<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, October 19, 2019
 
# 296 நீ வாழ்க


என் ஒவ்வொரு துளியும்
உன் பதம் தேடி
உவகையானதடி
நீ வாழ்க

உன் பேச்சுச் சாரல்
கோடைக் காற்றில்
கோகிலமானதடி
நீ வாழ்க

சம்மதமில்லா
செயல்களைக் கூட
சமரசச் சிரிப்பில் ஏற்ப்பாயே
நீ வாழ்க

என் தொல்லைகள் எல்லாம் தீர்வுகாண கொள்ளிடமாவது
உன்னிடமே
நீ வாழ்க

ஒரு பார்வையிலே
யுக ஆறுதலை
போர்த்திவிட்டாயே
நீ வாழ்க


| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com