<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, August 05, 2005
 
# 170 அடித்தளம்
சந்திக்கையில் கூறும் வார்த்தை எல்லாம்
சிந்திக்கையில் கூடும் இன்பங்கள்
சொல்ல மறந்த வார்த்தைகளை
சேர்க்கத்தானே நினைவுகள்

சுயசரிதம் மிகைக்கதையே
நினைவுகளும் அதன் உடந்தையே
நடந்திடாத நிகழ்வுக்கெல்லாம்
மெருகு சேர்க்கும் மனமென்ன?
முடிவு காணா சுவடுக்கெல்லாம்
வழிகாட்டும் குணமென்ன?

தீர்வு காணா தொடக்கங்கள்
தொடங்கிடாத உறவுகள்
ஒளி மறைந்த தீபம் போல்
பயனிழந்த உணர்வுகள்

நிறைவேறா ஏக்கம்தான்
பாசத்தின் அடைக்கலம்
நிறைவேற்றும் வேட்கைதான்
வாழ்வின் அடித்தளம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com