<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, February 21, 2016
 
# 293 இறுதிச் சடங்கு

நெஞ்சம் இறுதிக்கோட்டில
இலகுது 
கதிர் உரிச்சு மேகம்
சிதறுது

வெளிச்சத்தின் திசையைப் பாத்து
நிழல் படரும் நியதியடி
நிழல் மேல குத்தம் சொன்னா
அது நீதியாகாது

உன்கிட்ட  குறையிறதெல்லாம்
என்கிட்ட தேடி வந்தெ
என்னை  நீ உள்ளபடியா
நாடியதா நான் நெனைச்சேன்

ஏதிர்பார்ப்பு நம்ம குத்தம்
தண்டனையோ அவன் சித்தம்
ஏமாத்தம் இருவருக்கும்
எங்க போய் நான் சொல்ல?

ஒரு கோனம் மட்டும் பாத்தா
கண்ணகியும் மாதவிதான்
தன்மை விட்டு தோலைப் பாத்தா
பெளர்ணமியும் சூரியன்தான்
பொன்மாலை வானம் கூட 
காமாலை மஞ்சல்தான்

என் ஆசை கடலுக்குள்ள
எத்தனையோ
மூழ்கியிருக்கு
மிதக்கிறபடியா படகொன்னு
இனிமேதான் வர கிடக்கு

தன்மானம் இல்லாம மரியாதை கிடைக்காது
தன்னிறக்கம் கூடிப்போனா
ஊருலகம் சகிக்காது

மெழுகுவத்தி கண்ணீர் கூட 
என் மனசை நோகடிக்கும்
மனம் கொடுத்தவ கண்ணைக் கசக்க
எனக்கெங்க மனமிருக்கும்?

அடைகாத்த ஆசையெல்லாம் 
ஒவ்வொண்ணா விடைபெருது
காதல் கிடங்கில
இறுதிச் சடங்கு
ஒரு வழியா நடைபெறுது

| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com