உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, March 21, 2006
# 191 நெத்தியில ரேகை
சேவலுக்கு சேதி சொல்ல சூரியன் வந்தாச்சு
வாசலுக்கு கோலம் போட்டு பூவும் வெச்சாச்சு
நெத்தியில ரேகை வெச்ச நெனப்பு தீரல
சுத்தஞ் சொன்ன புத்திமதி வெத்துக் கையில
கயித்துக்் கட்டில் கோடு இன்னும் முதுகு ஏறல
கடன்பட்ட நெஞ்சுக்குள்ள காயம் ஆறல
கூலிப் பணம் கெடைச்சதில கஞ்சி வேகல
வானம் பூமி ரெண்டுமே ஈரம் காணல
மரக்கெளைக்கு மஞ்சக் கயிறு பூத்து மாலல
வயசுப் பொண்ணு கழுத்துலதான் ஒன்னும் சேரல
கோயில் குளம் போன மக்கள் கண்ணு காயல
நேந்துகிட்ட அம்மனுக்கு நேரம் போதல
