உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, November 03, 2006
# 230 கவர்ந்தற்று
இல்லாத நினைவுகளை அசைபோடுகிறேன்
கானாத கனவுகளின் தடம் தேடுகிறேன்
கிட்டாத உறவுகளின் இதம் நாடுகிறேன்
கிடைக்கின்றதெல்லாம் கொண்டும் ஏன் வாடுகிறேன்?
எட்டாத கணியும் கையில் கசக்கின்ற காய்தானோ?
என் கையில் காயாய் இருந்தும்
பிறர் கண்ணில் கணிதானோ?
அடைந்திட்ட அத்தனையும் சுவை மாறிப்போவது ஏன்?
அடுத்தவன் அடைந்ததில் மட்டும் அருஞ்சுவை கூடுவதேன்?
இழந்தவன் தவிப்பதும் உண்மை
அடைந்தவன் சலிப்பதும் உண்மை
இருந்ததை துறந்தவன் மட்டும்
தவிப்பதோ சலிப்பதோ இல்லை
அடித்தள வெறுமையையே நான்
அடிப்படை ஆக்கிவிட்டால்
அடைந்திடும் அரவம் இல்லை
இழந்திடும் சிரமம் இல்லை
