<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, May 04, 2008
 
# 258 பட்டுப்பூச்சியே
மொட்டுச் செடிகளையும்
உன் முணகலால்
மலர வைக்கும்
பட்டுப்பூச்சியே

பரவசப் பெருமூச்சுடன் பிறர்
உன்னைப் பார்த்திருக்க

பறந்து பறந்து
உன் பஞ்சவர்ணத்தை
வசிய விசிறியாய்
நீ விரித்து மூட

அழகு உன் அந்தஸ்தென
அற்பனுக்கும் தெளிவாகிறது

ஆனால் ஒய்யாரமாய் உயரப் பறந்து
விண்ணளந்த காற்றாடியும்
திசை மறந்து தவித்தோ
நூலினை அறுத்தோ
மரத்தில் சிக்கிய பின்னே
பார்ப்பவர் கண்களில்
தென்படப்போவது
பரிதாபமோ ஏளனமோ
மட்டும்தான்

பட்டுப்பூச்சியே
நீ புழுவாக இருந்தபோதே
உன்னை பழகியவன் நான்

என்னிடத்தில் ஏன் இந்த
ஆடம்பரம்?

காதல் என்ற காற்றாடி
உறவுக் கயிற்றால் உயர்ந்து
விதியெனும் காற்றில்
வளைந்தாடுகிறது

காற்றிழுத்த பக்கமெல்லாம்
கை பிடித்து ஆடிவிட்டு
பெருமையெல்லாம் தனதென
பட்டம் நினைப்பதென்ன விபரீதம்?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com