<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, August 04, 2008
 
# 264 மலையின் முகடுகள்
நண்பர் ரெகுராம் தங்கிராலாவின் மெட்டிற்கு எழுதிய பாடலிது.

மலையின் முகடுகள் வளைந்து நெளிந்திளைப்பாறுதே
மலையின் முகடுகள் வளைந்து நெளிந்திளைப்பாறுதே

வசந்த வானை வேலிபோட்டு காக்குதோ?
நனைந்த மேகம் காயும் கொடியாய் ஆகுதோ?

இயற்கையே உன்னை கேட்கத்தானே சிகரம் நோக்கி
ஏறுகின்றேன்

(மலையின்...

----------------

சரணம் 1

கூர்மையான தூரிகைபோல் நீளும் மரமே,
உமது நுனிகள் தேய்த்துத்தானோ வானும் நீலம்
ஆனது?

ஏழ்மையான தேசமெல்லாம் சூடில் வதங்க
மேலைநாடோ தேவை மீறி குளிர்வதென்ன ஞாயமோ?

வானிலே காணும் சம நிலையே
காக்கையும் குருவி கிளியுடனே

பூமி இறங்கி, மனிதர் போலே
இனங்கள் இனத்துடன் பிரிந்து வாழும்


(மலையின்...

---------------------

சரணம் 2:

இயற்கையே உந்தன் இயக்கமே புரிந்திடாது
பலனைத் தேடி அணுகும்போது புலப்படாது

உனக்கென வேதமே உள்ளதோ?
மெய்ப்பொருள் எவ்விடம் காண்பதோ?

விலகினால் தொடருவேன்
தொடர்வதால் விலகுவாய்

தேடலில்லாமல் அதுவும் வாழ்கை ஆகுமா, விடை சொல்?

(மலையின்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com