<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, March 01, 2007
 
# 239 உரிமைச்சீரு
இந்தப் பாடல், நண்பர் மகேஷ் முடிகொன்டாவின் இசையமைப்பில் வெளிவரப் போகிறது.

பருகிப் பாரு
இயற்கைச் சாரு
உலகே உந்தன்
உரிமைச்சீரு

விருந்து தேடு
வருந்திடாது
நினைவுப் பூவு
உதிர்ந்திடாது

வாரம் பூரா உழைச்சுப் போடு
வாரக்கடசி விடுமுறை தேடு
பாடுகளெல்லாம் பாடித் தீர
முன்னேறுமே

வேதனைக்கென்றா வாழ்கைப் பாடு
தேடித் தேடி இன்பம் நாடு
பாதைகளெல்லாம் பதிந்த காலு
முன்னேறுமே

(பருகிப் பாரு...

ஏதுமே
தங்கப் போகிற
பெரும் துன்பங்கள் என்றில்லையே

மீதமே
இன்றி வாழ்ந்திட
என்றென்றும் இன்பங்கள் கையெட்டிலே

பாத்திரம் பார்த்து வேடம் போடு
வாலிபத்தோடு சூடும் சேரு
வாழ்கையிலெல்லாம் வாழ்ந்து பாரு
வருந்தாமலே

ஞானத் தீயில் விறகைப் போல
அனுபவமெல்லாம் புரட்டிப் பாரு
அறிவுரையெல்லாம் அலசித் தீரு
வருந்தாமலே

(பருகிப் பாரு...

நாட்களைக்
கொட்டிப் பிண்ணிடும்
நம் உடலென்னும் வயதோலையே

ஓசையில்
மொழிப் பூக்களை
பிண்ணிக் கோற்கின்ற பாமாலையே

சாத்திரம் பார்த்து செய்தும் கூட
சோதனைக் காலம் போனது ஏது?
ஆசைகளெல்லாம் அடையப் பாரு
வருந்தாமலே

ஏட்டில் தேடி எடுத்தது கொஞ்சம்
அடுத்தவன் சொல்லிக் கொடுத்தது கொஞ்சம்
உனக்கு நீயே தெரிஞ்சது கொஞ்சம்
இது ஞானமே

(பருகிப் பாரு...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
 
# 238 வண்ணாரப் பேட்டைக்கு
ஒரு சலவைத் தொழிலாளியின் மோகத்தை அவன் தொழிலை வைத்தே சித்தரிக்கும் எண்ணம்தான் இந்தப் பாடலை எனக்குத் தந்தது.

வண்ணாரப் பேட்டைக்கு வாடி
கண்டாங்கிச் சேலையைச் சூடி
வஞ்சி உந்தன் புடவைக்குள்ளே
கஞ்சி போட துடிக்குது ஆவி

அழுக்குப் போக அலசித் தாரேன்
கறையை நீக்கி கசக்கித் தாரேன்
எறங்கு பாலம் அடியிலேதான்
அடிச்சு அடிச்சு தொவைக்கப்போரேன்
காஞ்ச சீலை கொடியிலேத்தி
கழுதை மேச்சு திரும்பி வாரேன்

வண்ணாரப் பேட்டைக்கு...

காஞ்ச சீலை பரப்பி வெச்சு
பக்குவமா மடிச்சுத் தாரேன்
மடிப்பு ஏதும் சுருங்கிடாம
சூட்டுக்கரியால் இழுத்துத் தாரேன்
பத்திரமா சீலையை நீ
பொட்டிக்குள்ள பூட்டி வெய்யி
மச்சான் வீடு வந்ததுமே
புதுசேலையா போட்டுக்காமி

வண்ணாரப் பேட்டைக்கு...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com