<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, March 25, 2009
 
# 276 தூள்
dhooL.com-இன் 1000-மாவது பாடலை முன்னிட்டு எழுதியது.

தூள் எனக்கு
ஆயிரம் கிளைகள் விரித்தாடும்
ஆலமரத்தடி

என் இசைத்தேனை அதிகரித்து
அடைகாத்து வரும்
தேன்கூடு

கை விரல்கள் தொழில் புரிய
காதுகள் மட்டும் திருடித் திங்கும்
திருட்டுக் கனி

என் இசைக் கோவில் அவதாரங்களின்
கொலு வரிசை
என் நினைவுக்கற்களின்
பின்னணி முலாம்

என் ரசனையின் நாட்குறிப்பு
என் பித்தின் புலனாய்வு
என் பக்தியின் பரிகாசம்
என் அறியாமையின் அறிவிப்பு
என் பயணத்தின் மனப்பாடம்
என் திரவியத் திரைகடல்
என் நட்பின் துறைமுகம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com