உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, July 17, 2006
# 215 அழகாய் பூசும் மஞ்சள்
இந்தப் பாடல், முரளி சங்கரின் இசையில் வெளிவர இருக்கிறது
M:
அழகாய் பூசும் மஞ்சள்
அரிதாய் தோன்றும் திங்கள்
F:
வானம் ஏந்தும் போதும்
பூமி தேடுகின்றாய்
M:
கதிரின் ஆடை போர்த்தி
யாரை ஏய்க்க வந்தாய்?
F:
சுடரின் பார்வைச் சூட்டை
மறவா காலைப் பூக்கள்
M:
காதல் வெள்ளை நெஞ்சில் கள்ளம் சேர்க்கும்
F:
(அழகாய் பூசும் மஞ்சள்...
M:
மெய்க் காதலின் சன்னதி ஊரான் மலர் சூடுமா?
F:
எல்லோருமே வேற்றுமை தேடினால் தான் ஆகுமா?
M:
கொள்ளாமலே கடலுமே கரை தாண்டினால் தாங்குமா?
F:
எப்போதுமே வேறொரு இல்லாமை மேல் மோகமா?
M:
நாளுக்கொரு மேனியும் பொழுதுக்கொரு போதையும்
F:
இதுபோலொரு வாழ்க்கையில் ஆனந்தமே வாடகை
M:
தேன் கூட்டிலே வாழ்ந்தாலே தேனும் கசந்து போகுமா?
F:
(அழகாய் பூசும் மஞ்சள்...
F:
நேர் பாதையில் போவதில் ஏன் இத்தனை வேதனை?
M:
சூடாத ஓர் பூவையே பாராததே சாதனை
F:
எக் காதலின் ஆர்வமும் நாளாகவே ஆறிடும்
M:
ஆள் மாறவே காதலும் ஆர்வத்திலே கூடிடும்
F:
அக் காதலின் ஆரம்பம் அவ்விதமே தோன்றிடும்
M:
ஆரம்பமே வேண்டுவோர் அன்பென்பதே கண்டிலார்
F:
மேல்வாரியாய் மேய்ந்தாலே தனிமைத் தீயில் அழிகிறார்
M: (அழகாய் பூசும் மஞ்சள்...
