உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, July 03, 2008
# 263 உறக்கத்திடம் கடன்
ஜோதா அக்பர் என்ற இந்தி படத்துப் பாடலை, நண்பன் முரளி என் தமிழில் கேட்க விரும்பியதன் விளைவு இது...
உறக்கத்திடம் கடன் வாங்கி வந்தேன்
உன்னிடம் செலவிடும் நேரமதை
உறக்கத்திடம் கடன் வாங்கி வந்தேன்
உன்னிடம் செலவிடும் நேரமதை
பயணத்தில்கூட கண் அயர்ந்தாலும் உன் முகமே
மலையின் இடுப்பை ரயில் அணைக்கயிலும் உன் நினைவே
மேகப்படியில் ஏறியுமே சொர்கம் தொலைவில்தானே
உன் மோகப்பிடியில் சொர்கம் அறிந்தேனே...ஓ ஹோ...
(உறக்கத்திடம்...)
வானுக்கொரு ஏணியென புகை கசியும் வாகனமே
ராமன் கதையில் அனுமான் போலொரு தூதுவனே
நாளுக்கொரு மேணியென நாகரிகம் மாறியுமே
காதலர் பிறிந்து சந்தித்தால்தான் காதலே
பாசத்திலில்லா பரவசமே
நேசத்தில்கூட கிடைக்கலையே
மோகம் அன்பின் மொத்த உருவாய் வாய்த்தது ஏன்?
மேகப்படியில் ஏறியுமே சொர்கம் தொலைவில்தானே
உன் மோகப்பிடியில் சொர்கம் அறிந்தேனே...ஓ ஹோ...
(உறக்கத்திடம்...)
இன்பத்தையும் தோலுறித்து அனுஅனுவாய் படிக்கின்றார்
நம் இச்சைகள்கூட விஞ்ஞானத்தின் வரைபடமாம்
காதலுமே கடவுள் செயல், படைத்தவனின் இணைப்பு செயல்
சொர்கத்திலே நம் பட்டியலாம், நிச்சயமாம்
விஞ்ஞானிகளை துரத்திவிடு
அஞ்ஞானிகளை அனுப்பிவிடு
என் காதலின் ரகசியம் புரியாமல்தான் இருக்கட்டுமே
மேகப்படியில் ஏறியுமே சொர்கம் தொலைவில்தானே
உன் மோகப்பிடியில் சொர்கம் அறிந்தேனே...ஓ ஹோ...
(உறக்கத்திடம்...)
