<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, March 01, 2007
 
# 238 வண்ணாரப் பேட்டைக்கு
ஒரு சலவைத் தொழிலாளியின் மோகத்தை அவன் தொழிலை வைத்தே சித்தரிக்கும் எண்ணம்தான் இந்தப் பாடலை எனக்குத் தந்தது.

வண்ணாரப் பேட்டைக்கு வாடி
கண்டாங்கிச் சேலையைச் சூடி
வஞ்சி உந்தன் புடவைக்குள்ளே
கஞ்சி போட துடிக்குது ஆவி

அழுக்குப் போக அலசித் தாரேன்
கறையை நீக்கி கசக்கித் தாரேன்
எறங்கு பாலம் அடியிலேதான்
அடிச்சு அடிச்சு தொவைக்கப்போரேன்
காஞ்ச சீலை கொடியிலேத்தி
கழுதை மேச்சு திரும்பி வாரேன்

வண்ணாரப் பேட்டைக்கு...

காஞ்ச சீலை பரப்பி வெச்சு
பக்குவமா மடிச்சுத் தாரேன்
மடிப்பு ஏதும் சுருங்கிடாம
சூட்டுக்கரியால் இழுத்துத் தாரேன்
பத்திரமா சீலையை நீ
பொட்டிக்குள்ள பூட்டி வெய்யி
மச்சான் வீடு வந்ததுமே
புதுசேலையா போட்டுக்காமி

வண்ணாரப் பேட்டைக்கு...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com