<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, March 31, 2007
 
# 241 தத்தகாரம்
ஓடையோரக் குயிலுக்கெல்லாம்
மேடையேறத் தெரியாது
கேக்க நெனைச்ச நேரம் குயிலை
பாட வைக்க முடியாது
பாடும்போது கேக்க நெனைச்சா
ஓடைப்பக்கம் குடியேறு

தத்தகாரம் தேவையில்லை இது
தாந்தோன்றிக் குயில் பாட்டு
கத்துக்கொடுக்க நெனைச்சாக்கூட
கட்டுப்பாட்டை மதிக்காது

இதுபோல எத்தனையோ
இயற்கையில ஒளிஞ்சிருக்கு
தனக்குன்னு ஒரு இயக்கம்
படைப்பிலெல்லாம் இருந்திருக்கு
தன் போக்கில உலகத் திருப்பும்
மனுசனுக்கெது புரிஞ்சிருக்கு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com