<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 20, 2022
 
# 300 பூ

 கிளைகளில் மிளிர்ந்தால் எழில் 

பூஜைக்கு சென்றால் புனிதம்


காதலர் கைகளில் மோகம் 

கூந்தலில் அமர்ந்தால் கவர்ச்சி


விருந்தாளி கொடுத்தால் பரிசு

சட்டைப் பொத்தானில் கெளரவம்


பக்தன் வழங்கினால் விண்ணப்பம்

மறைந்தவன் அருகே அஞ்சலி


சர்ச்சைகுப்பின் கிடைத்தால் மன்னிப்பு 

மணமாலையில் தொடுத்தால் உறவு 


மயானத்தில் இருந்தால் காணிக்கை

மண்ணில் விழுந்தால் நினைவு 


| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com