<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, March 01, 2007
 
# 239 உரிமைச்சீரு
இந்தப் பாடல், நண்பர் மகேஷ் முடிகொன்டாவின் இசையமைப்பில் வெளிவரப் போகிறது.

பருகிப் பாரு
இயற்கைச் சாரு
உலகே உந்தன்
உரிமைச்சீரு

விருந்து தேடு
வருந்திடாது
நினைவுப் பூவு
உதிர்ந்திடாது

வாரம் பூரா உழைச்சுப் போடு
வாரக்கடசி விடுமுறை தேடு
பாடுகளெல்லாம் பாடித் தீர
முன்னேறுமே

வேதனைக்கென்றா வாழ்கைப் பாடு
தேடித் தேடி இன்பம் நாடு
பாதைகளெல்லாம் பதிந்த காலு
முன்னேறுமே

(பருகிப் பாரு...

ஏதுமே
தங்கப் போகிற
பெரும் துன்பங்கள் என்றில்லையே

மீதமே
இன்றி வாழ்ந்திட
என்றென்றும் இன்பங்கள் கையெட்டிலே

பாத்திரம் பார்த்து வேடம் போடு
வாலிபத்தோடு சூடும் சேரு
வாழ்கையிலெல்லாம் வாழ்ந்து பாரு
வருந்தாமலே

ஞானத் தீயில் விறகைப் போல
அனுபவமெல்லாம் புரட்டிப் பாரு
அறிவுரையெல்லாம் அலசித் தீரு
வருந்தாமலே

(பருகிப் பாரு...

நாட்களைக்
கொட்டிப் பிண்ணிடும்
நம் உடலென்னும் வயதோலையே

ஓசையில்
மொழிப் பூக்களை
பிண்ணிக் கோற்கின்ற பாமாலையே

சாத்திரம் பார்த்து செய்தும் கூட
சோதனைக் காலம் போனது ஏது?
ஆசைகளெல்லாம் அடையப் பாரு
வருந்தாமலே

ஏட்டில் தேடி எடுத்தது கொஞ்சம்
அடுத்தவன் சொல்லிக் கொடுத்தது கொஞ்சம்
உனக்கு நீயே தெரிஞ்சது கொஞ்சம்
இது ஞானமே

(பருகிப் பாரு...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com