# 297 நெஞ்சம் இனிக்கிறது பிரிவு பொய்யாகிப்போகாதோ..!
"நெஞ்சம் இனிக்கிறது பிரிவு பொய்யாகிப்போகாதோ..!" கவிதை தலைப்பில் எழுத ஜெர்மானிய வானொலி நிகழ்ச்சி வாய்ப்பு கொடுக்க, இந்த கவிதையை நான் படித்தேன்.
உறவு, இனிக்கும் நேற்றைக் கடந்து
இன்னல் இன்றில் முறிந்து
தனிமை எதிர்காலம் நோக்கி
வேறு பாதையில் விரைந்து கொண்டிருக்கிறது
நெஞ்சோ நினைவு ஊரில்
தங்கி விட்டது
நினைவின் இன்பம் ஓங்கி இருப்பதால்
நிகழ்வின் உண்மை பிடிபடாமல்
பிரிவை பொய்யாக்கி மறுக்கிறது நெஞ்சம்
சுயநல நெஞ்சே, யோசி
தனிமையில் இன்று தவிக்காமல்
நாளைக்கு எப்படி தயாராவது?
நேற்றின் தவறுகள் தெரிந்தால்தானே
இன்று திருத்தி நாளைத் தேற முடியும்?
உனக்கு இனிக்கும் நினைவுகள்
உன் ஜோடிக் கிளிக்கும் இனியவைதானா?
அல்லது உன் இன்பத்தை நிறைவேற்ற
உன் ஜோடி துன்புற்றதா?
இது புரிந்திருந்தால், நீ பிரிவை ஏற்றிருப்பாய்
உன் இன்பமே உண்மை நீயே உலகம்
என்ற நினைப்பில்
நீ சிறையுண்டு இன்புற்றிருப்பது பரிதாபம்
