<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, May 19, 2008
 
# 261 குருடன் வழி
ஆற்றும் வித்தை தெரியாமல்
காலத்திடம் ஒப்படைத்தேன்
காயத்தை
காயம் ஆறவில்லை
நேரம்தான் அழிந்தது

தூங்க மறந்த விழிகளின் பின்
மறைந்திடாத நினைவுகள்
மூடிவைத்த ஏக்கங்களோ
மடை உடைத்த நீர் அலைகள்

ஆக்க சக்தி என்பதெல்லாம்
ஊக்கமுள்ளோர் கைகளில்
மனமுடைத்த காரிகையிடம்தான்
என் மார்க்கமும் உள்ளது

பெளர்ணமி நிலவில் குடி வைத்தாலும்
குருடன் வழி
இருட்டில்தான்

ஆனால் கைத்தடியாய் இருந்த
நம்பிக்கையும் காணாமல் போக
சொர்கவாசலே அழைத்தாலும்
என் சுவடுகளின் கதியே
என் விதி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com