<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, August 14, 2008
 
# 265 எல்லை
நெஞ்சத்தில் அன்றாடம்
நீங்காது மன்றாடும்
சொல்லாத ஆசையெல்லாம்
எங்கே நிறைவேறும்?

இன்பத்திற்கெல்லைகள்
என்றெல்லாம் சொல்லாதே
எண்ணத்தின் வறட்சிதானே
எல்லை என்னாளும்

பழகாத ஒவ்வொன்றும்
தவறென்று சொல்கின்றாய்
புரியாத ஒவ்வொன்றும்
பிடிக்காது என்கின்றாய்

சமுதாயம் மக்களுக்காக
என்பதை ஏனோ மறக்கின்றாய்
இன்றைய பழக்கங்கள்
நாளைய வழக்கங்கள்

புறக்கனித்த ஆசையெல்லாம்
புலப்படுத்தும் புலவன் நான்
புறமுதுகு காட்டுவது
போரில் மட்டும் குற்றமில்லை

தானாக தோன்றியதின் இயல்பை
மறுக்கின்ற பிடிவாதம்
மெய்யான தேடலின் இயல்பை
ஏற்பதில் கிடையாதா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com