உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, October 30, 2008
# 270 மணிக்குயில்
நண்பன் முரளியின் மெட்டிற்கு இயற்றிய பாடலிது.
கிளி கூறிய வார்த்தைகள் நம்பிடவா?
இது என் மனம் ஏற்றிய நாடகமா?
நிலைமாறா காதல் மார்கண்டேயனா?
இளம்காதலின் ஆயுளும் அறைநொடியா?
சிறு ஊடலில் சீர்கெடும் சங்கதியா?
சுமை தாங்காதென்றால் காதல் காதலா?
அனுபல்லவி:
===========
சேராத ஆசைச் சொல்லை வாங்கித் தென்றல் போகுதே
தாங்காத சோகம் கண்டு பூவும் நீரைக் கோர்க்குதே
ஆறாத காயத்தாலே நெஞ்சம் இறுகிடுதே
(கிளி...
சரணம் 1:
==========
மேலோட்டம் மேய்வதன் பேரோ
மெய்க்காதல் இல்லையடி
அனுசரணை உறவின் ஆதாரம்
அதிகாரம் அழிக்குமடி
மனதாற மாடத்தில் கூவும்
மணிக் குயிலைப் போல் நினைவு
மதி கூறும் போதனை யாவும்
உணர்ச்சியிடம் தோற்கிறது
விழியிலவள் தேவதை என்றும்
நெஞ்சிலோ வேகின்றாள்
கவிஞனின் காதல் மடலை
கல்லரையில் ஏன் எரித்தாள் ?
மோகவுரை போதும் என்று
முடிவுரை படிக்கின்றாள்
(கிளி...
சரணம் 2:
===========
காதல் நெஞ்சம் தாங்கும் எதையும் எனும்
சொல் பொய்யாகிறதே
சாதல் வரை சேர்தல் எனும் நினைப்பு
நடக்க மறுக்கிறதே
பாதகியைப் பார்க்காமல் இதயம்
உருகி நனைகிறதே
சீதையினைப் போலே என நினைத்து
தீயில் குளிக்கிறதே
விழியிலவள் தேவதை என்றும்
நெஞ்சிலோ வேகின்றாள்
கவிஞனின் காதல் மடலை
கல்லரையில் ஏன் எரித்தாள் ?
நிருமுத்த இதயமது
நிரயம் ஆனது ஏன் ?
(கிளி...
=======
காதலி என்றோ வேறிடம் சென்றாள்
காதலைத்தானே அவன் வென்றான்
காதலி என்றோ வேறிடம் சென்றாள்
காதலைத்தானே அவன் வென்றான்
