உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, February 26, 2006
# 189 செந்தாமரை செண்டைப்போல
பல்லவி:
M: செந்தாமரை செண்டைப்போல சூரியன் அங்கே சரிகிறதே மின்மினிகள் ஒளியில் இளகி வைரக் கோடாய் மழை வருதே
F: ஏனிந்த நிலையிது உனக்கு புரிகிறதா?
M: நாமிங்கே கூடும் நேரம் ஒளியோடு வெப்பம் ஓடும்
F: ஏனோ நாம் இனைவதில் இந்த இயற்கையும் ஆர்வம் காட்டிடுதே
M: விழா காலம் இன்றேதானடி... விளக்கங்கள் கண்ணில் பாரடி
(செந்தாமரை...
சரணம் 1:
M: கறைந்திடும் பொழுதை நினைவென தொடுத்தாய்
F: அள்ளாத சுவைகளும் இருக்காதா - இங்கு தெம்மாங்கு தமிழாய் மணக்காதா?
M: காதலியென்றே நான் உறவாட காவியப் பெண்ணாய் நீ புலனாக
F: சிந்தை எங்கும் சிந்தைப் பாடும் விந்தை உனது உனது உனது உனது உனது
M: கங்கை முங்கும் எந்தன் தனிமை புனித உறவில் கறைந்து கறைந்து குறையட்டுமே...
சரணம் 2:
F: வாலிபத் தோள்களிலே நகம் கிள்ளி வளையை உடைத்ததெந்த விடை சொல்லி
M: காற்றில் மிதந்து வரும் புது லகரி கண்களில் வீசி வரும் தென் கவரி
F: உந்தன் எண்ணம் எந்தன் மனதில் வளர வளர வளர வளர வளர
M: எந்தன் சின்னம் காதல் போரில் கனிய கனிய காதல் இங்கு மலரட்டுமே...
