உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, March 18, 2006
# 190 என் உயிர்மடலின் உன்னதம்
என் மனைவிக்குள்ளே
என் மை எழுத்து
கருவாய் உருவாய்
கண்ணாய் கருத்தாய்
கையசைத்து காலுதைத்து
வளர்ந்து வெளியேறி
வாய்மொழிய...
வார்த்தை உவமைகளுக்கப்பால்
என் எண்ணம் தொலைந்து
இடம் தேடி அலைந்து
பின்பு பேரின்பம் எனும் சிற்றூரில்
சிறகிறக்கி சிலிர்க்க...
என் கைப்பட எழுதிய கவிதைகள்
பல இருந்தும்
என்னரசி அடைகாத்து அன்பளித்த
உயிர்மடலின் உன்னதம்
இயற்கையின் முன்
என் சிந்தையின் சிக்கனத்தை
என் இலக்கியத்தின் எல்லையை
என் இயலின் இயலாமையையே
சித்தரித்தது
