<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, October 21, 2008
 
# 267 கடன் கூடு
செந்தூர வாகன விளக்கொளி
இருவிழியாய் ஜொலித்து நகரும்
என் முன்னே வெள்ளப்பெருக்காய்
கொந்தலித்த எரிமலையாய்...

கண் முன்னே நீளும் நீளும் சாலைகள்
நெஞ்செங்கும் யாகம்
வேகும் நினைவின் ஓலைகள்

விடுதி விட்டு வீடு செல்லும்
நடுவர்க நாயகர்கள்
வெளியூரில் படையெடுத்து
தரம் குறைந்த தொகுதியில்
தகுதி மறந்து மாளிகை கட்ட

விதி என்னும் சுடலைமாடன்
விறகுக் கிடங்கை விரிவாக்கினான்

ஒளிவு மறைவாய் உண்மை இருக்க
ஒப்பந்தங்கள் கை மாற
கடன் கொடுத்த கடன் காரர்கள்
அரசாங்கத்தில் அடைக்கலம்

பணங்காய் உருண்டு மண்ணில் விழ
குருவிக்கு தலை வலி
மருந்தாய் கிடைத்தது முக்காடு

அனாதைப் பினமாய் எத்தனை வீடுகள்
பொலிவிழந்து பூட்டி நிற்பதோ?

ஆண்மை இழந்த அரசாட்சி
அம்பலமானது அனைவருக்கும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com