<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, November 21, 2006
 
# 233 சுந்தரம்
"அம்ருதவர்ஷினி" என்ற கன்னடப் படத்தில் வரும் "ஈ சுந்தர" என்ற தேவா இசையில், எஸ்.பீ.பி.யும் சித்ராவும் பாடிய அற்புதமான பாடலை மய்யமாகக் கொண்டு இந்தப் பாடலை இயற்றினேன்.

உன் சுந்தர உருவத்திலும்
நில் என்கிற பருவத்திலும்
தள்ளாடவும் திண்டாடவுமே...
உன் நம்பக இதயம் அது
கேட்கின்றதோர் சிறு சுகமும்
உடனடி தந்திடவே...

எடுத்தேனோ பிறவி
பருந்தாகும் குருவி
உன்னிரு கைகளும் தொட்டு வருடும் நொடி

உன் சுந்தர...

கனா...கனா
நிலா...நிலா
துயில் எழுந்துமே தோன்றிடுதே
தராததா
பெறாததா
சொற்கள் சினுங்கிடும் எல்லையிலே

ஒளிவேன் உள்ளே இன்பக் கூடத்திலே
வெளி உலகதன் ஈர்ப்பு இன்றி
அறிவேன் சொன்னால் அறிவுறைகளில்லா அன்புப் பாடங்கள்
புகட்ட வந்தால்

வெளி உலகதன் அறியாமையில் நான் வெறும் இயந்திரம்
புவி மறந்திடும் அருகாமையில் நீ சொர்க மந்திரம்

உன் சுந்தர உருவத்திலும்
நில் என்கிற பருவத்திலும்
தள்ளாடவும் திண்டாடவுமே
உன் நம்பக இதயம் அது
கேட்கின்றதோர் சிறு சுகமும்
உடனடி தந்திடவே...

உதிக்காதோ புலமை
மழைபோலே உவமை
சந்தனக் காட்டிலே சுடர் சூடும் தென்றல்

உன் சுந்தரம்!
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com