<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, November 26, 2016
 
# 294 தனிமையின் வரைபடம்
தூரத்தில் பனையோலை சரிந்து
மெளனத்தை எழுப்பிவிட
அமைதிச் சீர்ப்பாட்டில்
ஆளுக்கொரு ஒப்பந்தமிட்டதைப்போல்
சந்தில் பூனையொன்றும்
சாக்கடைத் தவளையொன்றும்
கோபித்து குற்றம் சாட்டின...

அறைக்குள்
மின்வெட்டு அமைதியில்
உடல் பிசுபிசுக்க
ஊனமான நெஞ்சம்
விசிறியின் சீற்றத்திற்கு
ஓலமிட்டது

சீராய் எரியும் மெழுகுவர்த்தி
சற்று சிணுங்கி நிழலை சிமிட்ட
தனிமை கொழுந்து விட்டது

தன்னைச் சார்ந்திராத எவரையும்
தட்டிக்கழிக்கும் நெஞ்சம்
மெளனத்தின் அரவணைப்பில்
தோள் சாய்ந்தது

| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com