<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, January 28, 2007
 
# 236 தில் ரூபா
ஒரு இந்துஸ்தானி பாடலை ரசிக்கையில் அதில் ஒரு பரவசமான ஓசை மனதை தடவி விட்டது. அந்த இசைக் கருவியின் பெயர் தில் ரூபா என்று அறிந்ததும் இந்தப் பாடல் உதித்தது மனதில்...

கொள்ளை கொள்ளும் நெஞ்சை என் தில் ரூபா
உள்ளமெங்கும் உன்னால் ஈரம் தில் ரூபா

இந்துஸ்தானி இசையில் கேட்டேன் தில் ரூபா
இன்னும் தா நீ இன்பத்தேனை தில் ரூபா
வடக்கில் மட்டும் வசிப்பது ஏனோ தில் ரூபா?
கொஞ்சம் தமிழகத் தென்றலைத் தழுவிப் பாரேன் தில் ரூபா

கொள்ளை கொள்ளும் நெஞ்சை என் தில் ரூபா
உள்ளமெங்கும் உன்னால் ஈரம் தில் ரூபா

மேற்கில் பிறந்த கருவிகளெல்லாம் தில் ரூபா
தாய்மொழி சேர்ந்திட புகழடைந்ததே தில் ரூபா
திறமை இருந்தால் தெற்கில் வாழ்வு, தெரியுமல்லவா தில் ரூபா
என் தமிழைக் கொஞ்சம் தாலாட்டிடவா தில் ரூபா

கொள்ளை கொள்ளும் நெஞ்சை என் தில் ரூபா
உள்ளமெங்கும் உன்னால் ஈரம் தில் ரூபா

காதலி விரல்போல் உந்தன் கம்பிகள் தில் ரூபா
என் காதுகளைக் கட்டிப்போட்டது தில் ரூபா
இருபது தந்தியில் என்னை மீட்டும் தில் ரூபா
இறைவன் இருப்பிடம் இசையில் காட்டும் தில் ரூபா
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com