<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 26, 2006
 
# 197 வெட்டு மின்னல்
வாசத் தெளிக்க வந்த வண்ண நிலவே
நாக்கூசி நிப்பதென்ன நெஞ்சுக்குள்ள?
பொடி வெச்சு புள்ளியிட்ட கோலத்தில
வெட்டு மின்னல் பட்ட மரமானேன் புள்ள

கொட்டப் போகுது திராட்சைக் கொடி
எட்டிப் பாக்குது கள்ள நரி

தொட்டாக் கரைஞ்சுவிடும் அச்சு வெள்ளமே
உன்னை பத்தாப்பு படிக்கையில பாத்தபடிதான்
கண்ணு கொட்டாம ஏக்கத்தில பாத்தபடிதான்
இந்தக் கடங்காரன் நெஞ்சுக்குள்ள இன்னுமிருக்க

மச்சக் காளை இவன் மனசு வெச்சான்
மிச்சம் மீதி என்ன கணக்கு வெச்சான்

வத்தாக் கெணரு நெஞ்சு வாரி இறைக்கும்
முத்தாரம் மூக்குத்தி தங்கவளவி
பத்தாட்டி இன்னும் கொஞ்சம் பக்கம் வந்திரு
பக்குவமா புத்தாடை சேத்து செய்யிறேன்

சிந்தப் போகுது பழச்சாரு
சித்தம் தீரத்தான் குடிப்பாரு

திருவிழா கூட்டத்தில தத்தளிக்கிறேன்
ஊரு சனம் விட்டு நான் ஒண்டி நிக்கிறேன்
கருமாரியம்மங் கோயில் வாசலில
கட்டுகட்டா கையில் மல்லி மொட்டு விடுது...

காலங் கடந்தும் உன்னக் காணலியே?
காலை விடியுமுன்ன வாசப் பக்கம் வந்து பாக்கவா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, April 25, 2006
 
# 196 ஏகாந்தம்
மாலைத் தூறலில் மஞ்சள் நீராடி
சோலை வசந்தத்தில் சிறகுலர்த்தி
மதிற்ச்சுவரில் தத்தி நடந்து
மாடத்தில் குளிர்காயும் வெண்புறாவே...

உன் அன்றாட வாழ்வின் ஏகாந்தம்
என் வாழ்வின் உச்சத்தில் கூட இல்லையே?
...யோசித்தேன்

உடைந்திருக்கும் கிளைகளைக்கூட நீ
ஒருங்கினைத்து கூடு செய்தாய்
இயற்கையிடம் உனக்கிருக்கும் உறவே உயர்வு
உன்னையும் குறிபார்க்கும் உள்ளத்தார் நாங்கள்
ஏகாந்தம் எங்களை விட்டு
எட்டியே இருக்கட்டும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com