<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, February 22, 2008
 
# 254 தொடர்கதை
என் கடந்த காலக் கனவுகளின்
நிரந்தர நாயகியே
இறந்த காலம் என்ற சொல்லை
இன்று முழுதாய் உணருகிறேன்

எத்தனை பொழுதுகள் உன்னுடன் சாய்ந்தன
உணர்ந்திருப்பாயோ பிறிந்தவண்ணம்?
எத்தனை நிலவுகள் விடியலில் மூழ்கின
நம்மிருவரை பார்த்தவண்ணம்!

உறவின் பழைய பக்கங்களை
விடாமல் படித்து வருகிறேன்
விரிசலின் முதல் குறி
அங்கேதானே இருக்கிறது!
உறவு என்றால் தொடர்கதையென்று
இத்தனைக் காலம் நினைத்துவிட்டேன்
இதயம் கொண்ட உறவிற்கும் இறுதிப்பக்கம் இருக்கிறதா?

இழந்தவனுக்கும் இறந்தவனுக்கும்
ஓரெழுத்தே வேற்றுமை
இறந்தவன் பாடு முடிகிறது
இழந்தவன் பாடு தொடர்கிறது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com