<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, July 26, 2006
 
# 217 பிஞ்சுத் தாமரை
கண்ணதாசன் எழுதாத கவிதையா
நீ எழுதப் போகிறாய்?
பரதமாட நீ என்ன பத்மினியா?
இசை பயில நீ என்ன இசைஞானியா?

ரவி வர்மன் என்ற நினைப்பா?
உனக்கெதுக்கு ஓவியம்?
பாகவதர் என்ற பிரம்மையா?
உன் பாட்டை நிப்பாட்டுவாயா?

என்று என்னைக் கேட்டவரை எல்லாம்
ஒரு குளத்திற்கு அழைத்து
ஒரு பிஞ்சுத் தாமரையை
கிள்ளியெறிந்து மிதித்தேன்

என்னைக் கொடியவனைப் போல் பார்த்துவிட்டு
கூட்டம் விளக்கம் கேட்டது என் செயலுக்கு.

"சுற்றிலும் மலர்ந்து பெரிதாகப் படர்ந்த
பிற தாமரைகளை விடவா
இந்தப் பிஞ்சு மலர் சாதித்துவிடப் போகிறது?"
என்று கேட்டுவிட்டு பிறிந்தேன்
என் கலையைப் பயில
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com