<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, December 07, 2006
 
# 234 மொழி மழலை
அரிகரன் இயற்றி, வடிவமைத்துப், பாடி வெளியிட்ட "காஷ்" என்னும் வடக்கத்திய பாடல் தொகுப்பில் வரும் "அபு கே பரசு" என்னும் மென்மையான பாடலின் தாக்கத்தில், அந்த மெட்டிற்கு தமிழ் வடித்த முயற்சி இது.

கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்
சிறகுகள் முளைத்தேன்
கால்களைப் புதைத்தாய்

தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி

விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
நெருப்பிட்டு எரித்தும்...நினைவிருக்கும்

கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்
தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி...

உடனடி மறுப்பதன் காரணம் வேறென்ன?
வளருமுன் வேரிலே முறிப்பதிது
முழுமனதாக துறந்தது ஏனோ?
மோகத்தில் மூழ்கிடும் பயம் உனக்கு
கிழித்தவர் கோட்டில் நடப்பது கடமை
கிழித்தவர் கோட்டில் நடப்பது கடமை
சுதந்திர உணர்வை தவிர்ப்பவர் அடிமை

விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
நெருப்பிட்டு எரித்தும்...நினைவிருக்கும்

கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்

தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி...

கத்திரித்தாயோ காகிதத் தாளை
ஒத்திகைக்கேங்கும் கவி மடலை
பட்டபின் தெரியும் பரவச உணர்வு
காதலுக்கென்றும் மொழி மழலை
உதிர்த்துவிடும் தன் உணர்ச்சிகளை

யாருமே அறியா இரங்கல் நிகழ்ச்சி
யாருமே அறியா இரங்கல் நிகழ்ச்சி
விருந்தினன் வருந்தினன் ஒருவனடி
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
விரகமெல்லாம் விறகாக்கி அதில் நீ
நெருப்பிட்டு எரித்தும்...நினைவிருக்கும்

கண்களை நிறைத்து
கைகளைப் பறித்தாய்

தீவிர எதிர்ப்பும் ஆர்வமடி...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com