<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, October 18, 2006
 
# 229 வாழாதவர்
நகைக்கண் பார்வையில் ஆசை நழுவி விழ
நெஞ்சத்தின் இடுக்கில் ஏதோ புகைந்து எழ
நீ தந்தது நெருப்பா?
என் நெருப்பிற்கு திரியா?

புரியா தொடக்கத்தின் புதிராம் தொடர்கதையில்
ஆதரவுக் கொடிகாட்டி ஆமோதித்த அதிர்ச்சியில்
ஆவேசச் சுமையாய் எதிர்பார்ப்பு நெட்டித் தள்ள...
அழைக்காத அலை வந்து ஏந்திப் பிடிக்கையில்
ஆழத்தின் நினைப்பெங்கே உதிக்கப் போகிறது?

இந்த ஆரம்ப நீர்ச்சுழியின் இழுப்பைத்தானே
இழந்தபின்னும் மனம் அசைபோடுகிறது...
இந்த அலையில் மூழ்குவதும் ஒரு பிறப்பு
மிதப்பதும் ஒரு இறப்பு
இதைத் துறந்தவர் மட்டுமே வாழாதவர்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com