<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, July 23, 2007
 
# 248 வார்த்தைகள் ஏனடா?
இந்தப் பாடல், நண்பன் முரளியும் நானும் இணைந்து எழுதியது. விரைவில் முரளியின் இசையில் இப்பாடல் வெளிவர இருக்கிறது, அதுவரையில் வார்த்தைகள்தான்...

பெண்:
வார்த்தைகள் ஏனடா?
வன்முறைதானடா
மெளனமே காதலின்
மந்திரம்தானடா

ஆண்:
மெளனமே காத்திட
ஓர்வழி சொல்கிறேன்
உன்னிதழ் கொண்டு வா
ஒற்றியே வைக்கிறேன்

பெண்:
சங்கமிக்கும் நதிக்கடலாய்
கொந்தலிக்கும் எரிமலையாய்

ஆண்:
காதலின் ஜோதி தொட்டால்
காயமல்ல

பெண்:
வார்த்தைகள்...

ஆண்:
சொந்தம்
பல ஆயிரம் தொல்லைகள் தந்தும்
சிறு இன்பங்கள் கோடி
உறவுச் சிறையில்
உதிர்த்து உதிர்த்து போகாதோ?

பெண்:
முந்தும் என் ஆவல் காட்டிட அஞ்சும்
என் நெஞ்சில் நாணம்
அசைவும் இசைவும்
வேறு வேறு ஆகாதோ?

ஆண்:
உருக உருகவே மெழுகும் ஒளிவிடும்
உறவும் விளக்கு வா வா

பெண்:
ஒளிந்த உணர்வுகள் பொழிந்த மழையிலே
உண்மை வெப்பம் விலகும்

ஆண்:
காலை
பரமசுக வேளை
மென் துயிலிலே
உன் அருகிலே
படருவேன் மலையை மூடும் பனியாய்

பெண்:
காலையில் சூரியன்
கன்னமும் கிள்ளுவான்
வேலைகள் உண்டடா
விட்டிடு என்னையே?

ஆண்:
போர்வைக்குள் போர்க்களம்
வேர்வையின் ஊர்வலம்
பார்வையில் கார்வை
சீக்கிரம் சீர் வை

பெண்:
நாற்சுவரும் ஏனோ?
நான்கு குணங்கள் மறைத்திட அனுமதியோ?

ஆண்:
ஆழ் கடலைப் போலே
பெண்ணின் மனமும், அடங்குமோ நான்கினிலே?

பெண்:
உனது கேடயம் எந்தன் தேகமா?
பரிசு போலத்தானா?

ஆண்:
வழியைத் தேடினேன்
உறவுப் பாதையில்
இதயக் கோப்பை உனதே

பெண்:
காதல்
கலை பயில தாகம்
தலை சுழலவே
வலியும் சுகமே
பொன்னென ஆகும் கொல்லன் கலையில்

ஆண்:
சாகசம் ஊமையா
சம்மதம் சைகையா
சேர்த்ததே காதலின்
மந்திரப் பொய்கையா

பெண்:
ஈருடல் சேர்ந்திட
ஓர்வழி சொல்கிறேன்
உன்னிழல் எல்லையில்
என்னிழல் சேர்க்கிறேன்

ஆண்:
நஞ்சினிக்க வைக்கிறதே
மோனத்திலே பொய்க்குமுறல்

பெண்:
மோகமும் நோகவைக்கும்
தீஞ்சுவையோ

ஆண்:
சாகசம் ஊமையா...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com