனவு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, August 17, 2006
 
# 220 மோக அலை
திரு. குலாம் அலி அவர்களின், "தில் மே ஏக்கு லெகரு சீ" என்ற பாடலை தமிழில் கேட்க நினைத்ததின் விளைவு இது.

00:23
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி

கவி ஆவேன் உடல் மடலினி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
ஆகா...ஆகா...

02:13
கோடு கிழிக்காதே கண்ணாலே அன்பே
அன்பே ஓஓஓ...ஓஓஓ...
கோடு கிழிக்காதேஓஓஓ...ஓஓஓ...
கோடு கிழிக்காதே கண்ணாலே அன்பே
கோடு கிழிக்காதே கண்ணாலே அன்பே

மனம் ஏற்காது போகுமா என் வரி?
மனம் ஏற்காது போகுமா என் வரி?
மனம் ஏற்காது போகுமா என் வரி?
கவி ஆவேன் உடல் மடலினி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
ஆகா ஆகா...

04:02
சோலையே வாடையால் கதிர் தேடும்
சோலையே வாடையால் கதிர் தேடும்
சோலையே வாடையால் கதிர் தேடும்
என் ஆகாயத்தின் கதிர் நீயடி
என் ஆகாயத்தின் கதிர் நீயடி
கவி ஆவேன் உடல் மடலினி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Saturday, August 12, 2006
 
# 219 பொன்னிற வானம்
மல்லெலு பூசே என்ற தெலுங்குப் பாடலை தமிழில் கேட்க நினைத்ததின் விளைவு இது.

பொன்னிற வானம்
போடுது மோடம்
ஏனிந்த மாறுதல்?
இதயமுமே அந்த வானம் போல அல்லவா?

பொன்னிற வானம்
போடுது மோடம்
ஏனிந்த மாறுதல்?

சரணம் 1
எதிர்வரும் காற்றினிலே
எவருக்கும் மாறும் வழி
மாறிடும் பாதையிலும்
ஊன்றிடு உன் கொடி (2)

சதுரங்க ஆட்டத்திலே
நகர்வது முறைப்படியே
வாழ்கையின் போக்கினிலே
முறையே புரியலே

தோல்வியின் சன்னதியே தந்த வரம் இந்த அனுபவம்

(பொன்னிற வானம்...

சரணம் 2
ஏக்கங்கள் தேங்கிடவே
கனவுகள் பெருகிடுமே
வேண்டிய முயற்சியிலே
ஏக்கங்கள் விலகுமே (2)

வெற்றியின் படிகளை
அடைந்திட பல வழி
அத்தனை வழியிலும்
முயற்சி முதல் படி

வெற்றியை பகிர்ந்திடவே சொந்த பந்தம் வந்து சேருமே

(பொன்னிற வானம்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, August 10, 2006
 
# 218 நடு சாம வேளையோ?
மதுமாச வேலலோ என்ற மெய்மறக்கச் செய்யும் தெலுங்குப் பாடலை தமிழில் கேட்க நினைத்த நண்பன் முரளி சங்கரின் குரலுக்குத் தருவியது. இது மொழி பெயர்ப்பு அல்ல, என் மனப்பெயர்ப்பு.

நடு சாம வேளையோ?
நதி கோதும் தோணியோ?
நடு சாம வேளையோ?
நதி கோதும் தோணியோ?
துணையோசை மூங்கிலோ? குயில் கூவலோ?
நடு சாம வேளையோ?
நதி கோதும் தோணியோ?

நீடிக்கும் ஏக்கம் இல்லா
பூரிப்பு பூக்களம்மா
கரைக்குள்ளே தேங்கும் நீரும்
குறையின்றி ஓடுதம்மா

ஆலிங்கன மோகப் பொழுதும்
ஆலிங்கன மோகப் பொழுதும்
ஏனோ மனதில் ஏக்கம் மனிதா?

(நடு சாம வேளையோ...

ஆழிக்கும் எல்லை உண்டு
நீருக்கும் ஆவி உண்டு
காலத்தின் ஆணைப்படியே
சோலைக்கும் ஆடை உண்டு

தான் மட்டும் எல்லை இன்றி
தான் மட்டும் எல்லை இன்றி
மனிதன் வாழ எண்ணுகின்றான்

(நடு சாம வேளையோ...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, July 26, 2006
 
# 217 பிஞ்சுத் தாமரை
கண்ணதாசன் எழுதாத கவிதையா
நீ எழுதப் போகிறாய்?
பரதமாட நீ என்ன பத்மினியா?
இசை பயில நீ என்ன இசைஞானியா?

ரவி வர்மன் என்ற நினைப்பா?
உனக்கெதுக்கு ஓவியம்?
பாகவதர் என்ற பிரம்மையா?
உன் பாட்டை நிப்பாட்டுவாயா?

என்று என்னைக் கேட்டவரை எல்லாம்
ஒரு குளத்திற்கு அழைத்து
ஒரு பிஞ்சுத் தாமரையை
கிள்ளியெறிந்து மிதித்தேன்

என்னைக் கொடியவனைப் போல் பார்த்துவிட்டு
கூட்டம் விளக்கம் கேட்டது என் செயலுக்கு.

"சுற்றிலும் மலர்ந்து பெரிதாகப் படர்ந்த
பிற தாமரைகளை விடவா
இந்தப் பிஞ்சு மலர் சாதித்துவிடப் போகிறது?"
என்று கேட்டுவிட்டு பிறிந்தேன்
என் கலையைப் பயில
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, July 24, 2006
 
# 216 காதலர்கள் தோளுரசத்தானே...
இந்தப் பாடல் வரிகளின் வீச்சும் அமைப்பும், ஜாஸ் இசையின் மேல் எனக்குள்ள அபரிமிதமான ஆர்வத்தின் விளைவு. நான் இசைக் கலைஞனாய் இல்லாதபோதும் இப்பாடலின் ஒலி வடிவமும் வாத்திய அம்சங்களும் என் மனதில் எப்படியோ பதிந்துவிட்டன. அதை விரைவில் சில நண்பர்களின் தயவில் வெளிக்கொண்டு வருவேன்.

சோலை மலர் ஓடை கொடுத்தானே
காதலர்கள் தோளுரசத்தானே
காற்று கூட காதல் சேரத்தானே
தென்றல் என்று பேரை மாற்றினானே
சேதி சொல்லடி செல்லக் கள்ளி
சேதமல்லடி இன்ப வள்ளி
ஊருலகம் பூட்டி வைக்க காதலென்ன குற்றமா?
நான்கு சுவர் சூழ்ந்திருக்க காதல் என்ன கைதியா?

அன்ப வெளிப்படுத்த இத்தனை சோகமா?
அடுத்தவன் சந்தோசம் தடுப்பது நியாயமா?
சோலை மலர் ஓடை கொடுத்தானே...
காதலர்கள் தோளுரசத்தானே...

மைனாக் குருவிகள் மரக்கிளையில் கொஞ்சிட
யாருமில்லையே அங்கு தடை சொல்லிட
ஏனோ நம்மையும் ஊர் கவுக்கப் பாக்குது
தீமை ஒழிப்பதாய் கத்தி கம்பை தூக்குது
காதல் நெஞ்சின் ஆழம் தெரியாது
ஆள் மறிக்கும் ஆசை மறிக்காது

சோலை மலர் ஓடை கொடுத்தானே
காதலர்கள் தோளுரசத்தானே
காற்று கூட காதல் சேரத்தானே
தென்றல் என்று பேரை மாற்றினானே
சேதி சொல்லடி செல்லக் கள்ளி
சேதமல்லடி இன்ப வள்ளி
ஊருலகம் பூட்டி வைக்க காதலென்ன குற்றமா?
நான்கு சுவர் சூழ்ந்திருக்க காதல் என்ன கைதியா?

அன்ப வெளிப்படுத்த இத்தனை சோகமா?
அடுத்தவன் சந்தோசம் தடுப்பது நியாயமா?
சோலை மலர் ஓடை கொடுத்தானே...
காதலர்கள் தோளுரசத்தானே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, July 17, 2006
 
# 215 அழகாய் பூசும் மஞ்சள்
இந்தப் பாடல், முரளி சங்கரின் இசையில் வெளிவர இருக்கிறது

M:
அழகாய் பூசும் மஞ்சள்
அரிதாய் தோன்றும் திங்கள்

F:
வானம் ஏந்தும் போதும்
பூமி தேடுகின்றாய்

M:
கதிரின் ஆடை போர்த்தி
யாரை ஏய்க்க வந்தாய்?

F:
சுடரின் பார்வைச் சூட்டை
மறவா காலைப் பூக்கள்

M:
காதல் வெள்ளை நெஞ்சில் கள்ளம் சேர்க்கும்

F:
(அழகாய் பூசும் மஞ்சள்...


M:
மெய்க் காதலின் சன்னதி ஊரான் மலர் சூடுமா?

F:
எல்லோருமே வேற்றுமை தேடினால் தான் ஆகுமா?

M:
கொள்ளாமலே கடலுமே கரை தாண்டினால் தாங்குமா?

F:
எப்போதுமே வேறொரு இல்லாமை மேல் மோகமா?

M:
நாளுக்கொரு மேனியும் பொழுதுக்கொரு போதையும்

F:
இதுபோலொரு வாழ்க்கையில் ஆனந்தமே வாடகை

M:
தேன் கூட்டிலே வாழ்ந்தாலே தேனும் கசந்து போகுமா?

F:
(அழகாய் பூசும் மஞ்சள்...


F:
நேர் பாதையில் போவதில் ஏன் இத்தனை வேதனை?

M:
சூடாத ஓர் பூவையே பாராததே சாதனை

F:
எக் காதலின் ஆர்வமும் நாளாகவே ஆறிடும்

M:
ஆள் மாறவே காதலும் ஆர்வத்திலே கூடிடும்

F:
அக் காதலின் ஆரம்பம் அவ்விதமே தோன்றிடும்

M:
ஆரம்பமே வேண்டுவோர் அன்பென்பதே கண்டிலார்

F:
மேல்வாரியாய் மேய்ந்தாலே தனிமைத் தீயில் அழிகிறார்

M: (அழகாய் பூசும் மஞ்சள்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, July 14, 2006
 
# 214 சமுதாய ஏணி
மேல்வட்டத் திருமணம்
மின்மினியாய்ப் புகைப்படம்

ஆடம்பர தோரணம்
ஆதிக்கத் தோரனை

ஓடை போல நீண்டிடும்
பவளப் பட்டு கம்பலம்

முத்து வைரம் மத்தியில்
பாசாங்குப் புன்னகை

அரவனைப்பு கொஞ்சல்கள்
ஆரவாரத் தழுவல்கள்

ஆளுயரப் பரிசுகள்
தகுதிக்கேற்ப அமருங்கள்

துயரமில்லா சம்பலம்
தேவைக்கு மேல் கிம்பலம்

செல்வாக்கு செல்வம் ஏலத்தில்
இணைந்தது கெட்டி மேளத்தில்

சமுதாய ஏணிக்கு
ஏற்றார் போல் சொர்கத்திலும்
சீட்டு வசதியோ?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, July 12, 2006
 
# 213 கண்ணதாசனுக்குக் கவிச்சாமரம்
நீ, தமிழ்கோவில் தேவர்கள்
உருண்டைபிடித்து உருவாக்கிய
கவிப் பிரசாதம்;
காலம்தோரும் இனிக்கும்
உன் பொருட்சுவையின் சாரம்.

உன் சிந்தனை,
எம் பாடசாலை;
உன் படைப்புகளின் பரிச்சயம்,
என் விழிப்புணர்சிக்கு சேவற்கூவல்;
உன் சொல் வாக்கு,
யாம் சேகரித்த செல்வாக்கு;
உன் இறப்பு,
ஒரு நூலகத்தின் எரிப்பு.

நீ பாத்திரமறியாது பிச்சையிட்ட வெகுளி,
போக்கிடம் இல்லாத படங்களுக்கும்
உன் பாடலின் மேதாவிலாசம் உண்டு.

நீ சந்தர்ப்பம் பார்க்காத அசடு;
கோட்டை ஆண்ட கோமான்களிடம்
அடுத்தவர் வெள்ளைக் கொடி பிடித்து
வெண்சாமரமாய் வீசிவருகையில்
நீ உறுதியுடன் அதில்
வெற்றிலைக் காவி ஏற்றினாய்.

நீ உமிழும் அளவுக்கு
சிறுத்தவன் அல்ல,
பச்சைப் பொய்களுக்கு நீ சிகப்புக் கொடி
பிடித்தாய் என்றே இதற்குப் பொருள்.

உன் உடலை பொழுதுபோக்கியாய்
உபயோகித்த நீ,
உன் சிந்தனையை சேவகத் தேனீ ஆக்கி
சுற்றி அலைந்திருக்கிறாய்.

தமிழ் தேன் கூடு
உன்னால் தட்டு நிறம்பியது,
உன் ரசிகர்கள்தான் ராணித் தேனியாய்
உன் உழைப்பின் பலனை ருசிக்கின்றோம்

தமிழ்தாயின் பிள்ளைகளுக்கு
சொத்துத் தகராரு எதற்கு என்ற சூட்சமம்
அறிந்தவன் நீ.
உனக்கு எதிராக ஒரு படையே
பேனாக்கள் கவிழ்த்த
அவர்களைப் பாரட்டிய பண்பால்
நீ உயர்ந்தாய்;
உனது நட்பால்
அவர்களும் உயர்ந்தனர்

சாடை மாடையாய் கிசுகிசுக்கும் சங்கதிகளை
சங்கடமில்லாமல் மேடை ஏற்றினாய்
உனக்குக் கிடைத்த ஆமோதிப்பு
உண்மைக்கும் கிடைத்தது உண்மை

உன்னை நேசிப்பதே ஒரு புரட்சி
பாசாங்கை ஒழிக்க
அதுவே எளிய ஆயுதம்
கைதேர்ந்த குறுக்குவழி

அலசிப் பார்த்து அறிவு பூர்வமாய் அனுகாமல்
ஏக மனதாய் தவறு என்று கூறி
தடை விதித்த சமுதாயக் கோட்பாடுகளின்
குருட்டு ஆதிக்கத்தை,
பிற்போக்கை,
சுயநலத்தை,
நீ பலவந்தமாக துயிலுறித்த
நவீனக் கண்ணன்.

இச்சைகளின் இம்சையை,
உணர்வுகளின் பிடிவாதத்தை,
சமூகம் அங்கீகரித்த உறவுகளின் பற்றாக்குறையை,
சமுதாயம் சுருட்டி மறைத்த
சிக்கல்களின் இயலாமையை
நீ வாழ்ந்து காட்டிப்பாடம் ஆனாய்.
உன்னையே பதம் பார்த்து,
சூடு போட்டு,
உருக்குலைந்து காவியமானாய்.

எம்மதமும் சம்மதம்
எழுதிவிடலாம் எவரும்.
ஆனால் நீ மதக்காப்பியங்களையே
சிந்தித்து, சேவித்து,
தொழுது, மொழிபெயர்த்து
மதங்களின் விசேட விதங்களையும்
விளக்கிவிட்டாய்.

இதற்கு மேல் என்ன சொல்ல
மொழியில் நான் ஏழை
நீயோ என்றென்றும் எங்களின்
மாசு குறையாத முத்தைய்யா;

உன் படைப்புகளோ
படிக்கப் படிக்க
கேட்கக் கேட்கப்
பெருகிவரும் சொத்தைய்யா.
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, June 29, 2006
 
# 212 ரத்தக் கோளம்
ஆப்பிரிக்காவிலே எத்தனையோ நாடுகள்
ஒவ்வொரு நாட்டிலும் இரண்டேனும் இனங்கள்
ஒவ்வொரு இனத்திற்கும் இருசாரி தலைவர்கள்
வழிபடாதவர்களுக்கு ஒன்றுக்கிறண்டாய்
எதிரிகள்

போர்கலத்திலே ஏது அடைக்கலம்?
ஆள்பவனும் கொல்கிறான்
எதிர்ப்பவனும் கொல்கிறான்

பெற்றவரிடமிருந்து பறிக்கப்பட்ட பிஞ்சுக் கைகளில்
பரிசாய்க் கிடைத்தது ஆளுயர ஆயுதம்
கொள்கையென்றும் கடவுள் என்றும்
விவரம் தெரியாமல் வீழ்ந்தவர் கோடி
போரிட மறுத்தோ ஏழ்மையினாலோ
இறக்கத்தானே இருக்கிற மீதி?

போர் மேய்ந்த பாதைகள்
புனல் முழுகா தேகங்கள்
பருந்துக்கு விருந்தாகக்
காத்திருக்கும் குடல்கள்

வேண்டாத வரத்திற்கு
பிரசாதம்
உயிர் காற்றிழந்த பைகளாய்
சடலங்கள்
"காயமே இது பொய்யடா"
பட்டவர்கள் சொன்னதில்லை
இந்தப் பொய் மந்திரம்

உடல் குவித்து உச்சி ஏறினால்
கடவுள் கூடத் தென்படுவாரோ?

சிலுவையிடம் தொழுதாலும்
கடன் வாங்கி அழுதாலும்
உயிர் கழுவி உரமாகும் வேளையிது

தர்மத்தின் வாசலை அலங்கரிக்க
ரத்தக் கோளம்தான் கிடைத்ததோ?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, June 27, 2006
 
# 211 காக்கைக் கடி
எதிர்கால நண்மை என்று
எத்தனை படுத்துகிறாய்?
மருந்தளவு சிறிதேனும்
கொடுத்தாயா முன்பணமாய்?
சொர்கமென்ற மாயலோகம்
இருக்குமா சொன்னபடி?

வரவிருக்கும் திரைப்படங்களை
காட்டிடும் விளம்பரப் படம்போல்
சொர்கத்தின் முன்கதை சுருக்கம்
ஓட்டிவிடேன் சில நிமிடம்?

யாரை நம்பி இருப்பது
ஆசைகளை மறுத்தபடி?
கேட்பது நியாயம்தானே
கிடைக்குமா காக்கைக் கடி?

சந்தித்த இண்ணல்கள் அத்தனையும் ஈடாக்கி
நன்நடத்தை பொருமைக்காக இன்னும் கொஞ்சம் மதிப்பெண் கூட்டி
கொடுப்பாயா சொர்கத்தில்?

அனுபவிக்க நினைத்திருக்கும் இன்பங்கள் எத்தனையோ
பாவத்தின் பட்டியலிலும் பாதிக்குமேல் இடம்பெருமே
அனுமதிப்பாயா ஆண்டவா?

பரிசு தெரியாது நம்பியே
பரிட்சை எழுதாதென் நெஞ்சமே

ஆலயம், மடமாட்டம் சொர்கமும் இருந்துவிட்டால்
பொருக்காது என் மனது
இப்பொழுதே சொல்லிவிட்டேன்
அப்படித்தான் இருக்கும் என்றால்
இப்பொழுதே சொல்லிவிடு
செலவிலோ மலிவிலோ
நான் நினைத்த சொர்கத்தை
சஞ்சலமேதுமின்றி
பூமியிலாவது பார்க்கவிடு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, June 14, 2006
 
# 210 மேட்டுக்குடி தேடும் மனசு
குதிரைப் பந்தயமாட்டம் காதல நடத்தும் கொணமொனக்கு
வெற்றின்னு தெரிஞ்சாதான் மாலைபோடும் ஓங்கழுத்து
மேட்டுக்குடி மக்களையே தேடிப் போகும் உம்மனசு
எவனோ ஒரு காசுக்காறன் கேடயமா நீ ஆகனுமா?
அவனுக்கு இன்னொரு பரிசு கிடைச்சிட்டா நீ தாங்குவியா?

வாழ்கையின்னா ஏத்தம் எறக்கம் வந்து போகும் காத்தாட்டம்
மின்னலப்போய் வெளக்கா நம்பிப் போனாக்க ஓந் திண்டாட்டம்
இருட்டானா நெலவப் பாத்து நடமாடத் தெரிஞ்சிக்கிட்டேன்
நீ மட்டும் ராத்திரிபூரா விடியலத் தேடி அலைஞ்சிருக்க?
விடிஞ்சதும் நான் எம்பாட்டுக்கு வேலை செய்யப் போயிடுவேன்
காணலையே விண்மீனுன்னு கோபப்பட்டா உம்பாடு

காதலுக்கும் கருத்தடை மருந்தா
கல்லிப்பால் இருந்திருந்தா
கண்ணு ரெண்டும் ஊத்தி ஊத்தி
நெஞ்சு முட்ட நெறச்சிருப்பேன்

கருத்தா நான் இத்தன சொல்ல
கிறுக்கு மனசு கேக்கலையே
சாயம் போன ஒறவுக்கு
சாக்கு சொல்லி பாக்குதே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, June 12, 2006
 
# 209 இடையூரு இன்பம்
அனைகட்டா ஆசைகள் போல் மழையருவி பொங்கி வர
சாலைவழி குழிகளிலே செம்புனலாய் மணல் சரிய
கண் தேக்கிட நினைத்திடும் அழகிது
கவிதை பாடிட நனைந்திடும் மனமது
மண் தோண்டிட நறுமணம் பிறக்குது
சகதிச் சேற்றினில் புதுவிதையுதிக்குது

வண்ண வண்ண பூந்தொட்டிகளாய் வாகனங்கள் வழிநெடுக
அதற்குள்ளே மானிடரும் கொத்து கொத்தாய் பூத்திருக்க
இயற்கையவள் ஆளுகிறாள் அடிபணிந்து நின்றுவிட்டோம்

சேர்க்க நினைக்கும் ஓட்டுனரும் சேர வேண்டிய பயணிகளும்
பொதி வண்டி உடமைகளைப் பார்த்திருக்கும் வணிகர்களும்
பள்ளிவிட்ட சிறுவர்களை எண்ணியபடி பெற்றவரும்
தம் வாழ்வின் இடையூராய் இயற்கையை இன்று நினைத்திருப்பார்

எனக்குமுண்டு கடமைகள், காத்திருக்கும் சொந்தங்கள்
இருந்தபோதும் இந்த இன்பம் என்னைச்சேர கொடுத்து வைத்தேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, June 08, 2006
 
# 208 இசைக் கார்த்திகை
திரு. எஸ்.பீ.பி. அவர்களின் அறுபதாம் பிறந்ததினத்தை முன்னிட்டு அவருடன் நடத்திய தொலைபேசி சந்திப்பில் படித்துக் காட்டிய வாழ்த்து இது:

என் மனச்சோலையின் நிரந்தர இசைமேகமே
உங்கள் வருகையைக் கொண்டாடும் காணிக்கை மடல் இது

இதைக் கவிதை என்று
நினைக்காவிட்டாலும் சரி
கட்டுக்கதை என்று மட்டும்
நினைத்துவிடாதீர்கள்

ஒரு குழந்தையின் உணவுப்பழக்கம்
பாலில் தொடங்கிப் பிறகு பல்சுவைகளையும்
சுவைக்கும் நிலைக்கு
படிப்படியாக வளர்கிறது
ஆனாலும், பிறவி முழுதும் அடிப்படை சக்திக்கு
பால் அவசியப்படுகிறது

தமிழில் பாலுன்னு எழுதினாலும் பாலுன்னு
எழுதினாலும் ஒன்றாகத்தான் இருக்கும்
தமிழ் இசைப் பாடல் என்று எடுத்துக்கொண்டால்
எனக்குத் தாய்ப்பால் தமிழ்ப்பால்
எல்லாமே நீங்கள்தான் அய்யா

இசையும் சந்தமும் தெய்வீகம் என்றால்
அவற்றில் மொழியை நீங்கள் பிரசாதமாக
வழங்கினீர்கள் உங்கள் குரலில்

அந்தக் குரலில் இல்லாத குணமும் உண்டா?
அந்தக் குரல் காணாத உணர்வும் உண்டா?

வெகு நாட்களுக்குப் பிறகு நீங்கள்
நடிக்க வந்ததாய் சொன்னார்கள் நண்பர்கள்.
இதென்ன வேடிக்கை?
"அவர் பின்னணி பாடினாலும் நடிகனின் குணச்சித்திரமாய்
அவனது உணர்ச்சிப் பெருக்காய் முன்னணியில்
இத்தனைக் காலம் வாழ்ந்துதானே வந்திருக்கிறார்"
என்றேன்

உங்கள் அறிமுகமே ஒரு ஏகாந்தப் பரிசு எனக்கு
ஆனால் உங்கள் மூலம் எத்தனையோ கலைஞர்களை
நான் இனம்கண்டு கொண்டேன் என்றால் அது மிகையாகாது

ஒரு காலத்தில் அத்தனை சாலைகளும்
ரோமாபுரியையே எட்டும் என்கிற சொல் வழக்கத்தில் இருந்தது.
என் இசை ராஜ்ஜியத்தின்
நியதி இதற்கு நேர் எதிர்.
எந்த தமிழிசை அமைப்பாளரையும், பாடகரையும்
உங்களை வைத்துதான் நான் நேசிக்கத் தொடங்கினேன்
அதனால் எனக்கு எல்லா இசைச் சாலைகளும்
உங்களிலிருந்தே தொடங்கும்

மன்னியுங்கள் அப்பொழுது சிறுவன் நான்.
திருவிளையாடல் இசை கே.வி. மகாதெவன் என்று
கேள்விப்பட்டு உடனே
"ஓ, நம்ம எஸ்.பீ.பி.க்கு 'ஆயிரம் நிலவே வா'
பாட்டு போட்டாரே அவரா என்றேன்"

'மழை தருமோ என் மேகம்' என்ற உங்கள்
பாடலைக் கேட்டவுடன்
பித்தாக அலைந்து தேடி அறிந்து, ஷ்யாம்
என்ற உள் வட்டம் மட்டுமே அறிந்திருந்த மேதையை
என் அன்றாட தெய்வங்களில் ஒன்றாக்கினேன்

'தொடுவதென்ன தென்றலோ' கேட்டுத்தான்
ஜி. கே.வி. அவர்களை பரிச்சயம் செய்து கொண்டேன்

'படைத்தானே பிரம்மதேவன்' என்ற பாடலின் தாக்கத்தில்
மெய்மறந்து லயித்துத்தான்
வி.குமார் அவர்களின் உண்மையான தன்மையை புரிந்துகொண்டேன்

'அன்பு மேகமே இங்கு ஓடி வா' என்று நீங்கள்
வருடி அழைக்க, அந்த கிறக்கத்திலேயே
யாரிந்த விஜயபாஸ்கர்? என்று அலசி
அவரது பாடலையெல்லாம்
என் நினைவுப் பக்கங்களில்
மயிலிறகாக்கினேன்

தக்ஷிணாமூர்த்தி அவர்களைத் தெரியாதென்று
யாரும் சொன்னால், 'அட கொடுத்து வைக்காதவனே'
என்று கடிந்து, 'நந்தா நீ என் நிலா' பாடலைப் போடுவேன்.

சிவாஜி ராஜாவைத் தெரியாது என்றால் அங்கே
'சின்ன சின்ன மேகம்' உடனே பொழியும்

இதுபோல் எத்தனையோ...எனக்கும் என் நண்பர்களுக்கும்
உங்கள் படைப்புகள் பிறரை சுட்டிகாட்டும்
கலங்கரை விளக்கமாய் விளங்கி வருகின்றன.

உங்கள் துதியை ஓயாமல் பாட முடியும்
ஆனால் நேரம் எனும் அரக்கன்
என்னை நிறுத்தச் சொல்கிறான்

உங்களுடன் முன்பு ஒரு முத்தான உரையாடல்.
இன்று இன்னொன்று பாக்கியமாக கிடைத்திருக்கிறது...

செர்ரி மலர்களின் நம்பகமே
அவை குறுகிய காலத்தில் தோன்றி மறைந்துவிடும்
அறிய காட்சிதானாம்
ஆனாலும் செர்ரிகளின் மலர்ச்சியை
ஒரு முறை பார்த்தாலே
அது வாழ்வில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்துமாம்...
அது போலவே உங்கள் தோழமை
எங்களுக்கும் அய்யா.

சாமானியர்களின் வயதைத்தான்
மெழுகை அமர்த்திக் கொண்டாடுவார்கள்
பாடும் நிலாவிற்கு ஒலியாலே ஒளி வீசித்தானே பழக்கம்
அறுபது விளக்குகளை சுற்றிலும் ஏற்றி
இசைக் கார்த்திகையாக
உங்கள் பாடல்களை ஒலித்துக் கொண்டாடினால்தான்
உங்கள் பிறந்தநாளுக்குப் பொருந்தும்

ஆனந்தத்தால் ஆயுள் கூடுமாம்.
எங்கள் ஆயுள்களை அதிகரித்த உங்களுக்கு
ஆயுள் மேலும் பன்மடங்காய் நீடிக்க
வாழ்த்துக்கள்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Sunday, June 04, 2006
 
# 207 சங்க கால அரசி
வழக்கம்போலவே போன வெள்ளி
சந்தைக்கடை அடைத்து சாயங்காலம்
பேருந்து நிலையத்தில் காத்திருக்க
காலம் கடத்திப் போனதென்னை
பல ஆயிரம் வருடங்கள் முன்பு...

ரூபென், ரவி வர்மா வரைந்ததுபோல்
தற்கால மதிப்பீட்டில் அடங்காததோர்
கம்பீரப் பெண்மை கண்முன்னே!

ஆடை ஆபரணம் ஒளி வீசி
ஒப்பணை பொடிகளுடன் மை பூசி
காலத்தை மீறிய காவியம்போல்
சங்ககால அரசியவள் காணக்கண்டேன்

பக்கத்து ஊரிலே நாடகமாம்
நாலைந்து காட்சிகளே இவள் ஆட்சியாம்
பட்டாடை நகைநட்டு அத்தனையும்
சில மணிநேரத்து வாடகையாம்

கொக்கரிக்கும் கோழிகளும் கூடைகளாய் காய்கறியும்
பிரயாணித்த வாகனத்தில் மனிதர்களும் ஏறினோம்
இத்தனை நெரிசலிலே அரசியும் நிற்பதா?
என் இறுக்கை தானத்தில் அரசிக்கு ஆசனம்
அருகில் இருந்தவரை நகரச்சொல்லி வேண்டுதல்

அலுங்காமல் குலுங்காமல் ஏழுமணியாட்டத்திற்கு
இந்த சேவகன் சேர்த்துவிட்டேன்
சங்க கால அரசியை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, May 29, 2006
 
# 206 காதல் ஐக்கு (Haiku)
ஆண்:
என் காதல் ஐக்கு
வார்த்தை அளந்து வந்தேன்
எண்ணிப்பார்க்கவா

பெண்:
பதினேழுதான்
அய்யா எண்ணிக் கொள்ளுங்கள்
இந்தக் கன்னிக்கும்

ஆண்:
உன்னோடு ஒன்று
எனக்கிங்கு மூவாறு
அன்பே வா அன்பே

பெண்:
கூடும் வயது
கூட்டிப் பார்த்துதான் சொல்லு
காதல் கணக்கு

தனிப்பூவெலாம்
தொடுக்காமலா இங்கு
மலர் மாலைகள்?

ஆண்:
தொடுக்குமுன்னே
அறிவுரையா அன்பே
தொடங்க விடு

பெண்:
மூன்றடியில் நீ
அளந்து வந்தாய் காதல்
உண்மை சொல் இன்று

ஆண்:
கணக்கு செய்தேன்
இன்னும் பொழுதிருக்கு
உன்னை மணக்க
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Saturday, May 27, 2006
 
# 205 மெய் ஞாயிறு
வகுப்பறையில் நீ பிந்திடலாம்
வாய்ப்புகள் உனை விட்டுச் சென்றிடலாம்
பாசாங்குப் பெண்கள் கைவிடலாம்
உன்னை பாராட்டும் பெற்றோரும் சோர்ந்திடலாம்

வட்டாரத்தில் நீ வெத்துச் சீட்டு
விதி மேலே உன் குற்றச்சாட்டு

ஏண்டா சோகம் பித்துக்குலி?
என் நேசக் கடலிலே முத்துக்குளி
எதிர்காலம் நீ சொன்னபடி
எதிர்ப்பு வந்தா அது எந்தன் குறி

இன்றைக்கு உன் வித்தை செல்லாக் காசு
தோல்வியால் அனுபவ முலாம் பூசு
விதி விளக்கமில்லாமல் வாழ்த்துக்கூறும்
இல்லை இறக்கமில்லாமல் வீழ்த்திப்போகும்
என்றைக்கும் நீ மட்டும் நீயா இரு
நம்பிக்கைச் சுடர்தான் மெய் ஞாயிறு

இதை தைரியமா நீ தக்கவெச்சுக்கோ
மனம் தொய்வடைஞ்சா அதை நிக்க வெச்சுக்கோ

ஏண்டா சோகம் பித்துக்குலி?
என் நேசக் கடலிலே முத்துக்குளி
எதிர்காலம் நீ சொன்னபடி
எதிர்ப்பு வந்தா அது எந்தன் குறி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, May 17, 2006
 
# 204 இன்று முதல் இறந்தகாலம்
என் தோள்மீது அம்பாரி தேடிய ராணி
என் முதுகேறி முத்தாடி வந்தவளா நீ?
நான் பாசத்தில் சுமந்த பால் காவடி
இன்று வேறொருவன் தேரிலே போவதென்னடி?

பிறை நிலா பெளர்ணமி ஆகும் தர்மமோ?
இங்கு மருதானி மஞ்சலுடன் சேர வந்ததோ?

ஏற்றுக்கொள்ள முடியாமல் தேற்றிக்கொள்கிறேன்
தந்தை என்றால் கண்டிப்பென சொல்லியது வீணடி
யார் தாலாட்டித் தூங்கவைத்தார் கேளடி
ராஜாத்தி கேளடி

தோட்டக்காரன் சொந்தமெல்லாம் வாடகைதானே?
மலர்ந்துவிட்ட பின்னே மலர் சூடிடத்தானே?

தாழ்வாரம் திண்ணையென சுமந்து
சோறூட்டி சொன்ன கதை ஆயிரம்
பார்த்துப் பார்த்து உன்னைப் பாதுகாத்து
வழிகாட்டி வந்தது யார் காரியம்?

ஒரு சடங்கில் பந்தம் கை மாறுவாய்
விந்தையடி ராஜாத்தி விந்தையடி
உன் எதிர்காலம் இன்புற வாழ்த்திவிட்டு
இறந்தகாலம் ஆகிறான் உன் தந்தையடி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, May 16, 2006
 
# 203 மத்தாப்பு சுந்தரி
பரிகாசப் பேச்சு சத்தம் அதைக்கேட்டு பொழுதாச்சு
படித்துறையும் பாதக் கொலுசை பாக்காமே சூடாச்சு

ராத்தூக்கம் நான் கண்டு மாசக்கணக்காச்சு
வேலை வெட்டி செஞ்சாலும் அவ நெனைப்பே பொழப்பாச்சு
பரிட்சைக்குப் படிக்கும்போது குறிவெச்சு உதிக்கிறா
ஒழுங்கா பாங்கா இல்லாம விவகாரமா சிரிக்கிறா

எங்கே என் மத்தாப்பு சுந்தரி
என் கனவுக் கூட்டை விட்டு எந்திரி

அழகுன்னு பாக்கப்போனா எத்தனையோ குறையிருக்கும்
அடுத்தவங்க குறையா நெனைக்கும் அம்சமெல்லாம் எனை உறுக்கும்

பேருந்து கைப்பிடி கணக்கா ரெண்டு பக்கம் பின்னியிருப்பா
செம்பட்டைத் தலைமுடிக்கேத்த கனகாம்பரம் சூடியிருப்பா
புளியம்பூ நெறத்தில இடுப்போரத் தோள் பையும்
கண்ணைப் பறிக்கிறாப்புல தாவனி ரவிக்கையும்...

எங்கே என் மத்தாப்பு சுந்தரி
என் கனவுக் கூட்டை விட்டு எந்திரி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Saturday, May 13, 2006
 
# 202 ஓய்வு நாள்
தனித் தீவில் காத்திருக்கிறேன்
தீர்ப்பு நாளை முன்னிட்டு
அந்தப்புரம் அழைத்துச் செல்ல
ஓடக்காரனாய் வருவானோ காலன்?
நன்மை தீமைகளைப் பட்டியலிட்டு
சேரும் ஊரைச் சொல்வானோ?

கடைக் காட்சியாய் கண்களுக்கு
வெண்பனியாகப் புவி மாறி
இக்கரையில் நான் அக்கரை வைத்த
அத்தனை முகங்களும் அலைமோத...

செல்லும் ஊரின் சுக வசதிகளை
சிறிதும் எண்ணுமோ இந்த மனம்?
சொர்க வாசலும் நரகவாசமும்
தொல்லை செய்யாதென் சிந்தனையை

விடைசொல்லிவரும் வாழ்கையில்
நெஞ்சம் நனைத்த நிகழ்வுகளே
நித்திரைச் சுடராய் பவனி வரும்
நினைவின் வாசற்படியில்...

என் வரலாற்றின் ஓய்வு நாள்
ஒப்பந்தத்தில் கையெழுத்தாய்
விடைபெருகிறது என் கடைசிக் காற்று...

அக்கரை என்று ஒன்றிருந்தால்
அனேகமாய் நாம் சந்திப்போம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, May 09, 2006
 
# 201 பூங்காவை நீங்காத ரோஜா
பூங்காவை நீங்காத ரோஜா
ஏங்காத நாளில்லை ராஜா

கூந்தலைச் சேரவில்லை
பூஜைக்கும் போகவில்லை
நாரோடு கால் பின்னி மாலையாகவோ
நெருக்கத்தில் மலர்ச்செண்டில் இடம் தேடவோ

இதைத் தவிர எத்தனையோ இருக்கின்றதே
மலருக்கு விதி, வழி, வரைமுறைகள்
அத்தனையும் நான் மறுத்தது ஏன்?
என் எதிர்காலம்...
உன் இதயத்தின் மேல்!

பூங்காவை நீங்காத ரோஜா
ஏங்காத நாளில்லை ராஜா

உன் மேல்சட்டைக் காதோரம் நான் கோர்க்கவே
உன் நெஞ்சத்தின் தாளத்தில் தலைசாய்க்கவே
மண்ணோடு வேரூண்றி நான் வாழ்கிறேன்

இருந்தாலும் எனதாயுள் குறைவு
உன் தோட்டத்து மலரை நீ பார்ப்பதும் அறிது
பறிப்பாயோ நான் அடைவேன் நிறைவு
என் எதிர்காலம்...
உன் இதயத்தின் மேல்!

பூங்காவை நீங்காத ரோஜா
ஏங்காத நாளில்லை ராஜா
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, May 05, 2006
 
# 200 காதல் அகராதி
காதல் அகராதியில் கோடி அர்த்தமுண்டு
எனக்கு தெரிந்ததெல்லாம் இங்கு சொல்லுகின்றேன்

பற்றாமல் எரியும் ஜோதி
செலுத்த முடியாத சக்தி

ஓடி ஒளியாத உண்மை
மறைக்க முடியாத ரகசியம்

பக்தியில்லாத பரவசம்
உணர்த்த முடியாத உணர்வு

கவர்ச்சியான பாசம்
தவிர்க்க முடியாத தீவிரம்

சுயநலம் கலந்த தியாகம்
சேமிக்க முடியாத செல்வம்

மிதக்க வைக்கும் பித்து
தீர்க்க முடியாத வியாதி

தன்னை இழக்கும் தேடல்
செரிக்க முடியாத சுமை

வரவழைக்காத நினைவு
விரட்ட முடியாத எண்ணம்

பிறரை எண்ணி வாழ்தல்
ஆள முடியாத ஆற்றல்

தேடி அடையும் சொந்தம்
கணிக்க முடியாத பந்தம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, May 04, 2006
 
# 199 அமுதகானம்
புகைந்து கொண்டிருக்கும் இனம்புரியா ஏக்கங்களை
அங்கீகரித்து அலசிட
சோக முனகலாய் சாரங்கி...

முடிவில்லா தொடக்கமாய்
காலத்தைக் கட்டிப் போட்டு
நிற்கவா நடக்கவா என்ற தீர்மானம் தேவையின்றி
நிலைகளைப் பொய்த்தபடி
தடம் பதிக்கும் தபேலா...

இவை மத்தியில் மூச்சுக் காற்றை
உயிர்குழாய்களில் வழியவிட்டு
சாதகப் புயலில் சூடுசெய்து
எண்ணி முடியாத கட்டைகளில் பண்டிதன்
பாடல் வரிகளாய் பதம்பார்த்து
அசைபோட்டுப் பரிசீலித்து அரவனைத்து
புடம்போட்டுப் படியேற்றி
அனுப்பி விடும் அமுதகானமே
கசல் பாடல்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, May 01, 2006
 
# 198 தமிழுக்கொரு கண்ணகி
மந்தமாருதமெல்லாம் மந்தமாகக் காரணம்
சந்தமிங்கு செத்துப்போனதே
கட்டும் தமிழ் கவிதை
மெட்டுக்கென்ற நிலையில்
சொற்சுவையும் குட்டுப்பட்டதே

மெல்லினத்தில் இருந்தால் பாடுவது சுலபம்
சாக்கு சொல்லி பொட்டழிக்கிறான்
தமிழை
மெட்டுக்காரன் பொட்டழிக்கிறான்

பொருள் நீங்கி விதவை ஆகிவிட்ட பிறகு
வார்த்தைகளைக் கற்பழிக்கிறான்
இசைக்கென வார்த்தைகளைக் கற்பழிக்கிறான்
உடந்தை பாடகனும் சேர்ந்திருக்கிறான்

வெட்கம்கெட்ட ரசிகன்
கப்பம் கட்டிக் கேட்பதால்
செவிகளில் காறி உமிழ்வார்
தமிழரின்
செவிகளில் காறி உமிழ்வார்

துரோகிகளை சுட்டெறிக்க
தமிழுக்கொரு கண்ணகி
சிலம்பெடுக்கப்போவதில்லையா?
கற்பு பெண்ணுக்குண்டு
தமிழுக்கில்லையா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, April 26, 2006
 
# 197 வெட்டு மின்னல்
வாசத் தெளிக்க வந்த வண்ண நிலவே
நாக்கூசி நிப்பதென்ன நெஞ்சுக்குள்ள?
பொடி வெச்சு புள்ளியிட்ட கோலத்தில
வெட்டு மின்னல் பட்ட மரமானேன் புள்ள

கொட்டப் போகுது திராட்சைக் கொடி
எட்டிப் பாக்குது கள்ள நரி

தொட்டாக் கரைஞ்சுவிடும் அச்சு வெள்ளமே
உன்னை பத்தாப்பு படிக்கையில பாத்தபடிதான்
கண்ணு கொட்டாம ஏக்கத்தில பாத்தபடிதான்
இந்தக் கடங்காரன் நெஞ்சுக்குள்ள இன்னுமிருக்க

மச்சக் காளை இவன் மனசு வெச்சான்
மிச்சம் மீதி என்ன கணக்கு வெச்சான்

வத்தாக் கெணரு நெஞ்சு வாரி இறைக்கும்
முத்தாரம் மூக்குத்தி தங்கவளவி
பத்தாட்டி இன்னும் கொஞ்சம் பக்கம் வந்திரு
பக்குவமா புத்தாடை சேத்து செய்யிறேன்

சிந்தப் போகுது பழச்சாரு
சித்தம் தீரத்தான் குடிப்பாரு

திருவிழா கூட்டத்தில தத்தளிக்கிறேன்
ஊரு சனம் விட்டு நான் ஒண்டி நிக்கிறேன்
கருமாரியம்மங் கோயில் வாசலில
கட்டுகட்டா கையில் மல்லி மொட்டு விடுது...

காலங் கடந்தும் உன்னக் காணலியே?
காலை விடியுமுன்ன வாசப் பக்கம் வந்து பாக்கவா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, April 25, 2006
 
# 196 ஏகாந்தம்
மாலைத் தூறலில் மஞ்சள் நீராடி
சோலை வசந்தத்தில் சிறகுலர்த்தி
மதிற்ச்சுவரில் தத்தி நடந்து
மாடத்தில் குளிர்காயும் வெண்புறாவே...

உன் அன்றாட வாழ்வின் ஏகாந்தம்
என் வாழ்வின் உச்சத்தில் கூட இல்லையே?
...யோசித்தேன்

உடைந்திருக்கும் கிளைகளைக்கூட நீ
ஒருங்கினைத்து கூடு செய்தாய்
இயற்கையிடம் உனக்கிருக்கும் உறவே உயர்வு
உன்னையும் குறிபார்க்கும் உள்ளத்தார் நாங்கள்
ஏகாந்தம் எங்களை விட்டு
எட்டியே இருக்கட்டும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, April 19, 2006
 
# 195 உறுதிமொழி
புவி போற்றும் உன் திறமை
நீ கற்றது கடலாகும்
நீ படித்து மறந்ததையே
நான் கிரகிக்க நாளாகும்

உன் நெஞ்சின் உயிர்துணை நான் என்றேதான் நினைத்திருந்தேன்
உன் அவசரத் தேவைகளை அனுசரித்தே வாழ்ந்து வந்தேன்
பரிவாகக் கிடைத்ததெல்லாம் பாசாங்காய் உணர்ந்தாயோ?
பலமென்று இருந்த என்னை பலவீனம் என்பாயோ?
உன் சேவைக்கென நானும் உதித்ததாய் நினைத்தாயோ?
அருமை தெரியாதவரின் அருகாமை வெற்றிடமே

உன் துரையில் உன் மதிப்பு
கோபுரக் கலசமது
ஊர் உனக்கு சிலைவைக்கும்
நூலகம் உன் பெயர் தாங்கும்
நாளிதழ்கள் உன் வாழ்வை வரலாற்றில் கொடி நாட்டும்
உடனிருந்த எனைக் கேட்டால்
உன் நிழலில் சுகமில்லை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, April 17, 2006
 
# 194 வசியக்காரி பதில் பாட்டு
கோதை பாத்த போதையிலே
தோகை விரிக்கும் ஆண்மயிலே
சோளக் காட்டை சுத்தி சுத்தி நடக்குறியா?
மனுசா...
ஆவிப் புகையா அலைவது ஏன்?
அம்புலி முகத்தை அனுகுவதேன்?

வெள்ளைக்காரி நான் இல்ல
வாய்க்கு ருசியா தரச் சொல்ல

பாசத்தோட விசமம் கலந்து
பரிமாரும் குணந்தான் உனது
சொல்லிப் பாத்தும் கேக்கலையா என் உசிரே?
உசிரே...
கோலம் போட்டும் வாசல் மூடிக் கெடக்கனுமா?
வெளக்கு ஏத்தி வைக்காமே
மனசு எரிஞ்சா உன் பாடு

வெள்ளைக்காரி நான் இல்ல
வாய்க்கு ருசியா தரச் சொல்ல

சேத்து வெச்ச காசையெல்லாம்
செலவழிச்சு ஊதாதே
பாக்குவெச்சு பரிசம் போட வேணாமா?
வாலிபா
தாங்கத் தாங்க தலைக்குமேல ஏறுவியே
சாவிக் கொத்தா சினுங்கிக்கோ
பூட்டு தெறக்க முடியாது

வெள்ளைக்காரி நான் இல்ல
வாய்க்கு ருசியா தரச் சொல்ல

சங்கு கழுத்தை நெனைச்சுபுட்டா
கங்கு தெறிக்கிற கரித்துண்டா
நெஞ்சு கொதிப்பது நெசமானா
வாரியா?
வண்டிமாட்டை ஓட்டிகிட்டு
வாடிப்பட்டி பொண்ணெடுக்க

வசியக்காரி வருவேனே
வாக்கப்பட்டா தருவேனே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, April 13, 2006
 
# 193 நிழலின் பிடியில்
உல்லாசம் தழுவிப்போவதேனோ?
சிக்காமல் நழுவிப்போவதேனோ?
பின்னாலே தடயம் தேடத்தேட
கண்காணா தொலைவில் ஓடிப்போகும்
நிராசைத் தீயில் வேகும் இந்தத்தேடல் வேட்கைதான்
மனித வாழ்கைப்பாடோ?
இன்பங்கள் தற்காலிகம்தானோ?

நிழலின் பிடியில்தான் ஒளிவடிவோ?
உறக்கம் கலையத்தான் உயிர் பிறிவோ?
மூச்சுக் காற்றையே வாங்கி விடுகிறோம்
நினைவை மட்டும் ஏன் கட்டி அழுகிறோம்?

சுகத்தைத் தேடியே மனித யாத்திரை
சுவைத்துப் பார்த்திட வகைக்கோர் மாத்திரை
இடையில் வந்ததை உறுதி என்கிறோம்
இறுதிப்போரைத்தான் புறக்கணிக்கிறோம்

இருளில் தொலைத்ததை ஒளியில் தேடினால்
தொலைந்துபோனது வெளிச்சம் ஆகுமா?
வெளிச்சம் என்பதே தொலைந்துபோகுமா?
அகக்கண் பார்வையில் உதிக்கும் காட்சிகள்
முதற்கன் பார்த்தபின் முகங்கள் தேவையா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, March 29, 2006
 
# 192 வசியக்காரி வருவாளா?
கோதை பாத்த போதையிலே
தோகை விரிக்கும் ஆண்மயிலே
சோலக் காட்டை சுத்தி சுத்தி நடக்குதடி
மனமே...
ஆவிப் புகையா அலையுதடி
அம்புலி முகந்தான் தவழுதடி

வசியக்காரி வருவாளா?
வாய்க்கு ருசியா தருவாளா?

விருப்பத்தோட விசனம் கலந்து
பரிமாறும் குணந்தான் உனது
சொல்லிப் பாத்தும் கேக்கலையே என் மனசு
கிளியே...
கோலம் போட்டும் வாசல் மூடிக் கெடக்குதடி
கம்புலி போட்டும் குளிருதடி
கறந்த பாலும் கசக்குதடி

வசியக்காரி வருவாளா?
வாய்க்கு ருசியா தருவாளா?

சேத்து வெச்ச ஆசையெல்லாம்
செலவழிஞ்சு போனாலும்
பாக்கப் பாக்க ஆசை இன்னும் ஊறுதடி
வான்மதி...
ஏய்க்க ஏய்க்க தலைக்குமேல ஏறுதடி
சாவிக் கொத்தா சினுங்குதடி
சடலக் காடா எரியுதடி

வசியக்காரி வருவாளா?
வாய்க்கு ருசியா தருவாளா?

சங்கு கழுத்தை நெனைச்சுபுட்டா
கங்கு தெறிக்கிற கரித்துண்டா
நெஞ்சு குதிக்குது நெசமாத்தான்
குயிலே...
வண்டிமாட்டை ஓட்டிகிட்டு
வாடிப்பட்டி எட்டிபுட்டேன்

வசியக்காரி வருவாளா?
வாய்க்கு ருசியா தருவாளா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, March 21, 2006
 
# 191 நெத்தியில ரேகை
சேவலுக்கு சேதி சொல்ல சூரியன் வந்தாச்சு
வாசலுக்கு கோலம் போட்டு பூவும் வெச்சாச்சு
நெத்தியில ரேகை வெச்ச நெனப்பு தீரல
சுத்தஞ் சொன்ன புத்திமதி வெத்துக் கையில

கயித்துக்் கட்டில் கோடு இன்னும் முதுகு ஏறல
கடன்பட்ட நெஞ்சுக்குள்ள காயம் ஆறல
கூலிப் பணம் கெடைச்சதில கஞ்சி வேகல
வானம் பூமி ரெண்டுமே ஈரம் காணல

மரக்கெளைக்கு மஞ்சக் கயிறு பூத்து மாலல
வயசுப் பொண்ணு கழுத்துலதான் ஒன்னும் சேரல
கோயில் குளம் போன மக்கள் கண்ணு காயல
நேந்துகிட்ட அம்மனுக்கு நேரம் போதல
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Saturday, March 18, 2006
 
# 190 என் உயிர்மடலின் உன்னதம்
என் மனைவிக்குள்ளே
என் மை எழுத்து
கருவாய் உருவாய்
கண்ணாய் கருத்தாய்
கையசைத்து காலுதைத்து
வளர்ந்து வெளியேறி
வாய்மொழிய...

வார்த்தை உவமைகளுக்கப்பால்
என் எண்ணம் தொலைந்து
இடம் தேடி அலைந்து
பின்பு பேரின்பம் எனும் சிற்றூரில்
சிறகிறக்கி சிலிர்க்க...

என் கைப்பட எழுதிய கவிதைகள்
பல இருந்தும்
என்னரசி அடைகாத்து அன்பளித்த
உயிர்மடலின் உன்னதம்
இயற்கையின் முன்
என் சிந்தையின் சிக்கனத்தை
என் இலக்கியத்தின் எல்லையை
என் இயலின் இயலாமையையே
சித்தரித்தது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Sunday, February 26, 2006
 
# 189 செந்தாமரை செண்டைப்போல
பல்லவி:

M: செந்தாமரை செண்டைப்போல சூரியன் அங்கே சரிகிறதே மின்மினிகள் ஒளியில் இளகி வைரக் கோடாய் மழை வருதே

F: ஏனிந்த நிலையிது உனக்கு புரிகிறதா?

M: நாமிங்கே கூடும் நேரம் ஒளியோடு வெப்பம் ஓடும்

F: ஏனோ நாம் இனைவதில் இந்த இயற்கையும் ஆர்வம் காட்டிடுதே

M: விழா காலம் இன்றேதானடி... விளக்கங்கள் கண்ணில் பாரடி

(செந்தாமரை...

சரணம் 1:

M: கறைந்திடும் பொழுதை நினைவென தொடுத்தாய்

F: அள்ளாத சுவைகளும் இருக்காதா - இங்கு தெம்மாங்கு தமிழாய் மணக்காதா?

M: காதலியென்றே நான் உறவாட காவியப் பெண்ணாய் நீ புலனாக

F: சிந்தை எங்கும் சிந்தைப் பாடும் விந்தை உனது உனது உனது உனது உனது

M: கங்கை முங்கும் எந்தன் தனிமை புனித உறவில் கறைந்து கறைந்து குறையட்டுமே...

சரணம் 2:

F: வாலிபத் தோள்களிலே நகம் கிள்ளி வளையை உடைத்ததெந்த விடை சொல்லி

M: காற்றில் மிதந்து வரும் புது லகரி கண்களில் வீசி வரும் தென் கவரி

F: உந்தன் எண்ணம் எந்தன் மனதில் வளர வளர வளர வளர வளர

M: எந்தன் சின்னம் காதல் போரில் கனிய கனிய காதல் இங்கு மலரட்டுமே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Sunday, February 12, 2006
 
# 188 ஏகலைவன்
நான் ஏகலைவனா இல்லரத்திலே சொல்வாய் சேதி
அனுமதியின்றி வழிபடவா உனை அடைந்தேன் தோழி?

குருவென்பதால் துரோனன் கேட்ட காணிக்கை போல் நீ
என் காணிக்கை என்னவென்று கேட்பாய் தோழி?

அருகதையின்றி சீடனாகியே விரலிழந்தான் அன்று
அனுமதி கொண்டும் அழைப்பில்லாது அகம் கசந்தேன் இன்று

போர்த்தொடுக்கவோ பின்வாங்கவோ எதுதான் நீதி?
தீக்கொழுந்துபோல் தீண்டும் நெஞ்சே கொடுத்தாய் தோழி

வீரம் தந்து பின் வாளைக் கொய்தால் உயிர்க்காதாவி
மாலை கண்டுமே இரவு தனித்தால் முறையா தோழி?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, February 09, 2006
 
# 187 தனிமை
தனிமை ஒரு சாபமோ?
அதுவே மெய் நிலையோ?

பிறவியே நம் சம்மதத்தை
பொருத்ததில்லையே
இணைந்திருந்த இருவரால்
நாம் நிகழ்ந்த நியதியே

அலை போலக் காலம் பாய்ந்து பணியுதே
உடலோடு உள்ளம் வேடம் மாறுதே

தனித்த தேவை, வித்தை, வேலை,
வாழ்கைத் தோழர்கள்
என்று சேர்க்கிறோம் தனிமை ஏய்க்கிறோம்
முடிந்தவரை

தனிமை ஒரு சாபமோ?
அதுவே மெய் நிலையோ?

கடிகார முட்கள் பல கடந்த காயத்தில்
நம் சாயம் வெளுப்பதும் ஞானம் பூப்பதும்
முடிவின் ஓரத்தில் பயண தூரத்தில்
பயன் எவர்க்கு?

உறவுப்பூக்களே மடிந்து மலர்ந்திட
கணக்கில் வேற்றுமை இருக்கும் வாழ்க்கையில்
தனிமை ஒன்றுதான் உறுதி

தனிமை ஒரு சாபமோ?
அதுவே மெய் நிலையோ?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Saturday, January 28, 2006
 
# 186 நெய்தல்
பகற்பொழுதெல்லாம்
உன்னைப் பகைக்கிறேன்
அந்தி இருளாது
உன் பந்தி விரியாது

கருத்து வேறுபாடு என்றில்லை
கடமை என்று
உழுது வருகிறேன்
காரியாலயக் கரிசல்காட்டில்

மேய்ப்பாளனின் கோட்பாடுகளை
மொழிதிருத்தல் என் வேலை

கணினியில் கவிதை பெற
சிந்தனை சீறினாலும்
கைத்தெறித் தட்டச்சில்
பா ஆடை நெய்திட
காலம் வரவில்லை தற்பொழுது

உறவு, உணவு, உறக்கம்
என்று ஒன்றுடன் ஒன்று
ஓடி வர
இல்லரம்தான் இப்பொழுது;
உறக்கத்தை மட்டும்
துறத்தி விட்டு
மற்றவைக்கு மனமுவக்கும்

இரவு இறுதியில் திரை இறங்கி
பிறரையெல்லாம் போர்த்திவிட
கற்பனைக் கூடாரம்
குவிந்து எழும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, January 10, 2006
 
# 185 ஒரு மழைத்துளியின் சுயசரிதம்
இன்றைய அந்தி மழையின் துளி நான்
பூமி காதலிக்கு மேகம்
பொழிந்த காணிக்கையில்
நானும் அடக்கம்

இலைகள், கிளைகள், முட்கள் தழுவியே
எனது பயணம் இதுவரையில்

என் முடிவு மலரிதழ் என்றால்
முழு மனதாய் மணம்
கொடுத்து மகிழ்வேன்

காற்றிலே ஆன்மா கறையும் என்றாலும்
அதை வாடை என்று பொருள்
மாற்றி பூரிப்பேன்

பூமித் தாயின் மடியிலும்
எந்தன் இறுதியின் ஈரம்
பயன் தரும்

ஆனால் மனித உடலில் விழுந்தால்
ஒரு பயனுமின்றி
வழியில் சேகரித்த சுவை முகையும்
இழந்து மறிப்பேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, January 04, 2006
 
# 184 கற்பனைத் தூண்டில்
கற்பனைத் தூண்டிலைக் காற்றில் வீசினேன்
கைக்கு வந்தன சில உவமைகள்

துண்டு நிலவு
சாவி நுழைவழி
காரிருள் வானம்
கருங்கதவாம்

பனி மழை
தேவதைகளின்
தலையனைப்போராம்

மேகக் கூட்டங்கள்
வானவர்களின்
ஊதுவர்த்தி புகையாம்

விண்மீன்கள் ஓட்டைகளாம்
பின் ஒளிந்திருப்பது
ஒளிப்புனலாம்
வானின் நிர்வாணம்
பகற்பொழுதாம்

கால நேரங்கள்
வித்தைகளாம்
வயது வாழ்க்கைக் கட்டினமாம்
நோய் மருந்துகள் வட்டிகளாம்
மரணம் மொத்த முதல் தொகையாம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 183 ஆயுள்
அந்த வானின் வயதைக் கேட்டேன்
பதில் காற்றில் வந்தது
எனைக் கேலி செய்வது போல
கேள்வி மீண்டும் ஒலித்தது

இந்தப் பூவின் வயதைக் கேட்டேன்
அதன் வாசம் வந்தது
இந்த வாசம் போன பின்னே
ஏது வாழ்க்கை என்றதோ?

அந்த நதியின் ஆயுள் என்ன?
என்ற கேள்வி கேட்டதும்
அது கரையை நோக்கிப் பாய்ந்து
நிலப் பசியைக் குறித்தது

இந்த பூமியின் ஆயுள் என்ன?
நான் பயந்து கேட்டதும்
என் கையில் புழுதி ஏற்றி
அது நம் கையில் என்றது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Saturday, December 24, 2005
 
# 182 மீட்பு
அலைகடல் விழிகளில் நானா?
இதழ்தானே அழைப்பிதழ் ரோஜா?
மகரந்தம் நுகர்ந்தேன் நீயா?
மடிசாய்ந்தே மயங்கிடலாமா?
ரகசிய வசியத்தின் வசத்தில்
விண்ணுக்குள் விழுந்தேன் மீட்பாய்
நான்தான் விண்ணுக்குள் விழுந்தேன் மீட்பாய்

(அலைகடல்...

நடைபெரும் நாடக உலகில்
சில வரைமுறை எதிர்ப்பாய் இருக்கும்
நிகழ்வினில் ஆயிரம் பிணக்கம்
இது உறவுக்குள் சில நாள் நடக்கும்
அது போல் நடந்திடும்போது
இந்த நாட்களை மறந்துவிடாதே

வான் இறைந்தே வாழ்த்திடக் கலந்தோம்
நாம் இணைந்தே வாழ்ந்திடப் பிறந்தோம்
நீ என்னை நாடிய பொழுது
விண்ணுக்குள் விழுந்தேன் மீட்பாய்
நான்தான் விண்ணுக்குள் விழுந்தேன் மீட்பாய்

(அலைகடல்...

உறவுகள் ஆயிரம் வகையில்
பல வளர்ந்திட முயன்றே இறக்கும்
வளர்பிறையாகவே இருந்தால்
இங்கு முடிவின்றி பல நாள் நிலைக்கும்
உறவே வளர்ச்சியைத் தேடி
நம்மைத் தேங்கிட அனுமதிக்காதே

ஊர் உலகே மாறிய பொழுதும்
நாம் வயதால் வாடிட விளைந்தும்
நீ என்னைச் சேர்ந்திட்ட மிதப்பில்
விண்ணுக்குள் விழுவேன் மீட்பாய்
நான்தான் விண்ணுக்குள் விழுவேன் மீட்பாய்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, November 10, 2005
 
# 181 வழக்கத்தின் சேவை
நதி செல்லும் பாதை
வழக்கத்தின் சேவை
விருப்பத்தின் திசை வேறிடம்

விதி செய்த கோலம்
நட்பென்னும் வேடம்
மனதிற்குள் ஆசை ஊறிடும்

சொல் தென்றலே...
ஏன் இப்படி?
என் கைப்படும்
மலர்
தோள் சேராது போல்
நிர்பந்தம்?

நதி செல்லும் பாதை
வழக்கத்தின் சேவை
விருப்பத்தின் திசை வேறிடம்

வக்கிரமாய் மனம் அசைபோடும்
அக்கிரம ஆசை நூறு
சொக்கிடு வசியப் பார்வையில்
தேனே...

செல்வோமா வேறு ஊர்?
உருவாவோம் வேறு பேராய்
பழங்கதைகள் அங்கே ஏதடி?
தோழி கூறடி
நீதான் காதலி
ஆள் மாறாததா
நிர்பந்தம்?

நதி செல்லும் பாதை
வழக்கத்தின் சேவை
விருப்பத்தின் திசை வேறிடம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Saturday, November 05, 2005
 
# 180 நித்திரையின் நிழல்
சூராவளி சூரையாடும்
ஒரு பக்கம்
வெள்ளம் கொல்லும்
ஒரு பக்கம்
அனுதாபம் அஞ்சலில்
அதர்மம் தந்தியில்

நித்திரையின் நிழல் நாங்கள்
நட்சத்திரங்களும் நகைக்கும்
எங்கள் பாட்டை
நிலவும் காட்டும்
புறமுதுகை

எங்கள் வருகையைப் பார்த்து
விடியலும் பின் தங்கும்
ஈர விழிகளைப் பார்த்து
முகிலும் காயும்
மின்னல் எக்களிக்கும்
இடி கொக்கரிக்கும்

முறையிடப் போன கோவிலில்
மணியில்லை
குறைகளைக் கொட்டிட
வானவெளியில்கூட இடமில்லை

இயற்கை அல்ல
ஏளனத்தின் குழந்தைகள்
நாங்கள்
எச்சரிக்கையின்றி தாக்கும்
பிணப் பிச்சைக்காரியின் பெயர்
இயற்கை அன்னையாம்!
வெட்கக்கேடு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, November 04, 2005
 
# 179 தீக்குளிப்பு
விலகாதோ மேகம்
மிளிராதோ வானம்
விடிவில்லை விறகைக் கொடு

புலராதோ பாதை
எரிந்தாளே சீதை
எமனே உன் ஆட்சி விடு

பூ முடிந்தவள்
தீக் குளிக்கிறாள்
இதைப் பார்த்தா நானும் வாழ்கிறேன்?

புத்தனும் எதிர்பார்க்காத ஞானம்
சென்றவரின் நினைவில் கூடும்
தத்துவங்கள் இழப்பின் விருதுகள்

விரைந்தோடும் வாழ்வின்
வேகத்தில் கறையும் என்று
துக்கத்தை தோளிலேற்றினேன்
பாரத்தில் நான் மூழ்கவா?
காலத்தால் சுமை இலகவா?

முடிவுக்கோட்டில் கேட்டால்
தேர்ந்தது யார் தெரியும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, October 31, 2005
 
# 178 கேளடா கேசவா
கேளடா
கேசவா
கூடலில் உன்வழி போகவா?

நீ செய்தால்
லீலையா
நான் அதை செய்வதால் பாவியா?

கேளடா...

நானுமே ராமனாய்
வாழவே பார்க்கிறேன் தோல்வியே
சீதையைத் தேடையில்
கோகுலம் தூண்டிட நோகிறேன்

நன்னெறிப் போர்வையில்
ராமன் ஆனாய்
ஆசைப்பெண் இணங்க
கண்ணன் ஆனாய்

உனக்கென்னய்யா
நீ உருமாறூவாஇ
எனக்கில்லையே
சுக அவதாரங்கள்
சுக நிலை இங்கு நான் கான...வழி சொல்லுவாய்

(கேளடா...

நெஞ்சிலே நேர்ந்திடும்
சஞ்சலம் யார்செயல் கூறடா
ஆசையை கூட்டினாய்
மயங்கினால் முறைகெடலாகுமா?

இரு பட்சிக்கா
இந்த உறவுக் கூடு?
பிறர் சம்மதம்
கொண்டு இணைந்தால் போச்சு?
ஆசைக் கடலுக்கு பங்காளி பலராகுமே!

(கேளடா...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, October 21, 2005
 
# 177 மஞ்சக் கறை
ஆண்:
சிங்காரச் சிட்டே நீ சூடிக்கிடத்தான்
வாங்கிவந்தேன் வாசமல்லி
கதவைத் தெறடி

பெண்:
ஆசையா நீ பேசிப் பேசி
மோசம் பன்னுற
வாசப்படி ஏறுனா
நான் வெட்டிப்புடுவேன்

ஆண்:
அய்யோ, நான் என்ன செஞ்சேன்
சொல்லிப்போடடி
அக்கம்பக்கம் பாக்குறாங்க
கதவைத் தெறடி

பெண்:
நான் மஞ்ச பூசித்தான்
நாளாகுதே
உன் சட்டை மஞ்சக் கறை
ஏன் காட்டுது?

திருப்பாச்சி எடுத்து
தீட்டி வெச்சிட்டேன்
வாசப்படி ஏறுனா
நான் வெட்டிப்புடுவேன்

ஆண்:
வண்ணாத்தி சட்டையில
வெச்ச கறைதான்
உன் சந்தேகப் புத்தியால
மிச்ச கதைதான்

பொள்ளாச்சி சந்தையில
கேட்டுப் பாரடி
என் பேரைச் சொல்லி
ஊரைச் சொல்லி
கேட்டுப் பாரடி

பெண்:
முழுக்கை சட்டையில
மஞ்சள் உண்மையா?
நீ நம்பச் சொல்லி
கெஞ்சுற கெஞ்சல் உண்மையா?

ஆண்:
எங்கிட்ட ஏதடி
முழுக்கை சட்டை?
அது போனவாரம் வந்து போன
உங்கொப்பன் சட்டை

வாசமல்லி வாடுமுன்னே
வாங்கி வெய்யடி
வஞ்சதுக்கு வக்கனையா
ஈடு செய்யடி

பெண்:
எங்கப்பன் உன்னைப்போல உத்தமரா?
இல்லை ஆத்தாளை திருப்பாச்சி
தீட்டச் சொல்லவா?

ஆண்:
பொல்லாப்பு செஞ்சதால
வந்த மஞ்சளா?
உன் காமாலைக் கண்ணுனால
வந்த மஞ்சளா?

நல்லதே நீ நெனைச்சா
நிம்மதி புள்ளை
பொல்லாங்கு பேசினா
பொழப்பே தொல்லை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, October 19, 2005
 
# 176 அன்பே...
இன்ப கூடம்தான்
இரவு நேரம்தான்
கண்கள் கோர்த்தோமே?
அன்பே...

ஆடி வா என்று
தாளம் கேட்காதோ?
கால்கள் பேசாதோ?
அன்பே...

சுழலும் காற்றோடு
அசையும் நாற்றாக
உடலும் ஆடத்தான்
மனதும் கூடத்தான்
இன்ப எல்லைகள்
இன்று மீறத்தான்
கொஞ்ச நேரம்தான்
துன்பம் தூரம்தான்
சொந்தம் ஆவாயோ?
சோர்ந்து போவாயோ?

இன்ப கூடம்தான்
இரவு நேரம்தான்
இடை இணைந்தோமே?
அன்பே...

பன்பாடு நாளும் மாறுதே
முகவுரை அன்று மண நாளிலே
அறிமுகம் இன்று முடிவுரை ஆனதே
ஏன் அன்பே?

சந்தித்தோம் இன்ப ஊரிலே
நேசித்தோம் ஆடல் பேரிலே
விடைபெறுவோம் தனிமைத் தீவிலே
ஏன் அன்பே?

எம்மனதை யார்தான் சேரவோ?
யார் துயிலை யார்தான் போக்கவோ?
அசைந்தாடும் உடல்கள் மத்தியில்
அசைபோட்டேன் சுருங்கும் நெற்றியில்

எப்பாதை விரிந்த போதிலும்
இக்கோதை எந்தன் விழிகளில்
தப்பாமல் இருக்கப் போகிறாள்
சொன்னேன்
எழுதி வை
இன்றே
எழுதி வை

இன்ப கூடம்தான்
இரவு நேரம்தான்
கண்கள் கோர்த்தோமே?
அன்பே...

ஆடி வா என்று
தாளம் கேட்காதோ?
கால்கள் பேசாதோ?
அன்பே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, October 18, 2005
 
# 175 என் வானின் கிழக்கே
சிகரம் நீ
சிறகும் நீ
வழிகாட்டிதான் இங்கு
வாய்க்கவில்லை

என் இதயமொழி
ஒலிபரப்பை
ஏற்கலையா உன் அலைவரிசை?

என் வானின் கிழக்கே
எனைச் சேர்ந்திட
வழக்கேன்?

என் உள்ளுலகின்
விடியற்காலம்
உன் செவி மயங்கி
சாயும்காலம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, October 11, 2005
 
# 174 வேற்றுமைகள்
நிழல் தேடும் நெஞ்சை
நெருப்பு குளிப்பாட்ட,
பனியின் பரவச இதழ்
சுடும் மேனியில் சிளிர்ப்பூட்ட,

ஊசி மழை நிலத்தைத் தைக்க,
கறையும் மணல் குழி பறிக்க,
பனிமலை சறிய,
பள்ளத்தாக்கு நிமிர...

ஒற்றுமையின் அம்சத்தை
போதிக்கும் உலகம்
வேற்றுமைகளின் தீவிர
உறவை தெரிந்திருக்க
ஞாயமில்லை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, October 06, 2005
 
# 173 காதல் குணம்
என் வசத்திலே இல்லாத பொருளை
இழந்ததுபோல வலிப்பது ஏன்?
சொல்லாத உறவை சுயம்வரத்தாலே
சூடித் தவிக்கிற விசித்திரம் ஏன்?
இது இருந்தும் இல்லாத
இருப்புகொள்ளாத
காதல் மனம்
இது புரிந்தும் புரியாத
முடிந்தும் முடியாத
காதல் குணம்

பந்தலிட்டு காத்திருந்தேனே
எங்கே எந்தன் பூங்கொடியை?
வேறொருவன் மனதை நோக்கி
படர்ந்துவிட்டாளோ தாங்கலையே

பாறை கூட பசுமையாகுமே
பாசம் நிறைய படிஞ்சிருந்தா
வேர் கொடுத்த நிலத்துக்காக
நிழலை விறிக்கும் மரமில்லையா?
ஆசை மட்டும் அணலா அடிச்சும்
அக்கினி கொழுந்து பெருகலையா?
அம்புவிட்ட காமதேவனே
இரு தலைக்கும் உன் குறியில்லையா?
உடமையாக இன்னொரு நெஞ்சை
நம்பிடும் நானும் தருதலையா?

பந்தலிட்டு காத்திருந்தேனே
எங்கே எந்தன் பூங்கொடியை?
வேறொருவன் மனதை நோக்கி
படர்ந்துவிட்டாளோ தாங்கலையே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, September 29, 2005
 
# 172 இலையுதிர் காலம்
என்னாச்சு?
எங்கெங்கும் வண்ண மயம் வந்தாச்சு
பச்சை இலைகளும் பொன்னாகி
பவளம் பழுப்பென்று போயாச்சு

இனி இலையுதிர் காலம்
இரவிடம் பகல் தேயும்

வாடைக் காற்றின் தீண்டலை
ஆசைக் காதல் தூண்டலை
கொண்டாடு கொண்டாடு

ஆடை மாற்றும் சோலையை
ஓடிப்போன கோடையை
கொண்டாடு கொண்டாடு

இயற்கையும் இளைப்பாரி
உடல் தணியும் காலம்

மூடுபனி நாட்களை
பாதையோரப் பூக்களை
கொண்டாடு கொண்டாடு

ஓடத் தடம் பார்த்ததும்
ஏரிக்காரி புன்னகை
கொண்டாடு கொண்டாடு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, September 20, 2005
 
# 171 கடலோடு கயலாகத்தான்
கடலோடு கயலாகத்தான்
காற்றோடு வயலாகத்தான்
மகிழத்தான் மன்றாடத்தான்

அவள் அத்தான்
அவளைத்தான்
அழைத்தான் அருகே மெதுவாக...

கால் பதியப் பதிய சிணுங்கி வரும்
அந்தக் கொலுசைப் போலே அவள் நெஞ்சம்
இனி கேள்விக்கெல்லாம் விடைதேறும்
எதிர்காலத்துக்கு நினைவாகும்
விரல் படரத்தானே பருவங்கள்
இனி உயரத்தானே புருவங்கள்

(கடலோடு...

ஒரு பால் என்றும் ஓங்கத்தான்
மறு பால் என்றும் இனங்கத்தான்
எனும் சுயநல வேதம் மடியத்தான்
சீர்திருத்தம் என்னும் வெடிவைத்தான்
ஒரு பிடியில் இருவர் சிக்கத்தான்
இந்த உறவுக்கோலம் விளைவித்தான்

சுய உரிமைக்கிங்கே இடமேது
சம உரிமை வகுத்தால் பண்பாடு

(கடலோடு...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, August 05, 2005
 
# 170 அடித்தளம்
சந்திக்கையில் கூறும் வார்த்தை எல்லாம்
சிந்திக்கையில் கூடும் இன்பங்கள்
சொல்ல மறந்த வார்த்தைகளை
சேர்க்கத்தானே நினைவுகள்

சுயசரிதம் மிகைக்கதையே
நினைவுகளும் அதன் உடந்தையே
நடந்திடாத நிகழ்வுக்கெல்லாம்
மெருகு சேர்க்கும் மனமென்ன?
முடிவு காணா சுவடுக்கெல்லாம்
வழிகாட்டும் குணமென்ன?

தீர்வு காணா தொடக்கங்கள்
தொடங்கிடாத உறவுகள்
ஒளி மறைந்த தீபம் போல்
பயனிழந்த உணர்வுகள்

நிறைவேறா ஏக்கம்தான்
பாசத்தின் அடைக்கலம்
நிறைவேற்றும் வேட்கைதான்
வாழ்வின் அடித்தளம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, June 13, 2005
 
# 169 பருதாவுக்குள் பருவ நிலா
முகத்திரை விலக்கி நீ நீர் அருந்த
முக தரிசனத்தில் என் தாகம் பிறந்தது

வாசம் புனிதம் என்றால்
நுகரும் சக்தி கொடுப்பானா?
கீதம் உரிமைக்கென்றால்
எவரும் கேட்கப் படைப்பானா?

தாமரை கூட தண்டைத்தானே மறைக்கிறது?
தள்ளிவைத்தும் தாழை ஏன் மணக்கிறது?
ரசனை தவறாயிருந்தால் அழகைப் படைத்திருப்பானா?
ருசிக்கக் கூடாதென்றால் சுவையை சேர்த்திருப்பானா?

சோலையைப் பாதுகாக்க போர்வையால் மூடவில்லையே?
அருவியை சேகரிக்க அளவு பார்த்து ஊற்றவில்லையே?
மின்மினிகள் பிரகாசிக்க உத்தரவு கேட்பதில்லையே?
கண் இமைகள் சிமிட்டியுமே கண்மணிகள் ஒளிவதில்லையே

ஆடை என்ற பெயரில் உன் அழகுக்கு கறுப்புக்கொடி
ஆசை என்ற இயற்கைக்கு மதம் என்னும் தடுப்பூசி
ஆடை கலைந்தோர் எல்லாம் சம்சாரியா?
ஆசை கலைந்தோர் எல்லாம் சன்யாசியா?

உன் உருவத்தை சிறை வைத்தால்
பருவம் பதுங்குமா?
ஆடைக்குள்ளே அதன் அங்கலாய்ப்பு
அலைமோதும் தோனியின் அனுசரிப்பு

ஈர்ப்பு சக்தி இழப்பது நிலவுக்குள்ளேதான்
நான் பூமியென பிரமிப்பது என் இயல்புதான்
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்
நீ நிலவாய் இருந்திருந்தால்
மேகம் கூட மூட விரும்பாது உன்னை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, June 06, 2005
 
# 168 போதும்
போகும் நிலை புரிந்துகொண்ட நெஞ்சே
இதைத் தவிர வேறு என்ன வேண்டும்?
இருப்பதற்கும் இவை இருந்தால் போதும்!

கடல் பார்த்த வீடு தேவையில்லை
கர்த்தர் ஆலயம் போல் கூரை தேவையில்லை
வானம் பார்த்த பூமியென வாழ்வேன்
தேயும் வெண்ணிலவென் திண்ணையிலே போதும்

தேவைக்கென கோவில் சென்றதில்லை
தேங்காய் சிதறடிக்க வேண்டியது இல்லை
வந்ததெல்லாம் வந்தவரை லாபம்
போனதெல்லாம் இருந்தவரை போதும்

இதைத் தவிர வேறு என்ன வேண்டும்?
இருப்பதற்கும் இவை இருந்தால் போதும்!

ஊரெங்கும் உறவு வைத்ததில்லை
உள்ளவர்க்கு செலவு வைத்ததில்லை
நேசமென்று நான்கு பேர் தேறி
என்னை வழியனுப்பி வைத்து விட்டால் போதும்

மற்றபடி என்னவென்று சொல்ல
காலப் போக்கில் கற்றிடுவாய் மெல்ல
மற்ற செல்வம் எட்டி நின்ற போதும்
சொந்தமென உன்னைக் கொடு போதும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, June 01, 2005
 
# 167 மழை கோர்க்கா வான்மேகம்
மனக்கதவுக்குள்ளே
மடிந்திடவா இந்த எண்ணங்கள்?
அர்த்தம் கண்டு கொள்ள ஆள் இல்லையே
அடித்துத் திருத்தவும் வாய்ப்பில்லையே
முயற்சி இல்லாது
மூர்ச்சையாகவா ஏக்கங்கள்?
ஏற்பு காணா யோசனை சொல்ல
துணிவிருந்தால் நிச்சயம்
பழமை கண்டு பயமறியாது
புலமை வெல்லும் லட்சியம்

துணிவு தூங்குகையில்
தன்மானம் விரயம்
தன்னிரக்க சுகத்தில்
கோழைமை நிறையும்
வெளியேறா வார்த்தை எல்லாம்
விலைபோகா வியாபாரம்
எதிர்ப்பு சொல்ல மறந்தவன்
ஒத்துப் போவதாய் உவமானம்

செவி சேரா சிந்தனைகள்
மழைகோர்க்கா வான்மேகம்
மேகம் வானுலாவி வேடிக்கை மட்டும்
காட்ட நினைத்தால் என்னாகும்?

சிந்தனை பகிர்ந்த உரையாடலில்
சிக்கல் தீர்ந்து தெளிவாகும்
இருள் போர்வை மூடிய நெஞ்சில்
சூரியனுக்கே சிறைவாசம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, November 17, 2004
 
# 166 பூஜைப் பூவோ அது?
பூஜைப் பூவோ அது?
முளைத்தவுடனே எடுத்துக்கொண்டு போய்விட
வாசம் பார்த்தால் வன்முறையா?
தென்றல் கொண்ட அங்கீகாரம்
தோட்டக்காரன் அடையலையா?

அடைகாத்த ஆசைத் தீயில்
அன்பும் சேர்ந்து வேகிறதே
விதைத்ததும் வளர்த்ததும்
கடமையென்று சொல்வதென்ன பேச்சு?
பறித்தவனுக்கு மட்டும் பரிசாகிடவா
புதிய பூவின் மூச்சு?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, November 16, 2004
 
# 165 அமாவாசை பிறந்த கதை
அமாவாசை பிறந்த கதை இதுவே!
தாமரை குளம் வந்த கதை இதுவே!

வானை விட்டு மதி நழுவி
தோட்டம் வந்து
தாமரையை காதல் செய்தது
இடை தழுவி

வானவர் பார்த்தனர் பொறாமையில்,
"சந்திரனே நீ மேலவனே
ஒரு கீழ்த்தர பூவிற்கா மனமிழந்தாய்?
அந்தத் தோட்டப்பூவின் காலழகு
இனி உலகப் பார்வைக்கு மூழ்கிவிடும்"

"கழுத்து வரைக்கும் புதைந்து கிட,
குளத்துக்குள்ளே மிதந்து கிட"
தாமரைக்கு தண்டனையாய்
விதித்து விட்டனர் வானவர்கள்!

வானவர் விடுத்த கட்டளையை
மறுக்கும் நிலைமை நிலவுக்கில்லை
கழுத்து மறைந்த காதலியை
கண் கொட்டாமல் பார்த்தபடி,

"தொலைவில் இருந்து காதலிப்பேன்
திங்களுக்கு ஒரு முறை சேர்ந்திருப்பேன்
உன்னுடன் தான் நான் நான் ஆகும்
இனி திங்கள் எனக்கு பேர் ஆகும்"

வெண்மதி வாக்கை வானவர்கள்
ஒப்புக்கொண்டனர் விரக்தியுடன்,
"சமரசம் இன்றி நிலவு இல்லை
நிலவில்லாது வான் விதவை?"

அமாவாசை என்ற இரங்கல் நாள்
வானம் கருப்பு அணிந்திருக்கும்
குளத்தில் நிலவும் குளித்திருக்கும்
வெண்தாமரைகள் உருவகிக்கும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 164 உரை நீங்கி வீணை
உரை நீங்கி வீணை
மொழி பேசும் வேளை
கேட்காமல் உணர்வேன் இல்லாத சொல்லை
குறை சொல்லவில்லை தொடுக்காத வில்லை
துளை கொண்ட நெஞ்சு குறி பார்க்கும் உன்னை

செவி பார்த்தா செல்லும் இசையும்?
திசை பார்த்தா தென்றல் அசையும்?
வாசகனை நினைத்தா கசியும்
வாசிக்கும் வார்த்தை ருசியும்?
பூக்களின் வாசமே வீசுமே என்றும் இலவசம்

சுடுகாட்டிலும் பூக்கள் மலரும்
சோலையிலும் களைப்புல் விளையும்
காதலெனும் காந்த சக்தி
முறைகளுக்கு முறன்படும் யுத்தி
எழுதாத நூலிலே என்றுமே எல்லைகள் இல்லை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, August 18, 2004
 
# 163 தேய்பிறை புன்னகை
நிலவே உந்தன் தேய்பிறைக்கும் முகம் புன்னகைக்கும் திடம் யார் தந்ததோ?
நிலவே உந்தன் தேய்பிறைக்கும் முகம் புன்னகைக்கும் திடம் யார் தந்ததோ?

யாரும் தேயும் நிலை வாரும்
யாரை விட்டதிங்கு காலம்
ஒரு பாதையாய் போகையில், வழிமாற்றமே வாழ்க்கையா?
நீ என் காதில் சொல்வாய்...

(நிலவே...

தொடரும் பயணம் என்கிற நெஞ்சில், சரிந்ததும் அனுபவத் தழும்பா?
இதுபோல் கனலில் நடந்தால், பரிசு காண்பது வேறொரு வாழ்வா?
ஞாயம் மறுத்திடும் வாழ்க்கையை
நாமும் மறுப்பதே ஞானமா?

(நிலவே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, August 10, 2004
 
# 162 கடந்த கால காட்சிகள்
கடந்த கால காட்சிகள்
நினைவரங்கிலே
பிறந்த ஊரின் சூழலில்
உணர்ச்சி பொங்குமே

திரும்பி பார்க்கவோ?
கலைத்து நீக்கவோ?

நினைத்தால்...இங்கு உரைந்து கிடக்கும் பருவ ராகம் ஓலமாகுமோ?

(கடந்த...

நாரை தேடும் மீன்கள்போல் ஏக்கங்கள்
ஆக்கத் தேவை பூர்த்தியால் அழிவுகள்

இந்த நிலை தேடியா பாதை மறுத்தேன்?
பந்தக் கடன் தீர்க்கப்போய் நேசம் முறித்தேன்?

வெகு நாள் மனமுகில் மோடம் போட்டுவிட்டு
நனையும் இன்று உண்மை வெட்கம்கெட்டு

முதலாம் மோகம் பதியும்
அது இதயம் நீங்கா தடயம்
அந்த பிஞ்சுக் காதலின் நெஞ்சத் தூய்மை ஏதினி?
கொண்ட சொந்த பந்தமே எதிர்பார்ப்பில்தான் இனி

திருக்கோவில் தெருவில், வீதி முனையில்,
ஆற்றங்கரையில், தோப்புக்கருகில்,
படர்ந்திருக்கும் பனியென
அவளை நினைவூட்டும் சின்னங்கள்

| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Monday, August 09, 2004
 
# 161 மரிக்கொழுந்தே...
மரிக்கொழுந்தே
நுகர நுகர வளரும் வசியம்
உரச உரச மனசு மசியும்
இதயமே இரவலா?

மரிக்கொழுந்தே
மரிக்கொழுந்தே

தெக்கு திசைதான் எப்போதும் தென்றல் வீசும் திசையாகும்
திக்கு தெரியா மயக்கத்திலே மணம் தேடி அது வீசும்
இது சரியா, முறையா?
விதி சரியா விதி முறையா?
வழி பிடிபடாமலே நழுவிப் போகிற மாயை இந்த முகையா?

தேடத் தேட தெளிவாகும்
நாடுவதா பொருளாகும்?
வலையை வீச குறிமாறும்
மீனைப் போல மெய்ஞானம்

இந்த தென்றல் தேடப் பொய்யாகும்
மரிக்கொழுந்தே...

வளைஞ்சுதான் குடுக்கிற வானவில் நான்
வளைஞ்சுதான் குடுக்கிற வானவில் நான்
அகலமா விரியிற அலைகடல் நீ
கைப்பிடி ஆகப் பாத்தா
கடலுக்குக் கோபம் ஆத்தா
உன்னைத்தூக்க வாரேன் புள்ளை
என்னை விட்டா ஆள்தான் இல்லை

அலைகளா பாயிற நாக்குதான் மடியாது
மூழ்காம மெதக்குறேன் நான் எப்படி ஆளு?
பிடிபடப் போறியா? அடிபடப் போறேனா?
பொறுத்துதான் பாப்பமே கனியுமா காலமே

மரிக்கொழுந்தே...

வேட்டைய விரும்பிற மானுங்க ஏது?
வேடனா என்னை நீ பாப்பதும் தீது?
புரியாததின் மேல் கோபமா?
புலனாய்வு செஞ்சா பாவமா?
கூடலை விரும்பிடும் கூக்குரல் கேக்குமா?
ஆசையின் அழைப்பிதழ் அப்புரம் ஏற்குமா?
விடியிற வேளை பாத்து கருக்கிற மேகமா?

மரிக்கொழுந்தே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, July 23, 2004
 
# 160 நீலாம்பரி...
நீலாம்பரி...
நிலத்தினில் நீர் விழும் சுவைதானே நீ?
நீலாம்பரி...நீலாம்பரி...நீலாம்பரி
தூக்கத்தின் ரகசிய தூதுவள் நீ
நீலாம்பரி...நீலாம்பரி

பறவைகள் நீந்திடும் புன்னிய கங்கையோ நீ?
தாய்மையின் பாடலை ஏந்திடும் தோழியோ நீ?
தென்றலும் ஓய்வெடுக்க உன்னையே தேடுமோ?
வெண்ணிலா வாயெடுத்தால் உன்மொழி பேசுமோ?
வாசனைச் சோலையெல்லாம் உன் குணம் போற்றவோ?
வார்த்தைகள் கோர்த்துவிட்டு உன் மெட்டில் ஏற்றவோ?

மாதவன் குழல் மாதிரி
ஓதுவாய் நெஞ்சில் நிம்மதி
சிந்தை வான்வெளி
சந்தம் வான்மதி

(நீலாம்பரி...

வேதனை அலைமோதையில் கரிசனத் தோனியோ நீ?
பூபால மங்கையின் ராப்பாடித் தங்கையோ நீ?
வாத்தியம் உனை வடிக்க வைத்தியம் ஆகிறாய்
ராத்திரிப் பாய் விரிப்பு மேடையை ஆள்கிறாய்
வேகமே வாழ்க்கை இன்று ஓய்வுக்கு ஓயவில்லை
சோர்விலே சாய்ந்த போதும் பாடிடக் காயமில்லை

மோகமே மெளனப் பொய்கையாய்
சூழுமே நெஞ்சில் ராகமாய்
சிந்தை வான்வெளி
சந்தம் வான்மதி

(நீலாம்பரி...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, June 10, 2004
 
# 159 சுண்டி இழுத்தால் சூரியன் கையோடு
பாடல் தலைப்பை அழுத்தினால், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்தின் இணையத் தளத்தில் இந்தப் பாடலின் இசை வடிவம் அடங்கிய பகுதிக்கு கொண்டு செல்லும்!

(VERSE)
அந்த நிலவைக் கொடியில் காயவிடு
இந்த காற்றின் விசையை ஏற்றிவிடு

மரபுக்கு நீ மனதைக் கொடுத்துவிட்டால்
புரட்சி இங்கு விழிப்பது எப்பொழுது?


(CHORUS)
சுண்டி இழுத்தால் சூரியன் கையோடு
வீசிப் பார் வீசிப் பார் வலை வாலிபமே
விண்ணை இறக்கி வீட்டுக் கூரையிடு
வீசிப் பார் வீசிப் பார் வலை வாலிபமே

(VERSE)

பிரம்பென நரம்பிங்கு புடைக்குது புடைக்குது புடைக்குது
எழுந்திட மரபுன்னை தடுக்குது தடுக்குது தடுக்குது
பொருத்திடு பகிர்ந்திடு இருப்பதை மகிழ்ந்திடு
சிறுதுளி பெருவெள்ளம் போதனை பழங்கதை

உடலுக்கு உரமுண்டு இனியென்ன வழக்கு
நிலத்தினில் உரமது இறந்தபின் கணக்கு
அடக்கம் செய்வது உன் முடிவில்
ஆடிப் பார்த்திடு அது வரையில்

(CHORUS)
சுண்டி இழுத்தால் சூரியன் கையோடு
வீசிப் பார் வீசிப் பார் வலை வாலிபமே
விண்ணை இறக்கி வீட்டுக் கூரையிடு
வீசிப் பார் வீசிப் பார் வலை வாலிபமே
வீசிப் பார் வலை வாலிபமே

(VERSE)
இயற்கையின் விதியை மாற்றிப்பார்
தாமரையை தரையில் பிறக்க விடு
பெண் மயிலும் தோகை விரிக்கட்டும்
அதன் முதுகில் இறகைச் சொருகிவிடு

சொர்க்கம் என்னடா மூடரின் ஆசைகளே
ரத்தம் சிந்திப்பார் மண்ணும் மாளிகையே
கடிவாளம் மூடமையே, கட்டவிழ்த்துவிடு
சுரக்காத தேன்கூட்டை சுட்டெறித்துவிடு

பழுதான பழமொழிகள் பற்றியெரியவிடு
வறட்சி வேரிலே புரட்சி பூசிவிடு
விளையாத மண்ணின் விதியே மாற்றிவிடு
காட்டாறு வெள்ளமாகுமுன் கால்வாய் வெட்டிவிடு

வடக்கு வாழ தெற்கு தேயும்
வழக்கம் ஓட்டிவிடு
இடக்கு பேசும் இனவெறிக் கூட்டம்
இல்லாதாக்கிவிடு

மழை சிதறா வேளையிலே
முகிலை உருக்கிவிடு
காலச் சக்கர வேகத்தின்
காற்றிறக்கிவிடு

அறிவால் மாற்றாவிடில்
அறுவாள் மாற்றும் நிலை
மயிலே இறகு என்றால்
மாறாதென்றும் கதை

(Chorus)
சுண்டி இழுத்தால் சூரியன் கையோடு
வீசிப் பார் வீசிப் பார்
வலை வாலிபமே
விண்ணை இறக்கி வீட்டுக் கூரையிடு
வீசிப் பார் வீசிப் பார்
வலை வாலிபமே

| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, June 08, 2004
 
# 158 இருட்டு வேளையில் (aka The Cart Song)

பாடல் தலைப்பை அழுத்தினால், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்தின் இணையத் தளத்தில் இந்தப் பாடலின் இசை வடிவம் அடங்கிய பகுதிக்கு கொண்டு செல்லும்!

இருட்டு வேளையில் கறுப்பு சாலையில் வெண்மதி ஓடுதுங்க*
அந்த முறட்டு சூரியன் முறைப்பதைக் கண்டு முகத்தை மூடுதுங்க*

வயக்காடு கெழக்கால வழிப் பாதை மேற்க்கால
எட்டுத் திக்கும் தேடி உன்னை காணலியே
நான் வீடு செல்லுமுன்னே கதிர் மேற்கே மறையுமடி
வெளிச்சமா உன் சிரிப்பு போதுமே

ஊரறிஞ்ச உண்மை என் உறவு காத்த பெண்மை
மனம் திண்டாடுது உன் இடுப்பில
அந்த சேவல் கொண்டை சிலிர்ப்பில

(இருட்டு...

ஓய்வெடுங்க காளைகலே
இன்னும் கொஞ்ச தூரமே
நடுரோட்ட மூடிப்புட்டான்
ரயில் வரும் நேரமே

தோப்புக்குள்ள தனிமரமா
நான் திரிஞ்சேன் நேத்து
பள்ளத்துல வெள்ளம் போல்
நிறைஞ்ச கை சேர்த்து

பசுமை சூழ்ந்திருக்கு பருவம் கண்டிருக்கு
வைக்கோல் வண்டியிலே என் வைரம் வீற்றிருக்கு

படபடக்குதடி பறந்துவிட
என் பிஞ்சு மனசுக்கு இரக்கையில்ல

(இருட்டு...

ஓட்டமிடு காளைகளே
இன்னும் கொஞ்ச தூரமே
ரயில் வந்து போயிடுச்சு
இன்னும் கொஞ்ச நேரமே

மலை உச்சி நனைந்ததடி
கார்முகிலின் தூறலில்
தலை துவட்ட அனுப்புதடி
வெண்முகிலை வானமே

தலையனை புறக்கனித்து
மடியினில் இடம் கொடடி
வருடிடும் விரல் நுனிகள்
நினைவுக்கு வருகிறதே

உடல் சிலிர்க்குதடி நினைப்பதற்கே
என் கனவுகளை நீ கலந்திருக்கே

(இருட்டு...

*இந்த வரிகளை எடுத்துக் கொடுத்தவர் நண்பர் ரங்கா அவர்கள்



| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 157 அரிதார விண்மீண்கள்
அந்நாந்து பார்க்க அரிதார விண்மீண்கள்
நிகழும் கனவாக நிழலாடும் தேவதைகள்

கனவுக் கன்னியாக்கி காதலிக்கும் காளையரும்
கதாநாயகிக்காக கண்ணீர் சிந்தும் மாந்தர்களும்
கலைமாதின் திறமையை புகழாத நாளில்லை
கற்பென்ற தகுதியைப் பேசாத வரையிலே

கடுகளவும் யோசியாது குற்றங்கள் சாட்டுகிறோம்
கலைஞரின் பன்பாட்டை விலைபேசிக் குறைகிறோம்
நமக்கு எட்டாமல் போனவர்மேல் பிழையா?
நம் வாழ்வில் இல்லாத சுகத்தின் குறையா?

உயர்ந்து விட்டோரை தாழ்த்தினால்
நாம் உயர்ந்துவிட்ட பிரம்மையோ?
முன்னேற்ற விலை கற்பு என்றால்
நாம் முன்னேறத் தேவையில்லையோ?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, May 28, 2004
 
# 156 எட்டுத் திக்கும் எட்டிவிட (aka Wedding Song)
பாடல் தலைப்பை அழுத்தினால், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்தின் இணையத் தளத்தில் இந்தப் பாடலின் இசை வடிவம் அடங்கிய பகுதிக்கு கொண்டு செல்லும்!

எட்டுத் திக்கும் எட்டிவிட பிறந்தது நாயண ஓசை
கெட்டி மேளம் கொட்டிவிட கூடிடும் ஆயிரம் ஆசை

இது திருமணம் இதில் இரு மனம்
தாம் இணைந்தபின் வாழ்வில் நறுமனம்
சுகம் தருபவர் யார் பெருபவர்
தீர்ப்பளித்திடும் சுபதினம்

(எட்டு...

ஒன்றுபட்ட நெஞ்சங்கள் ரெண்டும் இங்கே கூடுது
சொர்கத்தின் விருப்பம்தானோ சடங்காய் இங்கே நிறைவேறுது

மூன்றுமுடி போட்டவனுக்கு நான்கு குனம் கிடைக்குது
ஐம்புலன்கள் சாட்சியாய் உறவிங்கு பூத்தது

சுதியோடு சந்தத்தில் செந்தமிழும் சேர்ந்தது
மாங்கல்யம் மந்திரம் ஓதி வானவரை வேண்டுது

அலங்காரச் சின்னமாய் இருவரும் வலம் வர
கல்யாணம் காதலுக்கு மரியாதை கொடுத்தது

(எட்டு...

அட்சதையை போடத்தானே தெய்வம் மழையைப் பொழியுது
ஆறுமாத காதலை ஏழ்பிறப்பும் இணைத்தது

எட்டுதிக்கும் ஒளிவீசி நவரத்திணமும் ஜொலிக்குது
பத்துமாதம் கடந்ததும் தொட்டில் சத்தம் கிடைக்குது

அலைமோதும் ஆசைவிழிகள் அடங்காமல் தவிக்குது
அவகாசம் கொடுத்து ஏனோ பரிகாசம் செய்யுது

மருதாணி மஞ்சத்தில் மெதுவாக மறைந்தது
மணமகளின் முகத்தில் ஏனோ செந்தூரம் கலந்தது

கல்யாணம் காதலுக்கு மரியாதை கொடுத்தது

(எட்டு...

| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Sunday, May 23, 2004
 
# 155 தாழ்வான மனப்பான்மை
தாழ்வான மனப்பான்மையால் தமிழும் தேய்கிறதே
பொருள் நீங்கிய பாடலாலே இசையும் சாகிறதே
தாளத் தருநகம் தைத்த பைக்குள் வார்த்தை வனவாசம்
நாக்கொன்றிருந்தால் பாடிப் படுத்திட இதுதான் அவகாசம்

இதயத் துடிப்பை இருமடங்காக்கி முழங்கும் பானியிலே
கரடுமுரடாய் வார்த்தைச் சிரங்கு இசையின் மேனியிலே
இசையும் குரலும் இறக்குமதியாம் இன்று புரிகிறது
இன்றைய இசைக்கு இறக்கிவை மதியை என்பது தெரிகிறது

சந்தம் என்பது சந்தடி சாக்கில் காணா போகிறது
இந்தி ஆங்கிலம் கூச்சல் சேர்த்திட கானா வாழ்கிறது
குரல் நயமா? கர்னாடகம் நீ, கச்சேரி போய் கேளு
குரல்வளை நெறுக்கக் கதறும் பேடுக்குக் கோடி மதிப்பீடு

அண்ட வந்தவர்க்கு அடைக்களம் கொடுத்தது அன்றைய பன்பாடு
உண்ட மண்ணையும் உரிய மொழியையும் உமிழ்வது புதுப்பாடு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, May 14, 2004
 
# 154 ஆழ்கடலில் நான் பயணித்தேன்
ஆழ்கடலில் நான் பயணித்தேன்
திசைகாட்டும் கருவி இல்லாது
ஒரு வாக்கு மீறிப் போயும்
உள்ளம் அன்பில் குறையாது

குரல் கேட்கும் வாசலிலே உருவங்கள் இருக்காது
பெருவெள்ளம் பெருகிவரும் இடி மழையே பொழியாது
சிகிச்சைகளும் செய்து விட்டேன் நோய் பற்றித் தெரியாது
காயங்கள் தெரிவதில்லை வலி மட்டும் மறையாது

(ஆழ்கடலில்...

எரிமலையில் வசித்தாலும் குளிர்காய்ச்சல் எனை வாட்டும்
பனிவெளியில் உருண்டாலும் தீ நெஞ்சைக் குளிப்பாட்டும்
சுதந்திரமாய் உடல் திரிந்தும் மனதிற்கு சிறைவாசம்
சதுரங்க ஆட்டத்திலே எனைச் சுற்றி எதிர்கூட்டம்

(ஆழ்கடலில்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Saturday, May 08, 2004
 
# 153 மதியானப் போது
மதியானப் போது
கடும் கோடை நேற்று
உனைக் கண்ட நெஞ்சம்
குளிர் வாடைக் காற்று

என் பார்வைச் சூட்டில்
உன் தேகம் இளக

கண்மூடித் திறந்தேன்
நீ போனதெங்கே?

(மதியானப்...

இருபது ரோஜா இதழ்களை கோர்த்தால்
இடையிலே மின்னும் முத்தாரம் சேர்த்தால்
அதுகூட இல்லை புன்னகைக்கு ஈடாய்
உனைத்தேடி நானும் படுகிறேன் பாடாய்

உனைக் கண்ட நெஞ்சம்
குளிர் வாடைக் காற்று

கண்மூடித் திறந்தேன்
நீ போனதெங்கே?

பகலோடு ராவும் செய்கின்ற பேரம்
பொழுசாயும் நேரம் உன் கன்னமாகும்
கனுக்காலின் மேலே உறவாடத்தானே
கொலுசோடு மணியும் கைகோர்த்து சினுங்கும்

உனைக் கண்ட நெஞ்சம்
குளிர் வாடைக் காற்று
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 152 இருதய மாற்றம்
இருதய மாற்றம்
எனையறியாமல் எங்கோ இழுக்கிறது
நிலை புரியாமல் வழி தெரியாமல் பாதை விரிகிறது

மூலம் தெரியா அருவி போல காதல் உதிக்கிறது
ஆழம் புரியா ஆற்றில் நீந்தும் அனுபவம் கொடுக்கிறது
ஆதாம் ஏவால் நனைந்த நதிக்கு நீண்ட வரலாரு
மிதந்திடுவாயோ மூழ்கிடுவாயோ நீ ஒரு கை பாரு

சரித்திர காதல் கதைகள் எல்லாம் சாவில் முடிந்தாலும்
நினைவுக்கல்லாய் நிரந்திரமாய் நம் மனதில் வாழ்வதிலே
காதலுக்கென்றும் வெற்றி உண்டு காதலர் தோற்றாலும்
குழாயில் குளித்துப் பழகிய நெஞ்சில் காதல் குற்றாலம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 151 நாடோடிக் கலைஞன்
நாடோடிக் கலைஞன் நானே
நாளும் வலம்வருவேனே
பொதிசுமக்கும் வண்டிமேலே
பயணங்கள் இலவசம்
அரசன்போல ஆசனம்
அசுரவேக அம்பாரி

தென்றல் வந்து முடிகலைக்கும்
கைகுலுக்கும் மரக்கிளையும்
மாநிலங்கள் பல கடந்தும்
பிறந்த மண்ணின் கலை மணக்கும்

அடையும் ஊரில் ரசிகர் கிடைத்தா
பாட்டுக் கூத்து பொறி தெறிக்கும்
திருவிழாக்காலம் வந்தா
தெருவெல்லாம் கலையரங்கம்

(நாடோடிக்...

வானம் எனக்கு கூடாரம்
கலை கொடுக்கும் ஆகாரம்
காற்று கொடுக்கும் விளம்பரம்
விசில் எனக்கு விமர்சனம்

எல்லையில்லா வீடெனது
தொல்லையில்லா பாடெனது
கூட்டம் களைஞ்சா வேறூரு
தூங்கும் நேரம் போய் சேரு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 150 தேவை
களங்கமில்லா வானமாய்
அவளிருந்தால் போதுமே
கண்கவரும் கீழ்வானின்
அழகெல்லாம் தேவையில்லை

குயில் போன்ற குரல் வேண்டாம்
அழைத்தவுடன் வர வேண்டாம்
தன் மனதை தெளிவாக
அவள் உரைத்தால் போதுமே

வெளியுலகில் பறந்தாலும்
இல்லறமாய் இருந்தாலும்
அவள் திறமை எதில் இருக்கோ
அதைச் செய்தால் போதுமே

என் தேவை இத்தனையே
குறைந்தாலும் ஏற்றிடுவேன்
அவள் தேவை நான் என்றால்
என் தேவையை உதறிடுவேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 149 உபகாரம்
என்னைப் புதைத்து
எண்ணைப் புதையல்
பொருளாதாரச் சந்தையிலே
அன்று அடிமைகள்
இன்று எரிபொருள்

தாய்நாட்டை தரைமட்டமாக்கி
மறு உயிர் தருவார்
எனக்கா தருவார்? இல்லை அவரே கொண்டார்
எரிகாட்டில் குளிர்காய்ந்தார்
தொழிற்சாலை புகைவளர்த்து

இடுகாட்டை சுவாசியுங்கள்
உங்கள் சுதந்திரம்
அங்குதான் அடைக்களம்
செய்திகள் வாசிப்பது
விண்மீன் கொடிபறக்கும்
கடவுளின் அரசாங்கம்
அன்று சொருகிய வாளை
இன்று உருவியதே உங்கள்
உபகாரம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 148 முற்றுகை இட்டது வானமடி
முற்றுகை இட்டது வானமடி
மூழ்கிடும் நிலையில் பூமியடி

சுற்று வட்டமும் சுவரெழுப்பி நான்
காத்து வந்தது காணலடி

(முற்றுகை...

இதைத்தான் காதல் என்று சொன்னார்
இழந்தால் சாதல் என்று சொன்னார்

விதைத்தால் சொந்தம் என்று சொன்னார்
துறந்தால் மோட்சம் என்று சொன்னார்

மலர்ந்த கண்கள் சொன்னது பொய் என்றான பின்
உண்மையே பேதமடி
தோல்வியில் கண்டேன் வெற்று நிலை
வெற்றியென கண்டாய் வேறொரு கை

வெற்றிடம் என்பது உச்சியடி
பற்றுதல் கொண்டது பூமியடி

விலைக்கு பேரம் போனதுன் காதல் அல்ல
உண்மை உண்மையடி

(முற்றுகை...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 147 கேள்வி பதில்
ஆண்: ஒரு வரியில் பெளர்ணமியைப் பாடு பார்க்கலாம்

பெண்: இரு வார்த்தை போதுமே, "நிலவின் விசுவரூபம்"

ஆண்: விரசமென்பது?

பெண்: கற்பனையின் கற்பு விற்பனை

ஆண்: ஊடலென்பது?

பெண்: கூடலின் முகவுரை

ஆண்: நாணமென்பது?

பெண்: அடைகாத்த ஆசைகள் அம்பலமாவது

ஆண்: நட்பு?

பெண்: கடன்படுத்தாத சொந்தம், மன்னிக்கும் மனசாட்சி

ஆண்: களவு?

பெண்: பற்றாக்குறையின் பலவீனம், ஏற்ற தாழ்வின் விமர்சனம்

ஆண்: கற்பு?

பெண்: ஆண் ஆதிக்கக் கோட்பாடு

ஆண்: காதல்?

பெண்: ஈர்ப்பின் இலக்கணம், கவிதையின் உயிர்நாடி

ஆண்: திருமணம்?

பெண்: சமுதாய தற்காப்பு சாதனம், இனவிருக்தி ஆயுதம்

ஆண்: பிறப்பு?

பெண்: இயற்கையின் அன்பளிப்பு

ஆண்: வாழ்கை?

பெண்: நிர்ணயத்தின் நிழலாட்டம்

ஆண்: மரணம்?

பெண்: காலச்சுவடின் கடைசிப்படி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 146 முறையீடு
அல்லா...
ஆவியாகும் முன்
அல்லாவிடம் ஒரு கேள்வி

முக்காடும் முகத்துணியும்
என் கைரேகை ஆனதென்ன?
முகமுடியும் முகமூடியும்
கனவானை கயவனாக்குமோ?

என் முகம் இனி மறைமுகம்
என் அணி என் பின்னனி

உனக்கு மண்டியிட்டேன்
அது குற்றமானது
அதற்கும் மண்டியிட்டேன்
அது துக்கமானது
வானைப் பார்த்து முறையிட்டேன்
எதிரொலியாய் மரண ஓலம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 145 வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
மலர் மண்ணோடு வாழ்ந்தால்
முடிசூடல் எப்போது?
உரையோடு வாள் போல
எழுதுகோல் தாள் போல
உறவாட இப்போது...

வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு

சிந்தை யாவும் செந்தீயில் வேகும்
மந்தை போல உன் பின்னே போகும்
பொங்கிப் பெருகிப் படரும் பிரவாகம்

வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு

கட்டிக்காக்க காரணம் ஏது
கொண்டவன் நான் என்று கை சேர்ந்த போது?

வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு

மலருக்கு பன்னீர்
வேருக்கு வெண்ணீர்
முன்னுக்கு முறனாய்
ஏனின்னும் கண்ணீர்?

வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு

மூடமை தீர
முறையீடு ஏற்ப்பாய்
சாதகமாக
ஒரு பார்வை பூப்பாய்

கட்டிக்காக்க காரணம் ஏது
கொண்டவன் நான் என்று கை சேர்ந்த போது?

வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 144 வாகன வேகத்தில
வாகன வேகத்தில
விடுபட்ட உள்ளமிது
வழியனுப்பும் மரமெல்லாம்
உதிர்த்துவிட்ட எண்ணமிது

மயில் கல்லு எத்தனையோ
மணிக்கணக்கா போகையில
மனசுமட்டும் உன்னை சுத்த
பின் தங்கும் என் நெனப்பு

புகைமூட்டம் இல்லாத
புகைப்படமாய் நடந்ததெல்லாம்
பனிக்கல்லாய் ஒறைஞ்சிருக்கும்
பசுமையா நெஞ்சுக்குள்ள

சாட்டைக்கயிறப் போல
சொழட்டிவிடும் உஞ்சிரிப்பு
பம்பரமாய் ஆட்டுதடி
பாவி மகன் சிந்தனையை

மின்சாரம் போயிருந்த
மச்சுவீட்டு இருட்டிலே
ஊர்கதை பேசையில
உள்ளத்தில பதுங்குனியே

சின்ன சின்ன அசைவுல
சோறு பரிமாரயில
எலையிலே விழுமுன்னே
நெஞ்செல்லாம் நெறைஞ்சதடி

கண் நெறைய ஆசை வந்தும்
வேலை வசதி இல்லை
கல்யாண காலம் வந்து
வேறொருத்தன் கூட நீயும்
படிதாண்டி போனப்பவே
இடிதாங்கி ஆனேம்புள்ளை

காலம் கடந்து வாரேன்
குடியிருந்த கிராமத்துக்கு
ஊலைக்காத்து வீசுதடி
ஓங்கதையைப் பேசுதடி

சேத்து மண்ணு பூரா இப்போ
தார் உறுகி பொங்குதடி
சேத்து வெச்ச பாசம் கண்ணை
ஊத்தெடுக்கப் பாக்குதடி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 143 தெரு ஓரத்திலே
தெரு ஓரத்திலே
ஒரு ஈர இரவினை நோக்கி
நடந்தேன்
உன் நினைவுதான்
நிழல் போல் தொடர்கிறது
சாலை முழுதும் மனிதர்கள் இருந்தும்
நீ இல்லாது தனிமைதான் நிலைக்கிறது

உணர்வது நாடல் என்பேன்
உதித்தது பாடல் என்பேன்
உனை எண்ணி பல முறை நான்
உறங்காது விழித்திருப்பேன்

நாளை இதே நேரம் சந்திப்போம் கடற்கரையோரம்
என்று நீ சொன்னது இசைபோல் ஒலிக்கிறது
பார்வை தரும் போதை உடல் மீது உறசும்போது
தாழென்ன கதவுமே உடைகிறது

காப்பதும் சுகம் என்பேன்
கிடைத்தது வரம் என்பேன்
எனைச் சுற்றி இயக்கமெல்லாம்
உணராது உலவிடுவேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Friday, May 07, 2004
 
# 142 உதயமாகும் வேளையில்
உதயமாகும் வேளையில் இருளும் ஏனம்மா?
என் இதயவாசல் திறந்த பின்னும் தனிமைக்கோலமா?

வானம் பார்க்கிறேன் ஏன் மழையை மறுக்கிறாய்? - என்
வாசல் காட்டினேன் ஏன் வருகை தவிற்க்கிறாய்

(உதயமாகும்...

வீணையை மீட்டினேன் அதில் நாதமாய் வருகிறாய்
ஓவியம் தீட்டினேன் அதில் உன் முகம் காட்டினாய்

கண்கள் மூடினால் என்
கனவில் தெரிகிறாய்
கனவை மூடினால் என்
நினைவில் நிறைகிறாய்

அமைதியைத் தேடும் நெஞ்சின் ஆழத்தில் துடிக்கிறாய்
என் அனுமதி இன்றியே எனை பறிமுதல் செய்கிறாய்

(உதயமாகும்...

நினைவுகள் அலைகளா உனக்கு பெளர்ணமி விழிகளா?
உணர்ச்சிகள் குழிகளா எனை செதுக்கிடும் உளிகளா?

நினைவுச் சோலையில் ஏன் ஞாபகார்த்தமாய்
உறைந்து கிடக்கிறாய் நீ வடிவம் வார்த்தையாய்?
கொதித்திடும் நெருப்பில் நீங்கிட காதல் நீராவியா?
என் ஒருவனை மட்டும் வாட்டும் காதல் நிரபராதியா?

(உதயமாகும்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 141 நவீன நோய்
சோறும்,குழம்பும்,காயும்,கறியும்
சமைத்து தின்றது அந்த நாள்

இனிமேல் அது சாத்தியமா?
முயன்றவனும் பைத்தியமா?
செயற்கைச் சங்கிலி இழுக்கும் விலங்கினம்
ஆனோமே நாமும்

அங்காடியில் வாங்கி வந்து
அவசரமாய் உண்ணுகிறோம்

அட்டைப் பைகள் அரவனைத்த அறுஞ்சுவை உணவுவகை
உடலுக்குள்ளே இறங்கியதால் உண்டான கெடுதல் என்ன?

ஆராய்ச்சி ஆகுமா? அரசாங்கம் செய்யுமா?
ஆராய்ச்சி ஆகுமா? அதிலென்ன லாபமா?

முன்னேற்ற பாதை தேடி முட்டிமோதிப் போய்
வந்தாச்சு உப்பு, சக்கரை, பித்தம் மற்றும் ரத்த நோய்

தீர்க்கமாய் குனமடைந்திடவே
ஊர் வகை செய்திடவில்லை
வேகமாய் வாழ்கை சுழல்வதில்
ஓய்வில்லை

எல்லையில்லா தொல்லைகள் கண்டு
வில்லைகளாய் மாத்திரை இன்று
விரதமாய்த் தின்னல் உண்டு உணர்வாரோ?
இதுவரை ஆதார நோய்கள் வந்தும்
இதுவரை நோய் தீர்க்க செய்வாரேது?

ஆராய்ச்சி நடத்தக்காணோம்
அதிலென்ன லாபம் தேரும்?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 140 வேறொரு விலாசத்தில்
வேறொரு விலாசத்தில்
உன் மனம் உரிமை கொண்டாடும்
பிறர் தோட்டத்து கனி தொடும்தூரத்தில்
புரிகின்றது எல்லை தெரிகின்றது

நதியும் நிலவில் குளிரும்
தப்பேது கூறு

(வேறொரு...

நான் உன்னை விரும்பும் காரணம் உலகறியாது

சூழல் மறந்து சிரிக்கின்றதை
ஆணின் சமமாய் நடக்கின்றதை
உணர்ச்சிகள் வெளிப்படை
அகம் புரம் ஒரே நிலை

உடன் பணிபுரியும் நான் அலைமோதினேன்

(வேறொரு...

ஆனவமே அறியா
தோரணையை ரசித்தேன்

எளியவரை நினைக்கும்
அனுசரனை மேலும் சொல்லப்போனால்
உன்னில் ஆகாதது என்று சொல்லப்போனால்
நீ வேறொருவன் மடியினில்,
பிடியினில், உறவினில், உயிரினில் சேர்வதைத்தானே வெறுக்கிறேன்

(வேறொரு...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 139 முகம் பார்த்திட
முகம் பார்த்திட நதி நோக்கும் மதி
மதி பார்த்ததும் நதி குளிர்கின்றதே
இது இயல்பானதே

மதியின் தேவை பிரதிபளிப்பாக
நதி நெஞ்சில் அது அன்பளிப்பாக
நிகழ்வுக்கும் விளைவுக்கும் இடையே...

விதி வரைவதே விபரீதம்
விளங்கிடாத ஓர் தீர்மானம்
கவனம் தவறும் கனப்பொழுதிலும்
காட்சி மாற்றிடும் ஒரு மாயை

(முகம்...

ஆதரவென உள்ளம் தேடிடுதே ஒரு துளி நம்பிக்கை
மேலொருவன் நம்மைக் காப்பது போன்ற சிந்திப்பை
மதமா துணை சுயபலமா? தெரிவதனால் சுமை குறைவா?
புரிந்திட பலனென்ன புலப்படுமா?
ஞானமே வெறுமை என்றால் யார் தேடுவார்?

உறவு உணர்வுக்கு வறுமை
அது உன்னில் உனைக் குறைக்கும் திறமை
உன்னை நீங்காது தனிமை
இதுதான் உண்மை நிலைமை
யார் தோன்றிட யார் மறைகிறார்?
யாரோ இயற்றிட யாரோ இயங்கிட?
வாழ்வின் வரைபடம் யார் அறிவார்?

(முகம்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, May 06, 2004
 
# 138 துணைவியே
உதிராத பூவை சிதராமல் கோதி உறவாடும் தென்றல் மென்மை
உனைக் கண்ட நெஞ்சில் உருவானதென்ன உனைப் போல இல்லை பெண்மை

உன் அருமை பேசிடவே உவமைகள் ஏழையடி
என் வாழ்வின் வெற்றியெலாம் நீ சகித்த இடிகளடி

உன் ஆழம் நீ அறிந்த உள்ளார்ந்த பெருமிதம்,
இது என்ன பெரிது என்ற அனுபவ நிதானம்,
சோதனையே வாழ்க்கையெனும் ரகசியம் அறிந்தும்
சிரித்திட சந்தர்ப்பம் தேடும் சூட்சமம்

சுவைகளைவிட சுமைகளையே அதிகம் தந்தும்
நிறைகுடமாய் எனை நடத்தும் புனிதமே உனைப் போற்றி
அன்றாடம் இதய மேட்டில்
ஆசை வரிகள் ஆயிரம் ஆயிரம்

வாய்பேசாவிடினும் இவ்வரிகளை
விழி கசிந்துவிடும் வாங்கிக்கொள்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 137 கொடும்பாவி
வெற்றிலையிலும் வெள்ளைச் சாயம்
சிகப்பு சிந்திப் போனது
கறுப்பு மண்ணில் வெள்ளை சேர்ந்தும்
இதே தீர்ப்பு ஆனது

வெள்ளைக்குள்ளே ரத்த தாகம்
வைத்த தேவன் சதியிலே
வெள்ளைக் கொடியின் சமரசமும்
கறுப்புக் கொடியின் கண்டனமும்
நிலைமாறிப் போனதே
தென்னவர்கள் விதியிலே

ஆற்பறிக்கத்தான் வைத்தாயோ
ஆப்பிரிக்கா தேசத்தை?
நிற வெறிக்கு உன் அவதாரம்
எங்கே சொல் நீலகண்டனே!

வியர்வை சிந்தி வனம் வளர்த்தும்
முட்களே முளைத்தன
பிற நாடுகள் புறக்கணிக்க
பினங்களே குவிந்தன

நிறங்களின் சதுரங்கம்
ஒரு பக்கம் சார்ந்ததே
இருதரப்பிலும் வெள்ளாட்ச்சி
இறப்பதென்னவோ கறுப்புத்தான்

வேளி மேய்ந்த பயிரிலே
மாய்ந்த மனிதாபிமானம்
மண்டெலாவின் மான்பிலே
உயிர்பித்தது ஓரளவு

சுற்றுலகம் கைகட்டி நிற்பதனால்
சூரையாடல் இன்னும் நடக்கிறது
அயல் நாடுகள் வந்து குளிர்காய
ஒரு கண்டமே கொடும்பாவி எரிகிறது

வறுமைக் கோடு
இவர் வாழ்க்கைப்பாடு
இங்கு வயோதிகம் காண்பது
வெள்ளையர் மட்டுமே
சிகையில் கூட வெள்ளை சேர்க்கா
வைராக்கியமாய் இருக்குமோ?

நிறங்கள் மறைந்தால் வெள்ளை
இது நியதி
மனித நிறங்களும் இதே கதியோ?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 136 கறுமைக் கவிதை
வெண்தாள் போன்ற வெறுமையில் கறுமைக் கவிதை அவளே
வண்ணமாய் வானவில் வளைய பொழியும் மழைமேகம் அவளே
வெறுமையின் நிறம் வெண்மை, இனிக்கும் கறும்புத் தோல் அவளே
வெளிச்சம் நறைத்து ஞானம் கொண்ட கறுமைப் பதுமை அவளே

நான் படித்த தமிழின் நிறம் கறுப்பு
சிந்தனையில் கண்மூட வரும் கறுப்பு

காணும் கனவெல்லாம் கண் நிறைய
எல்லைக் கோடாகும் மை அவளே
நிஜத்தை அரிதாரம் பூசிடலாம்
நிழலின் நிறம்கொண்ட மெய் அவளே

விண்மீண்களை மிளிர வைக்கும் வெளி கறுப்பு
சூரியகாந்தியின் விழி கறுப்பு
சூரியன் குடித்திடும் உடல் கறுப்பு
இளரத்தம் பயிரிட்ட முடி கறுப்பு

இயக்கத்தின் அடிப்படை நிலை கறுப்பு
எரிந்தபின் எல்லாமும் நிறம் கறுப்பு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 135 சொந்த பந்தம்
உறவுக்கு ஆயிரம் தேவைகள் உண்டு
காதல் ஒரு பகுதிதான்
உரிமைக்கு ஆயிரம் தகுதிகள் உண்டு
சொந்தம் ஒரு பகுதிதான்

கனவுகளாலே கட்டிய கோட்டை
கலைந்துவிடும் பல காரணத்தால்
கொடுக்கல் வாங்கல் வரைமுறையில்
இடுக்கண் களைய ஆளில்லை

துன்பம், தோல்வி தீண்டும்போது
தங்குவதா உன் உறவு?
செல்வம் வந்து சேரும் நேரம்
மாறுவதா உன் உறவு?

வியாதிகளுக்கு தடுப்பூசி
உறவுக்கேது நீ யோசி
உறவின்றி நீ தேடிய சொந்தம்
நட்பே என்றும் உயர்ந்த பந்தம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 134 பிறியாவிடை
விடியலில் ஒன்றும் மாற்றமில்லை
காலம் கடமையை விடவில்லை
வாசலில் மடித்த செய்தித்தாள்,
கதவருகே உன் கறுப்புக்குடை,
காணாதிருப்பது உன்னைத்தான்
எங்கே எங்கே என் கண்மணி?

காலணிகூட வைத்த இடத்தில்
வைத்தபடி இருக்கிறது
குழந்தை உறங்கும் சீலைத் தொட்டில்
உன் அரவம் தேடிச் சினுங்கிடுது

என்னைச் சுற்றி இயக்கமெல்லாம்
என்றும்போல நடக்கிறது
நீயில்லாத இல்லம் மட்டும்
வெறிச்சோடிக் கிடக்கிறது
எங்கே எங்கே என் கண்மணி?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 133 திரைகடலோடி
திரைகடலோடி திரவியம் தேடித்
தீர்ந்ததடி சில காலம்
உறவுக்குத் தேவை உறுதுணையென்று
தெரிந்ததடி இந்நேரம்

இரவு பகலாய்
இடையே பல நாள்
சுமந்தேன் காதல் சிலுவை
சிறகு நனைந்தும் உயரத் துடிக்கும்
சுதந்திர காலப் பறவை

இனி என் வானில் கார்மேகத்தை
அனுமதிக்க மாட்டேன்
அமவாசைச் சந்திரனையும்
அனைய விடமாட்டேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 132 இளமுல்லைப் பூவே
இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே
நிகழும் கனாவே
விளங்கா வினாவே

மடிமீது வந்து
தவழும் நிலாவே

இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே

மன்மதனின் தோட்டம் விதவிதமாய்ப் பூத்தும்
கதிர் உன்னை மட்டும் அடையாளம் பார்க்கும்
கடிகார முள்ளும் உனைக் கண்டு பூக்கும்
கதிராடை உன்னால் புது கர்வம் காட்டும்

மடிமீது வந்து
தவழும் நிலாவே

இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே

தேவர்களின் பின்னே ஒளி வளையம் போலே
என் பார்வைக்கென்றும் உன்னுருவம் பெண்ணே
அதரத்தைப் பார்த்து உதிரத்தில் வேகம்
என் நெஞ்சும் கொஞ்சம் பலவீனம் ஆகும்

நிகழும் கனாவே
விளங்கா வினாவே

இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Wednesday, May 05, 2004
 
# 131 உறவு ரத்து
வாக்குவாத கோபம்தானா
நீதிமன்றம் சேர்த்தது?
உன்னைச் சார்ந்தும் என்னைச் சார்ந்தும்
சொந்தம் ரெண்டாய் ஆனது

(வாக்குவாத...

பேச்சுவாக்கில் சொன்ன சொற்கள்
பிரலயமாக வெடித்ததே
நீயும் வெல்ல நானும் வெல்ல
நாம்தானே தோற்றதே

உறவிருந்தும் தனித்தனியே வேகிறோம்
உடன்கட்டை ஏறி உறவைத்தான் எரிக்கிறோம்
எனது பக்கம் தவறுதான் உணருகிறேன்
இருப்பினும் நீ நிரபராதியா? மறுக்கிறேன்

பேச்சுவாக்கில் சொன்ன சொற்கள்
பிரலயமாக வெடித்ததே
நீயும் வெல்ல நானும் வெல்ல
நாம்தானே தோற்றதே

மணமுறிக்க தரகருடன் நாள் பார்த்துப் போகிறோம்

(வாக்குவாத...

சிலந்திவலை போல் உறவு சன்னமே
பிண்ணிட நாள் உடைய சில நொடியே

கனா காண்பதெல்லாம் வைகரையா சொல்லிவிடு

காலதேவன் சூழ்ச்சியா இது? சொல்லிவிடு
காலப்போக்கின் வீழ்ச்சியா? சொல்லிவிடு

(வாக்குவாத...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, May 04, 2004
 
# 130 நடுவிரல்
ஆசைக் கடலில் அனுப்பிவைத்து
மூழ்கடிக்க நினைத்தாயே
நயவஞ்சகனே வாங்கிக்கொள்
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்

கருணை இல்லப் பாதிரியாய்
குழந்தைக் கனவைக் கெடுத்தாயே
கடவுள் போர்வையில் களவாடும்
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்

சுதந்திர நாட்டை சீர்குளைத்து
கொடியவரை ஆள வைத்து
கொத்தடிமைகள் மக்கள் என்ற
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்

வடக்கில் என்றும் வெள்ளமிட்டு
தெற்கில் என்றும் பஞ்சமிட்டு
இரண்டும் அழியச் செய்தாயே
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 129 குரலரசி சுசீலாவுக்கு என் காணிக்கை
நாபிக் கமலத்திலிருந்து வரும் நளின அருவியே
உணர்ச்சிக் காற்றை வருடும் புணர்ச்சிப் பறவையே
விளம்பரம் தேடாத விதானமே
நிலைமை தளரா நிதானமே

நீ மழைச் சாரலில் வீணை நாதம்
அதிகாலையில் சுப்ரபாதம்
ஓடைக்கரையில் குழலோசை

கலைவாணியின் செல்ல மகள்
தென்றலுக்கு சொந்தக்காரி
தமிழிசையின் ஆயுள் நாடி

உன் குரலை வடித்திசைக் கருவி செய்ய கலைஞன் இல்லையே
நீ பாடியதெல்லாம் சேகரிக்க யோகம் இல்லையே

நீ ஏழை வீட்டில் இலவச விருந்து
அனாதையைத் தாலாட்டும்
ஆதரவு அன்னை
அர்த்தமும் இசையும் கூடும் கடல்

என் உதிரத்தை உறித்து
ஒரு காணிக்கை மலரை
செய்ய முடிந்தால்
அது உன் காலடியில்

அதுவரையில் இதை ஏற்றுக்கொள்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 128 நாயணம்
நாயணம்
அது வாரிச் சென்றது
கோவில் சென்ற என் மனதை

இதுபோல் இசை சாத்தியம்தானா?
இசைத்ததுமே வாத்தியம்தானா?
காலத் தடயம் போக்கும் ஞானம் கொண்ட நாயணம்

பிரயோகம் கோவிலிலா?
அது தவிர மேடையிலா?

மேன்மை என்று தனித்ததாலே
பலதரப்பில் பயில மறுத்தார் சோகமே
எத்தனை வகையாய் கருவிகள் கேட்டோம்
உலகெங்கும் இதுபோல் இல்லை ஓசையே

நாள்போக்கில் மாறுமா? உதவாமல் நேருமா?
ஊதுங்கள் நாயணம், உயரட்டும் நாதமும்

முடங்கிப்போய் மூழ்கலாகாது கல்வெட்டுப்போல் காப்போம் நாளும்

நாயணம்
விண்ணில் முழங்கிடும் பேரிகை
நெஞ்சில் எழுந்திடும் போர்குரல்
துஞ்சுநிலைக்கொரு பூங்குரல்

சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப
சாகசமாய் இசை சேர்க்கும்
நவரசமும் நாயணம் சொட்டக் கேளுங்கள்

உயர்கலை என்று சொல்லி ஆனதேது?
புழக்கத்தில் இன்று நாளை சேர்ந்திடாது
இனிவரும்
எந்த காலகட்டத்தின் இசையிலும்
தொன்றுதொட்ட நாயணமும் சேரட்டும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 127 கலை சாகக் காரணம்
கலை சாகக் காரணம்
கல்வி அதில் சேர்வதில்லை
கை ஏந்திப் பிழைக்கவே
கற்கிறோம் பொய்யில்லை

சந்தர்ப்ப சூழ்நிலை
யாரைச் சேருதோ, அவர்
சரித்திர புருஷராய்
கோலோச்சும் காலமிது

அடிபனிந்த காரணமே
அரசியலும் அழிகிறது
அன்றாடம் காய்ச்சிகளாய்
ஆக்கிவிட்டு ஏய்க்கிறது

கலையென்றும் காட்சியென்றும்
தேர்ந்தெடுத்த ஆட்சியென்றும்
மூடருக்கு மாலையிட்டு
மேடையேற்றி நாம் சரிந்தோம்

ஊருக்கு நூருபேர்
உணர்வுடன் புறப்படாது
கீழ்த்தரமானவரை
களையெடுக்கு முடியாது

புரட்சியின்றி பொற்காலம்
பிறந்ததில்லை எப்பொழுதும்
நிலவையும் பொறி தட்டி
நீக்கிடுவோம் இந்த இருள்!
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 126 அம்சங்கள் (கசல் வடிவப் பாடல்)
என் விழி அரங்கத்தில் உன் பருவக் கலை இனிது
உன் விழிச் சுரங்கம் மேல் மென்புருவ வளை இனிது

யதார்த்த நகைச்சுவையை ரசித்திடும் வகையே சுகம்
ஏகாந்த வேளையில் வெளிப்படும் நகையே சுகம்

உன்னோடு கைகோர்த்து உரையாடப் பேச்சும் இசை
துயிலிலும் எனையுணர்ந்து அரவணைக்கும் மூச்சும் இசை

நடுநிசியில் நிலவொளியில் மணிக்கழுத்தின் அசைவு சொர்கம்
மறுக்கின்ற வார்த்தைக்குள் மறைகின்ற இசைவு சொர்கம்

ஏதாவது வேண்டுமென்றால் அடிபோடும் விதம் ஆகா
இதென்ன கவலையென்று சுமையோட்டும் பதம் ஆகா

| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 125 இருட்டரைக்குள் தீபம்
இருட்டரைக்குள் தீபம்
இசை ஒலித்திட ஆடும்

கற்ற வித்தை கையில் சீறும்
பற்ற வைத்த நெஞ்சம் சேரும்

உறங்கிட வரவில்லை
உடல் மனமெங்கும் தொல்லை

மது அருந்திட நாழி
விரைந்தோடுமென்று கேள்வி, தோழி

கையில் பெட்டி தோளில் வாத்தியம்
ரயில் சென்றும் நான் காத்திருந்தேன்
அகப்பட்டதங்கு நீயோ?
ஆசைமோசமிங்கு நானோ?

விடைபெரும் கடிதத்தை
வீட்டில் படித்திருப்பாரே
எந்த முகத்துடன் நானும்
எந்தன் வீட்டுப்படி ஏற?

விட்டுச்செல்லும் உறுதி
சேரும் இடமதில் இல்லை
நிழல் துறந்தவனை
ஒளி மறந்தது இல்லை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 124 சந்தனப் பூச்சு போல்
பெண்:
சந்தனப் பூச்சு போல்
என் உள்ளம்
சிலிர்த்ததே மெல்ல,இசைமழையிலே விரல்கள் மேகமே

ஆண்:
உல்லாசம்...ம்ம்க்ம்ம்ம்...உல்லாசம்...

பெண்:
சந்தனப் பூச்சு போல்
என் உள்ளம்
சிலிர்த்ததே மெல்ல,இசைமழையிலே விரல்கள் மேகமே

ஆண்:
உன் கண்களே விழா கோலம்
உன் பார்வையோ கார்த்திகை தீபம்
உன் பார்வையில் காய்ந்து இசையில் நனைகிறேன்

இன்பத்திலே இசையே சிகரம்
துன்பத்திலும் அதுதான் நிகரம்
எனை இன்பமாக்கியே துன்பம் தீர்க்க வா

பெண்:
வானம்வரை சேரும் கீதம்
வார்த்தைகளை மீறும் நாதம்
மனவானில் என்றும் கீதம் நீ

என் கைவரைந்த காதல் வரி
உன் வாய்மொழிந்த குழல் அருவி
உரையாடல் கூட இசையின் மொழி
உன் உறவுப் போர்வையில் குளிர் காயவா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 123 பனித்திரை
பனித்திரை பூங்காவனத்தை
பாதுகாத்திட மறைத்ததோ?
ஓடையும் வெப்பம் தேடி
மாலையில் விரைந்ததோ?

பதுங்கி கொண்ட பாறை மலைகள்,
புகைபிடிக்கும் ஏரிக்கரைகள்,
மலைக்குமேல் சொர்கப் பரிசை
வைத்ததெல்லாம் யார் கைவரிசை?

காதலர்கள் மயங்கிட
ஓடங்களும் ஏரியில் மிதக்க
கைகோர்த்த ஜோடி பல
கரையெங்கும் சுற்றி நடக்க
காண்பதெல்லாம் காதலர் கனவோ?
இயற்கைக்கும் காதலர் மனதோ?
உயரத்தில் செல்லச் செல்லவே

வழக்கத்திற்கு விடுமுரை
கோடைகாலம், வேண்டும் விடுதலை
வேலை விட்டு விலகியே
தேடிப்போனோம், நாமும் அமைதியை
கவலை விட்டுப் போகவே
இயற்கை தொட்டில் ஆட்டுமே
உயரத்தில் செல்லச் செல்லவே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 122 சதிராடும் வேளை அன்பே
சதிராடும் வேளை அன்பே
துணைசேர வா இங்கே

இடை கோர்த்து ஆட
நாம் இசைப் பாட்டில் ஐக்கியமாக

போர் வானில் சாந்த மேகம்
படை சூழ்ந்து பொழியும் நேரம்
நிகழ்காலம் ஈரம்
ஆனால்,
பிரகாசிக்குதே நாளை

(சதிராடும்...

கடந்து வந்தது பழமையின் கனம்
காத்திருப்பது புதுமையின் பலம்
சொந்த தேசமே பழமையின் குறி
சர்வதேசமே புதுமையின் நெறி

போராட்டம் எல்லோர்க்கும் பகையாகுமே
நேசம்தான் மொழி இப்போது
தேசங்கள் மறந்தால் தப்பேது?
நாட்டுக்கு எல்லைகல் அப்போது
நட்புக்கு வேலிகள் எப்போது?

(சதிராடும்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 121 தூர தேச ஓசைகளை
தூர தேச ஓசைகளை
சொந்த மொழி கொண்டாடுதே

வட கிழக்கின் வாத்தியத்திலே
தென்மேற்கின் தாள தாக்குதல்

தூர தேச ஓசைகளை
சொந்த மொழி கொண்டாடுதே

வெங்களத்தின் பேரிகைகள்
வெள்ளுடையில் தாரகைகள்
ஆட வாயென ஆடவர், கொஞ்சிக் கெஞ்சிட

வாழையெனும் காலழகு
ஆடவனின் தோள்களின் மேல்
தாவி விழும் சாகச சந்தோஷமென்ன

சொர்கத்துல பண்டிகை நாளும் வந்தா
கலியாட்டம் இவ்வளவு ருசித்திடுமா?

(தூர தேச...

சந்தனத்தை நகலெடுத்து
மேனியொன்றை அவன் தரிக்க
உருவான துருவம் பெண்ணானதோ?

சங்கடத்தில் நிழல்கொடுக்க
சங்கமித்த நாளன்றே
உருவான துருவம் இசையானதோ?

ஊரு தேசம் என்றெல்லாம் எல்லைகள் எங்கே?
இசையதின் சாம்ராஜ்யம் இதயங்களே

(தூர தேச...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 120 திண்டாடுதே மனது
திண்டாடுதே மனது நீ இல்லாத ஓர் பொழுது
பொய்யான மொழி எதற்கு மெய்யாக நான் நினைப்பதற்கு
விடைபெரும் உன் உருவம் நினைவுக்கு நிரந்தரம்
பிறைமுகம் பார்த்தபின்னே இதயமுன் துறைமுகம்

(திண்டாடுதே...

புல்லாங்குழல் இசைத்தாலும் தீயானதே உணர்வு
சில்லென்று நீர் குடித்தாலும் சூடானதே கனவு
இரவிருந்தும் உறவு இல்லை
அந்தரங்கத்தில் அந்தரம்

நிழற்குடையே நினைவு என்றால் அதற்கடியில் நான் தனியே
தனிமையிலே பகிர்ந்துகொள்ள இருப்பதெல்லாம் தனிமையே

(திண்டாடுதே...

உச்சிவெய்யில் வேளையிலும் மனமோ மூடுபனி
அச்சுப்பிழை ஆனதே நீ இல்லாத முகவரி
ஊனமுண்டு காயமில்லை
இதன் பெயர்தான் காதலோ?

அதிகறிக்கும் ஆசைகளை தனிமை நிலை என்றார்
அருகினில் நீ வருவதென்றால் கொட்டிவிடவும் தயார்

(திண்டாடுதே...