உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, June 27, 2007
# 247 உண்மை நீதி
சதியால் பிறிந்த காதலர்களுக்கு மறுபிறவியில் நீதி கிடைப்பதாகக் கதை. இந்தக் கதைக்கு ஒரு பாடல் எழுதச்சொல்லி ஒரு விண்ணப்பம் எனக்கு கிடைக்க, இந்தப் பாடல் உங்களுக்கு கிடைக்கிறது...
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
காதல் ஜோதி
பிறவிகளால் சிறைபடாது
உண்மை நீதி
கனப்பொழுதில் மானிடரை
காலம் பறித்திடலாம்
கள்ளர் போடும் நாடகத்தில்
உண்மை கொஞ்சம் மறைந்திடலாம்
சங்கமித்த உறவிலே சந்தேகம் பாதகம்
சந்தர்ப்பவாதிகளின் ஆயுதம்
சத்தியத்தின் பார்வையிலே
சூழ்ச்சித் திரை விலக்கி...
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
காதல் ஜோதி
பிறவிகளால் சிறைபடாது
உண்மை நீதி
ராமர்களை அடையாத போதிலும்
தீக்குளித்த சீதைகள் எத்தனையோ
சோதித்தால் சோடைதானோ சொர்கமும்?
மெய்க்காதல் பொய்க்காது எப்போதும்...
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
காதல் ஜோதி
பிறவிகளால் சிறைபடாது உண்மை நீதி
