<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 21, 2008
 
# 257 நிராகரித்த அழகு
பற்ற வைத்ததும் தெறிக்கும்
மத்தாப்புத் துளிகள்போல்
காற்றின் அவசர சிலிர்ப்பிற்கு அம்பாகக்
குவிந்து சிதறிய இருபது வெண்புறாக்கள்
அந்தப் பாழடைந்த மண்டபத்திற்கு
சிறிதும் பழக்கமில்லாத
செழிப்பை வரைந்தன

மனிதர் மறந்த மண்டபத்தை
செடிகளும் பறவைகளும் செல்லமாக்கிக் கொண்டாடுவது
உற்சாகமளித்தது

பயனற்றதென்று மனிதர் நிராகரித்த
எத்தனையோ பொருட்களில்
படிந்திருக்கும் அழகே
உன்னை வணங்கிட
ஓர் இதயம் இங்கே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com