உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 08, 2009
# 279 ஆரம்பத்தின் எதிரொலி
ஆரம்பத்தின் எதிரொலியை
இறுதியில் கேட்ட மூடன் நான்
சோலை இருந்த நினைவில்
அங்கு செல்லத் தொடங்கினேன்
கண்கள் முட்டி நின்றன
தொழிற்சாலை இரும்பில்
சில நேரம்
உள்ளின் அவலம்
வெளியில் விளக்கப்படுகிறது
கோவில் விளக்கில்
கண்கள் உறசினோம் அன்று
அகம் முகம் அப்புறம் அலசினோம்
வேண்டிக்கொள்ள வேண்டியதில்லை
வரம் கிடைக்க
என நினைத்த காலமது
நாளடைவில் நாம் வளர்ந்தோம்
காலம் குனிய வைத்தது
என் தகுதியறியாமல்
நீ உன்னை வழங்கினாய்
உன் தகுதியறிந்த நான்
என்னை மறுத்துவிட்டேன்
பிறகு தெரிந்தது
நீ பற்ற நினைத்த குட்டிச்சுவர்
புதைகுழியை தவிர்க்க என்று
நீ விழுந்த புதைகுழியும்
புஷ்பகுளமாகுமென்று நம்பினேன்
இன்று புரிகிறது
கல்லறை மலர்கள்
கால் நனைப்பதில்லையென்று
