<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, March 26, 2007
 
# 240 புதிய பாதை
பனி என்ன வானின்
மகரந்தப் பொடியோ?

முளைவிடாத மரங்களையும்
மூடி மறைத்து முத்துப் பந்தலாக்கி
விழுந்த பாதையெல்லாம்
வார்த்தை வருமுன்னே கவிதையாகிய
வெள்ளைக் காகிதமாக்கி
உன் கால் பதியப் பதிய
சிதறித் தூவி அடிக்கோடிட்டு
மேகமாகி
உன்னை இனம் காட்டியது
வண்ண நிலவாய்

உன் வருகையிலே
பூமி திரை விலக்கிட...
புதிய பாதை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com