உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 13, 2006
# 193 நிழலின் பிடியில்
உல்லாசம் தழுவிப்போவதேனோ?
சிக்காமல் நழுவிப்போவதேனோ?
பின்னாலே தடயம் தேடத்தேட
கண்காணா தொலைவில் ஓடிப்போகும்
நிராசைத் தீயில் வேகும் இந்தத்தேடல் வேட்கைதான்
மனித வாழ்கைப்பாடோ?
இன்பங்கள் தற்காலிகம்தானோ?
நிழலின் பிடியில்தான் ஒளிவடிவோ?
உறக்கம் கலையத்தான் உயிர் பிறிவோ?
மூச்சுக் காற்றையே வாங்கி விடுகிறோம்
நினைவை மட்டும் ஏன் கட்டி அழுகிறோம்?
சுகத்தைத் தேடியே மனித யாத்திரை
சுவைத்துப் பார்த்திட வகைக்கோர் மாத்திரை
இடையில் வந்ததை உறுதி என்கிறோம்
இறுதிப்போரைத்தான் புறக்கணிக்கிறோம்
இருளில் தொலைத்ததை ஒளியில் தேடினால்
தொலைந்துபோனது வெளிச்சம் ஆகுமா?
வெளிச்சம் என்பதே தொலைந்துபோகுமா?
அகக்கண் பார்வையில் உதிக்கும் காட்சிகள்
முதற்கன் பார்த்தபின் முகங்கள் தேவையா?
