<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 11, 2007
 
# 242 சாபமே
ஒரு நண்பரின் வேண்டுகோலுக்கிணங்கி ரியானா என்ற ஆங்கிலப் பாடகியின் ஒரு பிரபலமான பாடலை தமிழில் (மொழி பெயர்க்காமல்) எழுதியதன் விளைவு இது.

சொந்தக் கதைதான்
சொல்லத் துடித்தேன்
வார்த்தை விட்டுப் போனதடி
நெஞ்சில் ஒருத்தி
உன்னை நிறைத்து
தன்னையே தேடும் விதி

தேவை அவன்தான்
நெஞ்சம் சொன்னது
வெட்ட வெட்ட வேர் கொண்டது
சென்ற திசையே
சூன்யமானது
தென்றல் இங்கு தீ வார்க்குது

சொல்லிவிடு நீதான் தங்கத் தேர்தான்
தவிக்கின்ற முல்லைக்கினி
முறித்து நீ போனால் நான் யாரோ இனி
உண்மை சொல்லி விடு

என்னை வென்ற கண்கள் நீதானா?
என்னைத் தொட்ட கைகள் நீதானா?
என்னைச் சுடும் வார்த்தை நிஜமா?
உண்மையென்றால் உன்னைப் பொய் என்பேன்
நன்றிக்கடன் கேட்டு கிடைக்காது
ஞாயங்களைத் தேடி முடியாது
காதல் ஞானியாக்கும் சாபமே

வாடைக் காற்றிலே
ஓடைப் பேச்சிலே
நெஞ்சமோ ஆறவில்லையே
நன்றி போகட்டும்
ஞாயம் போகட்டும்
காதல் இங்கு பொய்க்கவில்லையே
என்னில் இருந்த உணர்வுண்மையே

ஈரமணல் பூக்குமே
மீண்டும் விரைவே
ஓர் விபத்துக்குப் போய்
முழு வாழ்வின் இழப்பா?

சொல்லிவிடு நீதான் தங்கத் தேர்தான்
தவிக்கின்ற முல்லைக்கினி
முறித்து நீ போனால் நான் யாரோ இனி
உண்மை சொல்லி விடு

என்னை வென்ற கண்கள் நீதானா?
என்னைத் தொட்ட கைகள் நீதானா?
என்னைச் சுடும் வார்த்தை நிஜமா?
உண்மையென்றால் உன்னைப் பொய் என்பேன்
நன்றிக்கடன் கேட்டு கிடைக்காது
ஞாயங்களைத் தேடி முடியாது
காதல் ஞானியாக்கும் சாபமே

நான் வேறாக
நீ மறந்த பேராக
கதை முடியுதே
திருத்திவிடு

என்னை விட்டு நீங்கிப் போகாதே
போகாதே

என்னை வென்ற கண்கள் நீதானா?
என்னைத் தொட்ட கைகள் நீதானா?
என்னைச் சுடும் வார்த்தை நிஜமா?
உண்மையென்றால் உன்னைப் பொய் என்பேன்
நன்றிக்கடன் கேட்டு கிடைக்காது
ஞாயங்களைத் தேடி முடியாது
காதல் ஞானியாக்கும் சாபமே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com