உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 27, 2007
# 243 ஊசிப்பார்வை
ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே
இருள் வானின் போர்வையிலே
அடைபட்ட இதயத்தை
வைரப் புன்னகையுடனே
சிறு மின்னல் சிறை மீட்க
ரணமான இடமெல்லாம்
ரம்மியமாய் புதுப்பிக்க
ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே
மனமே தாளாக
அதில் இவள் சிதறும் மையாக
பின் வார்த்தை கோர்த்த பா ஆக
மென்மேலும் வளர்கிறாள்
வடிவம் பெருகிறாள்
ஊடுருவி
ஊசிப்பார்வையால் எனை நூற்க்கிறாள்
ஆசை நூலாக நெஞ்சைப் பிண்ணுதே
Comments:
Post a Comment
