<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, May 14, 2009
 
# 281 படைப்பு
ஒரு கலைஞனின் படைப்பை
பிரசவம் என்று கூறக்
கேட்டிருக்கிறேன்

ஆனால் மனித பிரசவத்தில்
வெளியீட்டில்தான் வேதனையின்
உச்சம்.

கலைப்பிரசவத்திலோ சிந்தனை
உருவெடுக்கும் வேளியீடுதான்
பூரிப்பின் உச்சம்.

பிறர் மதிப்பீட்டில்தான்
தன் படைப்பின் பெருமை
ஒரு தாய்க்கு பெருமிதம் அளிக்கிறது.

தன் படைப்பை வெளியிட்டபின்
அதன் வரவேற்ப்பு
கலைஞனுக்கு ஒரு
நினைவு நாளைப்போல்;
படைத்து முடித்ததும்
அடுத்த படைப்பின் பிரசவத்தில்
ஆழ்ந்துவிடுகிறான்.

ஒரு குழந்தையின் வளர்ப்பில்தான்
தாயின் வெற்றி இருக்கிறது.

கலைஞனின் வெற்றியோ
அவன் சிந்தனையின் கரு
படைப்பாக வெளியேறும் பொழுதே
முழுமையடைந்து விடுகிறது

ஆரவாரம், அங்கலாய்ப்பு
ஆதரவு, எதிர்ப்பு
இதையெல்லாம் தனக்குள்ளே
தாண்டவமாடித் தன் படைப்பிலேயே
புரிந்துகொள்கிறான்
கலைஞன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com