<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, July 17, 2006
 
# 215 அழகாய் பூசும் மஞ்சள்
இந்தப் பாடல், முரளி சங்கரின் இசையில் வெளிவர இருக்கிறது

M:
அழகாய் பூசும் மஞ்சள்
அரிதாய் தோன்றும் திங்கள்

F:
வானம் ஏந்தும் போதும்
பூமி தேடுகின்றாய்

M:
கதிரின் ஆடை போர்த்தி
யாரை ஏய்க்க வந்தாய்?

F:
சுடரின் பார்வைச் சூட்டை
மறவா காலைப் பூக்கள்

M:
காதல் வெள்ளை நெஞ்சில் கள்ளம் சேர்க்கும்

F:
(அழகாய் பூசும் மஞ்சள்...


M:
மெய்க் காதலின் சன்னதி ஊரான் மலர் சூடுமா?

F:
எல்லோருமே வேற்றுமை தேடினால் தான் ஆகுமா?

M:
கொள்ளாமலே கடலுமே கரை தாண்டினால் தாங்குமா?

F:
எப்போதுமே வேறொரு இல்லாமை மேல் மோகமா?

M:
நாளுக்கொரு மேனியும் பொழுதுக்கொரு போதையும்

F:
இதுபோலொரு வாழ்க்கையில் ஆனந்தமே வாடகை

M:
தேன் கூட்டிலே வாழ்ந்தாலே தேனும் கசந்து போகுமா?

F:
(அழகாய் பூசும் மஞ்சள்...


F:
நேர் பாதையில் போவதில் ஏன் இத்தனை வேதனை?

M:
சூடாத ஓர் பூவையே பாராததே சாதனை

F:
எக் காதலின் ஆர்வமும் நாளாகவே ஆறிடும்

M:
ஆள் மாறவே காதலும் ஆர்வத்திலே கூடிடும்

F:
அக் காதலின் ஆரம்பம் அவ்விதமே தோன்றிடும்

M:
ஆரம்பமே வேண்டுவோர் அன்பென்பதே கண்டிலார்

F:
மேல்வாரியாய் மேய்ந்தாலே தனிமைத் தீயில் அழிகிறார்

M: (அழகாய் பூசும் மஞ்சள்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com