<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, August 24, 2006
 
# 222 பாலையிலே சிக்கிய சக்கரவாகம்
என் மகனுக்குப் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களில் கலை அம்சமோ கதை அம்சமோ காணாததின் விளைவு இந்தப் பாடல். என்றாவது ஒரு நல்ல ஓவியனை சந்தித்தால் இதைப் பல மொழிகளில் புத்தகமாக்குவேன்.

ஒரு பாலையிலே சிக்கியது சக்கரவாகம்
அதன் பாதையிலே பார்க்கவில்லை பொழிந்திடும் மேகம்

ஒரு மூன்றுநாள் பயணத்தில் ஏரி கிடைக்குது
ஆனால் நூறடியும் அதன் சிறகு ஏற மறுக்குது
ஏழு நாள் வாழ்ந்திடத்தான் உயிர் இருக்குது
ஆனால் இருள்திரை விழுமுன்னே கதிர் ஒளிக்குது

ஆறு நாளில் ஏரிக்கு செல்ல ஒட்டகம் அழைக்குது
சென்றடைந்த ஏரி பாதி வற்றிக்கிடக்குது
ஏரி பாதி வற்றியதால் மீன்கள் இல்லையாம்
மீன்களில்லா மீனவர்க்கு பசியின் தொல்லையாம்

பசித்திருந்த மீனவர்க்கு பறவை விருந்துதான்
கல்லெறிக்கு பயந்து பறவை மரத்திலேறத்தான்...
வீசப்பட்ட கற்கள் தேன் கூட்டை உடைத்திட,
மீனவரைத் தேனி ஓடி ஓடி விரட்டிட,
தண்ணிதாகம் தீர்க்க வந்து தேனை அருந்துது
பறவை இடையூறின் முதுகிலே இன்பம் காணுது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com