உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, March 20, 2009
# 275 தாய்வீடு
274-க்கு எழுதிய மெட்டிற்கே வேறு விதத்தில் இயற்கை பராமரிப்பு, பச்சை புரட்சியென்று எழுதியது:
பூரிக்கும் உள்ளம் இது இயற்கை நாடும்
பார்வைக்கு யாவும் பரவசமாகும்
வித வித உடைகள் மாற்றுவாள்
வெப்பம், பனி, மழை காட்டுவாள்
இதயங்கள் போலே உதயம்
ஒவ்வொன்றும் ஒரு குனமே
ஒரு நிறமாய் நின்ற இலைகள்
பல வகையாய் மாறிவருமே
பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது
பாலைமண் விதையெலாம்
ஒருநாள் மழையில் பூக்கலாம்,
பிறந்ததும் நடக்கிற
பிஞ்சுக் குதிரை பார்க்கலாம்,
எரிமலையும் செதுக்கிப் போகும் சிற்பமே
இதையெல்லாம் மறக்கலாமா மனிதனே?
உயிர்மூச்சையும் தரும் தாவரம் வாழ வைப்போமா?
பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது
ஓடைக்கே ஆடைபோல்
இலைகள் படர்ந்த அம்சமே
காணத்தான் முடியுமா
கட்டிட நகரம் கூடிவந்தால்?
எதிர்கால தாகத்திற்கு ஒட்டகம்
நிகழ்காலம் சேமிப்பதுபோல் நாமுமே
தாய்பூமியை பல தலைமுறை வாழ வைப்போமே!
பச்சை உலகத்தை
பார்த்து கொண்டாடு
என்றும் தாய்வீடு
இதை இழக்கலாகாது
Comments:
Post a Comment
