உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, June 03, 2009
# 284 அலைமோதும் நிலைபோதும்
ராக் அன்ட் ரோல் பாடல் வடிவில் எழுதிய இன்னொரு பாடல் இது:
அலைமோதும்
நிலைபோதும்
விடை சொன்னால் நோகாதே
நிலைமாற்றம் ஒன்றேதான்
வாடிக்கை வினையிங்கே
சூராவளிக் காற்றில் நீந்தும் பாய்மரம்தானே காதல்
ஆலமரம் சாய்த்த புயலில் காலூன்றும் புல் காதல்
விளக்கை ஊதி அனைத்திடலாம்
இதயம் அடுப்பாய் எரிகிறதே
நாளை மண்ணில் கால் வைத்தால்
நேற்றின் நிழலே படிகிறதே
சூராவளிக் காற்றில் நீந்தும் பாய்மரம்தானே காதல்
ஆலமரம் சாய்த்த புயலில் காலூன்றும் புல் காதல்
நான் பார்க்கும் கண்ணாடி
என்றைக்கும் பின்னோடி
என் தோற்றம் தெரியவில்லை
உன் மறைவு தெரிகிறது
சூராவளிக் காற்றில் நீந்தும் பாய்மரம்தானே காதல்
ஆலமரம் சாய்த்த புயலில் காலூன்றும் புல் காதல்
அலைமோதும்
நிலைபோதும்
விடை சொன்னால் நோகாதே
நிலைமாற்றம் ஒன்றேதான்
வாடிக்கை வினையிங்கே
