<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, June 29, 2006
 
# 212 ரத்தக் கோளம்
ஆப்பிரிக்காவிலே எத்தனையோ நாடுகள்
ஒவ்வொரு நாட்டிலும் இரண்டேனும் இனங்கள்
ஒவ்வொரு இனத்திற்கும் இருசாரி தலைவர்கள்
வழிபடாதவர்களுக்கு ஒன்றுக்கிறண்டாய்
எதிரிகள்

போர்கலத்திலே ஏது அடைக்கலம்?
ஆள்பவனும் கொல்கிறான்
எதிர்ப்பவனும் கொல்கிறான்

பெற்றவரிடமிருந்து பறிக்கப்பட்ட பிஞ்சுக் கைகளில்
பரிசாய்க் கிடைத்தது ஆளுயர ஆயுதம்
கொள்கையென்றும் கடவுள் என்றும்
விவரம் தெரியாமல் வீழ்ந்தவர் கோடி
போரிட மறுத்தோ ஏழ்மையினாலோ
இறக்கத்தானே இருக்கிற மீதி?

போர் மேய்ந்த பாதைகள்
புனல் முழுகா தேகங்கள்
பருந்துக்கு விருந்தாகக்
காத்திருக்கும் குடல்கள்

வேண்டாத வரத்திற்கு
பிரசாதம்
உயிர் காற்றிழந்த பைகளாய்
சடலங்கள்
"காயமே இது பொய்யடா"
பட்டவர்கள் சொன்னதில்லை
இந்தப் பொய் மந்திரம்

உடல் குவித்து உச்சி ஏறினால்
கடவுள் கூடத் தென்படுவாரோ?

சிலுவையிடம் தொழுதாலும்
கடன் வாங்கி அழுதாலும்
உயிர் கழுவி உரமாகும் வேளையிது

தர்மத்தின் வாசலை அலங்கரிக்க
ரத்தக் கோளம்தான் கிடைத்ததோ?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, June 27, 2006
 
# 211 காக்கைக் கடி
எதிர்கால நண்மை என்று
எத்தனை படுத்துகிறாய்?
மருந்தளவு சிறிதேனும்
கொடுத்தாயா முன்பணமாய்?
சொர்கமென்ற மாயலோகம்
இருக்குமா சொன்னபடி?

வரவிருக்கும் திரைப்படங்களை
காட்டிடும் விளம்பரப் படம்போல்
சொர்கத்தின் முன்கதை சுருக்கம்
ஓட்டிவிடேன் சில நிமிடம்?

யாரை நம்பி இருப்பது
ஆசைகளை மறுத்தபடி?
கேட்பது நியாயம்தானே
கிடைக்குமா காக்கைக் கடி?

சந்தித்த இண்ணல்கள் அத்தனையும் ஈடாக்கி
நன்நடத்தை பொருமைக்காக இன்னும் கொஞ்சம் மதிப்பெண் கூட்டி
கொடுப்பாயா சொர்கத்தில்?

அனுபவிக்க நினைத்திருக்கும் இன்பங்கள் எத்தனையோ
பாவத்தின் பட்டியலிலும் பாதிக்குமேல் இடம்பெருமே
அனுமதிப்பாயா ஆண்டவா?

பரிசு தெரியாது நம்பியே
பரிட்சை எழுதாதென் நெஞ்சமே

ஆலயம், மடமாட்டம் சொர்கமும் இருந்துவிட்டால்
பொருக்காது என் மனது
இப்பொழுதே சொல்லிவிட்டேன்
அப்படித்தான் இருக்கும் என்றால்
இப்பொழுதே சொல்லிவிடு
செலவிலோ மலிவிலோ
நான் நினைத்த சொர்கத்தை
சஞ்சலமேதுமின்றி
பூமியிலாவது பார்க்கவிடு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com