உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 20, 2022
# 300 பூ
கிளைகளில் மிளிர்ந்தால் எழில்
பூஜைக்கு சென்றால் புனிதம்
காதலர் கைகளில் மோகம்
கூந்தலில் அமர்ந்தால் கவர்ச்சி
விருந்தாளி கொடுத்தால் பரிசு
சட்டைப் பொத்தானில் கெளரவம்
பக்தன் வழங்கினால் விண்ணப்பம்
மறைந்தவன் அருகே அஞ்சலி
சர்ச்சைகுப்பின் கிடைத்தால் மன்னிப்பு
மணமாலையில் தொடுத்தால் உறவு
மயானத்தில் இருந்தால் காணிக்கை
மண்ணில் விழுந்தால் நினைவு
Comments:
Post a Comment
