உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, November 15, 2009
# 285 ஆதாம் நீயோ?
நண்பர் பிரவீன் கிரிஷ்னா இயற்றிய மெட்டிற்கும், விரும்பிய சூழலுக்கும் பொருந்திய வரிகள் இவை:
அலைகளிலே
நீராடுவாள் இந்த ஏவாள்
நினைவினிலே
போராடுவாள் உன்னைத் தேடி
கனியுடன் நான் அழைக்கவா
பனியிதழ் தீ பதிக்கவா
தழுவிடவா தடை ஏது
ஆதாம் நீயோ?
அலைகளிலே
நீராடுவாள் இந்த ஏவாள்
நாள் பார்த்து நாளேடு தேயாமலா
தீ வார்த்த பூமிக்கு கார்மேகம் யார்
பார்வை நீ என்று
தேடும் வலைவீசி
ஊமை வேடத்தில்
கொள்ளும் தொலைபேசி
ராதா நான்
இன்று மீராதான்
ஒரு சொல் வேண்டி
செவி மண்றாடும்
விடை சொல்வாயா
விதை மலராக
விடை சொல்வாயா
விதை மலராக
அலைகளிலே
நீராடுவாள் இந்த ஏவாள்
நினைவினிலே
போராடுவாள் உன்னைத் தேடி
கனியுடன் நான் அழைக்கவா
பனியிதழ் தீ பதிக்கவா
தழுவிடவா தடை ஏது
ஆதாம் நீயோ?
