<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, July 12, 2012
 
# 289 புண்ணியம்

தன் வீட்டுத் தொலைபேசியை
திரும்பத் திரும்பக்
கூப்பிடும் கிறுக்கன்
நானாகத்தான் இருப்பேன்

உன்னைப் பிறிந்தாலும்
உன் அனுசரணையை
கனிவை
வேண்டிய பொழுதெல்லாம்
ஓயாமல் கேட்க
இனி அது ஒன்றுதானே வழி

தொலைபேசிச் செய்திகளை
சேகரிக்கும் கருவியில்
வரவேற்ப்புரையாக
உன் குரலை பதிவு செய்தது
நான் செய்த புண்ணியம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com