<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, August 12, 2006
 
# 219 பொன்னிற வானம்
மல்லெலு பூசே என்ற தெலுங்குப் பாடலை தமிழில் கேட்க நினைத்ததின் விளைவு இது.

பொன்னிற வானம்
போடுது மோடம்
ஏனிந்த மாறுதல்?
இதயமுமே அந்த வானம் போல அல்லவா?

பொன்னிற வானம்
போடுது மோடம்
ஏனிந்த மாறுதல்?

சரணம் 1
எதிர்வரும் காற்றினிலே
எவருக்கும் மாறும் வழி
மாறிடும் பாதையிலும்
ஊன்றிடு உன் கொடி (2)

சதுரங்க ஆட்டத்திலே
நகர்வது முறைப்படியே
வாழ்கையின் போக்கினிலே
முறையே புரியலே

தோல்வியின் சன்னதியே தந்த வரம் இந்த அனுபவம்

(பொன்னிற வானம்...

சரணம் 2
ஏக்கங்கள் தேங்கிடவே
கனவுகள் பெருகிடுமே
வேண்டிய முயற்சியிலே
ஏக்கங்கள் விலகுமே (2)

வெற்றியின் படிகளை
அடைந்திட பல வழி
அத்தனை வழியிலும்
முயற்சி முதல் படி

வெற்றியை பகிர்ந்திடவே சொந்த பந்தம் வந்து சேருமே

(பொன்னிற வானம்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Thursday, August 10, 2006
 
# 218 நடு சாம வேளையோ?
மதுமாச வேலலோ என்ற மெய்மறக்கச் செய்யும் தெலுங்குப் பாடலை தமிழில் கேட்க நினைத்த நண்பன் முரளி சங்கரின் குரலுக்குத் தருவியது. இது மொழி பெயர்ப்பு அல்ல, என் மனப்பெயர்ப்பு.

நடு சாம வேளையோ?
நதி கோதும் தோணியோ?
நடு சாம வேளையோ?
நதி கோதும் தோணியோ?
துணையோசை மூங்கிலோ? குயில் கூவலோ?
நடு சாம வேளையோ?
நதி கோதும் தோணியோ?

நீடிக்கும் ஏக்கம் இல்லா
பூரிப்பு பூக்களம்மா
கரைக்குள்ளே தேங்கும் நீரும்
குறையின்றி ஓடுதம்மா

ஆலிங்கன மோகப் பொழுதும்
ஆலிங்கன மோகப் பொழுதும்
ஏனோ மனதில் ஏக்கம் மனிதா?

(நடு சாம வேளையோ...

ஆழிக்கும் எல்லை உண்டு
நீருக்கும் ஆவி உண்டு
காலத்தின் ஆணைப்படியே
சோலைக்கும் ஆடை உண்டு

தான் மட்டும் எல்லை இன்றி
தான் மட்டும் எல்லை இன்றி
மனிதன் வாழ எண்ணுகின்றான்

(நடு சாம வேளையோ...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com