<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, June 23, 2008
 
# 262 மை பூசாதே
மை பூசாதே அன்பே
விழி மேகமென்று தன்னை நினைத்து
முகம் நனைக்கக் கூடும்

உதட்டில் சாயம் போடாதே அன்பே
செவ்விதழ் ஏட்டில்
நம் காதல் சரிதத்தின்
கதைச் சுருக்கமே ஒளிந்திருக்கிறது

புன்னகைக்காதே அன்பே
பிறர் நம் மெளன உரையை
மொழி பெயர்க்கக்கூடும்

நகம் வளர்க்காதே அன்பே
நம் ஏகாந்தச் சடங்கின் அடிச்சுவடுகள்
அம்பலமாகிவிடும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com