உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 13, 2006
# 202 ஓய்வு நாள்
தனித் தீவில் காத்திருக்கிறேன்
தீர்ப்பு நாளை முன்னிட்டு
அந்தப்புரம் அழைத்துச் செல்ல
ஓடக்காரனாய் வருவானோ காலன்?
நன்மை தீமைகளைப் பட்டியலிட்டு
சேரும் ஊரைச் சொல்வானோ?
கடைக் காட்சியாய் கண்களுக்கு
வெண்பனியாகப் புவி மாறி
இக்கரையில் நான் அக்கரை வைத்த
அத்தனை முகங்களும் அலைமோத...
செல்லும் ஊரின் சுக வசதிகளை
சிறிதும் எண்ணுமோ இந்த மனம்?
சொர்க வாசலும் நரகவாசமும்
தொல்லை செய்யாதென் சிந்தனையை
விடைசொல்லிவரும் வாழ்கையில்
நெஞ்சம் நனைத்த நிகழ்வுகளே
நித்திரைச் சுடராய் பவனி வரும்
நினைவின் வாசற்படியில்...
என் வரலாற்றின் ஓய்வு நாள்
ஒப்பந்தத்தில் கையெழுத்தாய்
விடைபெருகிறது என் கடைசிக் காற்று...
அக்கரை என்று ஒன்றிருந்தால்
அனேகமாய் நாம் சந்திப்போம்
Tuesday, May 09, 2006
# 201 பூங்காவை நீங்காத ரோஜா
பூங்காவை நீங்காத ரோஜா
ஏங்காத நாளில்லை ராஜா
கூந்தலைச் சேரவில்லை
பூஜைக்கும் போகவில்லை
நாரோடு கால் பின்னி மாலையாகவோ
நெருக்கத்தில் மலர்ச்செண்டில் இடம் தேடவோ
இதைத் தவிர எத்தனையோ இருக்கின்றதே
மலருக்கு விதி, வழி, வரைமுறைகள்
அத்தனையும் நான் மறுத்தது ஏன்?
என் எதிர்காலம்...
உன் இதயத்தின் மேல்!
பூங்காவை நீங்காத ரோஜா
ஏங்காத நாளில்லை ராஜா
உன் மேல்சட்டைக் காதோரம் நான் கோர்க்கவே
உன் நெஞ்சத்தின் தாளத்தில் தலைசாய்க்கவே
மண்ணோடு வேரூண்றி நான் வாழ்கிறேன்
இருந்தாலும் எனதாயுள் குறைவு
உன் தோட்டத்து மலரை நீ பார்ப்பதும் அறிது
பறிப்பாயோ நான் அடைவேன் நிறைவு
என் எதிர்காலம்...
உன் இதயத்தின் மேல்!
பூங்காவை நீங்காத ரோஜா
ஏங்காத நாளில்லை ராஜா
