<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, February 08, 2007
 
# 237 உரைந்துவிட்ட ரீங்காரம்
கோப்பையின் விளிம்பில் கிச்சிளித் துண்டாய்
மலையைக் கவ்விய மஞ்சள் மதி...

இரவை எதிர்த்து போராட
தேனீர் கடையில் இளைங்கர் அணி...

இவருக்கு மத்தியில்...
மழை விரட்டிய மகளீர் கூட்டம்
நிழற்குடை அடியில்

அதில் ஒருத்தி
மழையூறீய முத்துப் பந்தலாய்
முடி உலர்த்தி
அழகு திருத்தி நிற்க...

அருவி மடியில் பனிக்கட்டியாய்
நான் விழுந்தேன் எனக்குள் சிதறி

அந்த நொடி, அந்த சூழல்
அந்தத் தேதி, மாதம், காலம்
என்னில் உரைந்துவிட்ட ரீங்காரம்

என் வருங்கால நினைவே
உனைப் பதிவு செய்துவிட்டேன்
பத்திரமாய்

இந்தக் குளத்து நீரை நம்பி
பல தனித்த இரவுகள் தணியும் இனி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com